Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இறைவன் எனும் படைப்பாளி!

Posted on September 27, 2012 by admin

         இறைவன் எனும் படைப்பாளி!         

 

இறைவன் என்னும் படைப்பாளி, என்றும்

இனியவற்றையே உலகில் படைத்திடுவான்.

ஐந்தறிவுள்ள உயிர்கள் அனைத்தும், அவன்

தந்த உடலை நிறைவுடன் ஏற்றுக் கொள்ளும்.

 

ஆறறிவு பெற்ற மனிதர்கள் மட்டும் தான்,

அவன் படைப்பிலே குறை காண்கின்றனர் .

உருவை மாற்றி அமைக்கும் முயற்சிகளில், தம்

பொருளையும் மன நிறைவையும், இழக்கின்றனர்!

 

நல்ல உருவமும், நல்ல உறுப்புகளும் பெற்று,

நன்றாகவே காட்சி அளித்திட்ட போதிலும்;

நானிலத்தில் தனித் தன்மையுடன் திகழ,

நான்கு திசைகளில் ஓடி ஓடித் தேடிடுவார்!

 

முகத்தின் அமைப்பையே மாற்றிவிட்டு,

அகத்தில் பெரு மகிழ்ச்சி கொள்ளலாமா?

தொங்கும் தோலை இறுக்கித் தைத்து,

தோற்றத்தைப் பொலிவுறச் செய்யலாமா?

 

கூரிய மூக்கைச் சிறியதாய் ஆக்கலாமா?

பெரியதாகச் சிறிய கண்களை ஆக்கலாமா?

மற்ற பல உறுப்புக்களையும் தம் உடலில்

மாற்றி மாற்றி அமைத்துக் கொள்ளலாமா?

 

பாலைவனத் தலையிலும் நன்றாகப்

பயிர் பண்ணலாமா அடர்ந்த கூந்தலை?

பணம் படுத்தும் பாடுகளே இவைகள்!

பண்பு மேம்படப் படும் பாடுகள் அல்ல!

 

தம்மிடம் இல்லாதவையே அழகியவை என

நம்பிடும் இவர்கள் செல்வமும் விரயமே!

இப்படியே எண்ணங்கள் இருக்கும் போது,

எப்படியும் மன நிறைவும் வருவதில்லையே!

 

இறைவனை விடவும் சிறியவர்கள் நாம்;

இறையினும் சிறந்த படைப்பாளிகளா?

இந்த உண்மையை நன்கு உணர்ந்தால்,

இந்த வாழ்க்கை மிக இனிமையாகுமே!

 

வாழ்க வளமுடன்,

விசாலாக்ஷி ரமணி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb