Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இஸ்லாம் கற்றுத் தரும் ‘சுயநலம்’ !

Posted on September 28, 2012 by admin

இஸ்லாம் கற்றுத் தரும் ‘சுயநலம்’!

    ஃபாத்திமாஹ் முஸ்லீமாஹ்       

[ நாம் இறைவனிடம் ஒரு விஷயம் வேண்டுவது, மற்றவர்களிடம் கேட்பது போலல்ல. ஏனெனில் ,இறைவனின் அருட்கொடைகள் எவ்வளவுதான் அள்ளித் தந்தாலும் குறையாதவை. கொடுப்பதற்கு அவன் தயாராக இருக்கிறான். நாம்தான் கஞ்சர்களாக இருக்கிறோம்.

 

இதனை பலர் புரிந்து கொள்ளாமல் “சுயநலமற்ற மேதாவிகளாக” இருப்பதாகக் கருதிக் கொண்டு “நான் எனக்காக அல்லாஹ்விடம் எதையுமே கேட்பதில்லை. பிறருக்காகவும், என் குடும்பத்துகாகவும் மட்டுமே பிரார்த்திகின்றேன்” என்று சொல்கிறார்கள். இது உண்மையா?? நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்காமல் ஒரு கணமேனும் வாழ்ந்திட முடியுமா? நிச்சயம் முடியாது. இவ்வாறு கூறுபவர்கள் போலிகளே.]

 

 

நாம் தனிமனிதராக தனிக் காட்டில் பிறந்து தன்னந்தனியாக வாழ்ந்து மரணிப்போமானால் அனேகமாக சொர்க்கம் செல்வது இலகுவாக இருந்திருக்க கூடும் .ஏனெனில், பாவம் செய்வதுக்குரிய சந்தர்ப்பங்கள் அப்பொழுது குறைவாகவே இருந்திருக்கக் கூடும். ஆனால், இறைவன் அப்படி நம்மை விடவில்லை. மாறாக உலகம், பொருள், மண், மக்கள் என்னும் பெரும் பெரும் காரணிகளை ஏற்படுத்தி நம்மை சோதனையிட்டுக் கொண்டே இருக்கிறான், பிறப்பிலிருந்து, இறப்பு வரை. திருமறையில் வரும் வசனத்தைப் பாருங்கள்:

“ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர்; எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் – நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன் உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் – அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது.” (அல்குர்ஆன் 64:14-15)

இறைவன் நம்மை சோதனைக்குட்படுத்தாமல் சொர்க்கம் எனும் மாபெரும் பரிசினை தந்துவிடப்போவதில்லை. நமது சோதனை நம்மைச் சூந்துள்ள சமுதாயத்தில்தான் உள்ளது. இதனை உணராத நாம் அதன் பிடியில் எளிதில் சிக்கிக் கொண்டு, சோதனைகளால் தோல்வியடைந்து கொண்டிருக்கிறோம். இதில் பெரிய கொடுமை என்னவென்றால் இவ்வாறு தோல்வியடைந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட நாம் விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறோம்..

அனேகமாக நாம் அனைவரும் பல சந்தர்ப்பங்களில் அடுத்தவர்களுக்காகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நமது குடும்பத்துக்காக, குழந்தைகளுக்காக, பெற்றோருக்காக, சமுதாயத்துக்காக, ஏன் எதிரிகளுக்காவும் கூட நேரத்தையும் காலத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இது போன்று அடுத்தவருக்காக வாழும் பொழுது தவறிழைக்காமல் இருக்க, வழி தவறாமல் இருக்க இஸ்லாம் ஒருவித சுயநலத்தை வலியுறுத்தியிருகிறது. என்னது இஸ்லாம் சுயநலமா இருக்க சொல்லுதான்னு அதிர்ச்சி அடையறீங்களா?? ஆமாம், இஸ்லாம் சில விஷயங்களில் மிகுந்த சுய நலத்துடன் இருக்கச் சொல்கிறது.

இறைவனிடம் பிராத்தனை செய்யும் பொழுது முதலில் நமக்காக கேட்டு, அதன் பின்னரே பிறருக்கு கேட்க சொல்கிறது இஸ்லாம். குரான் மற்றும் நபி ஸல் அவர்கள் கற்றுத்தந்த பிராத்தனைகள் அனைத்தும் நமக்காகவே முதலில் கேட்க சொல்கின்றன.

“இந்த வசனங்களை கவனிச்சீங்களா? முதலில் தனக்கு கேட்ட பின் தான் மற்றவர்களுக்கு கேட்கப்பட்டிருக்கு இல்லையா? பொதுவாக சுயனலமற்றவர்களாக, எப்போதும் பிறர் நலம் கருதியே வாழ வேண்டும் எனும் கோட்பாட்டை கேட்டு வளர்ந்தவர்கள் நாம்.

அவ்வாறு இருக்கையில் இஸ்லாம் தனக்காக முதலில் கேட்க சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம். அவ்வாறு நினைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இது பற்றி சற்று சிந்தித்தால், இதில் ஆழமான கருத்துக்கள் பொதிந்திருப்பதைக் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

நாம் இறைவனிடம் ஒரு விஷயம் வேண்டுவது, மற்றவர்களிடம் கேட்பது போலல்ல. ஏனெனில் ,இறைவனின் அருட்கொடைகள் எவ்வளவுதான் அள்ளித் தந்தாலும் குறையாதவை. கொடுப்பதற்கு அவன் தயாராக இருக்கிறான். நாம்தான் கஞ்சர்களாக இருக்கிறோம்.

இதனை பலர் புரிந்து கொள்ளாமல் “சுயநலமற்ற மேதாவிகளாக” இருப்பதாகக் கருதிக் கொண்டு “நான் எனக்காக அல்லாஹ்விடம் எதையுமே கேட்பதில்லை. பிறருக்காகவும், என் குடும்பத்துகாகவும் மட்டுமே பிரார்த்திகின்றேன்” என்று சொல்கிறார்கள். இது உண்மையா?? நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்காமல் ஒரு கணமேனும் வாழ்ந்திட முடியுமா? நிச்சயம் முடியாது. இவ்வாறு கூறுபவர்கள் போலிகளே.

இறைவன் ஏற்படுத்தியிருக்கின்ற சுயநலம் நமக்கு அவசியமானது. ஆனால் மற்றவர்களிடம் இருந்து பிடுங்கிச் சுரண்டும் சுயநலமல்ல இது .மாறாக ,நம்மை இவ்வுலகம் மற்றும் மறுவுலகம் இரண்டிலுமே வெற்றி பெறச் செய்யும், மற்றவர்களையும் நம்மோடு சுவனத்துக்கு இழுத்துச் செல்லும் சுயநலம்.

சுயநலமா இருங்கன்னு சொல்லியாச்சு. அப்ப பிறர் நலம் பத்தி யோசிக்காமல் இருந்தால் அது தப்பு இல்லையா? அது ஒரு மோசமான முன்னுதாரணம் இல்லையா என்ற கேள்வி எழாமல் இருக்கப்போவதில்லை.

ஒருபுறம் நாம் சுயநலத்தை இஸ்லாமிய ரீதியாக நோக்கும் அதேவேளையில், இதன் மறுபுறமான “பிறர்நலம் கருதுவோம்” என்று கூறும் மனிதன் தாமும் பாவத்தில் விழுந்து அடுத்தவரையும் பாவம் செய்ய தூண்டுகிறான். மனிதன் எவ்வாறெல்லாம் சம்பாதிக்க முடியுமோ அந்தளவுக்கு தன்னை மாய்த்துக்கொண்டு தனக்காகவும் ,மற்றவர்களுக்காகவும் பாடுபடுகிறான் என்பதை அன்றாடம் நாம் காண்கிறோம். மற்றவர்களுக்காக அதிகமாய் சம்பாதிக்க வேண்டி அவன் எத்தகைய குறுக்கு வழிகளில் செல்கிறான்? இதில் எத்தனையோ பேர் மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள்? பொய், களவு, மோசடி, வட்டி, இவை எல்லாம் எதற்காக? நாம் எந்தளவு சம்பாதித்தாலும் ஒருவேளை வயிற்றுக்குதான். ஒருசில ஆடைகளைத்தான் அணியப் போகிறோம்.

நாம் யாராக இருந்தாலும், கோடி கோடியாக சம்பாதித்தாலும் மனிதனாகிய நமக்கு அடிப்படை தேவைகள் ஒன்றுதான். நாம் இவ்வுலகில் வாழப்போவதும் கொஞ்ச காலம் தான்.. நாம் சேர்க்கும் செல்வத்தை வேற யாரோ அனுபவிக்க போறாங்க.. அதற்காக நாம் தப்பான வழியில் அதை சேர்த்து வைத்து பாவம் செய்ய வேணுமா? நிச்சயம் தேவை இல்லை.

நாம் ஹலாலான(நேர்மையான) முறையில் சம்பாதித்து அன்றாட தேவைகள் போக மீதமானதை நமக்காக சேர்க்க வேண்டும். நம்மால் முடிந்தளவுக்கு நேர்மையாக, உண்மையாக, நீதியுடன் நடந்து செல்வம் ஈட்ட வேண்டும் .இப்படி செய்வது மற்றவர்களுக்கும் நன்மை செய்தது போல் அமையும். நம்மையும் சொர்க்கத்துக்கு இழுத்துச்செல்லும் இல்லையா?.

நாம் இவ்விடத்தில் இன்னுமொன்றை மறந்து விடுகின்றோம்.

மற்றவர்களின் தேவை இல்லாத விடயங்களில் தலையிட்டு அவர்களின் குற்றம் குறைகளை துருவித் துருவி ஆராய்ந்து…..

புறம் சொல்லி நம் நேரத்தை செலவு செய்கிறோம். கேட்டால் சமுதாய நன்மை என சொல்கிறோம். இதில் என்ன இலாபம் நமக்கு? மற்றவர்கள்களின் குறைகளை பற்றியே புறம்பேசிக்கொண்டிருப்பதால் என்ன பயன் வந்துவிட போகிறதுஎன, கொஞ்சம் சுயநலமாக சிந்தித்தால் புறம் பேசாமல் இருப்பது நமக்கு நன்மை என்பது எளிதில் புரியும். மாறாக அதை தொடர்ந்தால் மறுமையில் மற்றவர்களுடைய தீமைகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு நம்மீது சுமத்தப்படும் என்பதை நாம் அறியாமல் இருக்கிறோமா? அநீதி இளைக்கப்பட்டவன் அல்லாஹ்விடம் முறையிட்டால், நம்மை நோக்கி குற்றம் சாட்டினால், படைத்தவனிடம் நீதி கேட்டால்??!! என்ன செய்வோம் நாம்?

எம்மை வியப்பில் ஆழ்த்தும். அல்லாஹ்வின் மேம்பாட்டை உணரவைத்து அவனுக்கு சிரம் தாழ்த்த வைக்கும். அல்லாஹ் அக்பர் – அவன் மிகப் பெரியவன்.

இஸ்லாம் சொல்லி கொடுக்கும் சுயநலத்தில் பிறர் நலமும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலமும் காண முடிகிறது இல்லையா? ஆகவே இஸ்லாம் கூறியபடி சுயநலனோடு சிந்தித்து பிறர் நலனையும், சமுதாய நலனையும் பேணுவோம்.

நன்றி: இஸ்லாமியப் பெண்மணி

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

21 + = 29

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb