Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஜும்ஆ பாங்கிற்கு பிறகு மாற்று மதத்தவரை வைத்து வியாபாரம் செய்யலாமா?

Posted on June 1, 2012 by admin

  ஜும்ஆ பாங்கிற்கு பிறகு மாற்று மதத்தவரை வைத்து வியாபாரம் செய்யலாமா? 

 கேள்வி :  “நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்!நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.” (அல்குர்ஆன் 62:9) எனும் வசனத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது; ஜும்ஆ தொழுகைக்காக அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டு செல்லுங்கள். அல்லாஹ் அந்த நேரத்தில் வியாபாரம் செய்வதை தடுத்துள்ளான்.

நான் வோயாபாரம் செய்கிறேன். வெள்ளிக் கிழமைகளில் சீக்கிரமே பள்ளிக்கு செல்பவன் நான். ஆனால் எனது கடையை அடைப்பது இல்லை. நான் வியாபாரத்தை விட்டு விட்டாலும் எனது மாற்று மத தொழிலாளி(staff) கடையில் தான் இருப்பார். அப்போது வியாபாரமும் நடக்கும் (வியாபாரம் செய்வது எனது நிய்யத் இல்லை என்றாலும் கடை திறந்த இருப்பதால் வரும் வாடிக்கையாளர்களை விரட்ட முடியாது). அவர் தொலைவில் இருந்து வருவதால் வீட்டுக்கு போகாமல் கடையிலேயே தான் காலை முதல் இரவு வரை இருப்பார்.

இந்த சூழ்நிலையில் நான் வியாபாரம் செய்யலாமா? என்ன தான் அவர் மாற்று மதத்துகாரராக இருந்தாலும் வியாபாரம் நடப்பது என்னுடையது. அதில் கிடைக்கும் லாபம் என்னை வந்து சேரும். இப்படி நான் கடையை திறந்து வைத்திருப்பது கூடுமா? கூடாது என்றால் கடையை அடைத்து விட்டு அவரை வேறு இடத்தில அந்த ஒரு மணிநேரம் இருக்க ஏற்பாடு செய்யலாம்?

 பதில் : ” நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.” (அல்குர்ஆன் 62 : 9)

மேற்கண்ட இறைவசனத்தில் அல்லாஹ் இரண்டு கட்டளைகளைப் பிறப்பித்துள்ளான். வெள்ளிக் கிழமையில் ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்படும் போது

1. இறைவனை நினை கூர்வதற்கு விரைய வேண்டும்.

2. வியாபாரத்தை விட வேண்டும்.

ஒருவர் தன்னுடைய வியாபாரக் கடையில் மாற்று மதத்தவர்களையோ அல்லது ஜூம்ஆ கடமையாகதவர்களையோ நியமித்து விட்டு அவர் மட்டும் வியாபாரம் செய்யாமல் ஜூம்ஆவில் கலந்து கொள்வதால் அவர் வியாபாரத்தை தவிர்ந்தவராகக் கருதப்படமாட்டார். ஏனெனில்

“வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்!”

என்பதோடு அல்லாஹ் நிறுத்தியிருந்தாலும் மேற்கண்ட இறைக்கட்டளையை நிறைவேற்றுவதற்கு அவர் வியாபாரத்தை விட்டுத்தான் ஆக வேண்டும்.

ஜும்ஆ கடமையானவர் மட்டும்தான் ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்ட பிறகு வியாபாரத்தை விடவேண்டும் என்று சொன்னால் “பாங்கு சொல்லப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள் ” என்ற கட்டளை மட்டுமே போதுமானதாகும்.

ஆனால் அல்லாஹ் “வியாபாரத்தை விட்டுவிடுங்கள்” என்று அதிகப்படியான கட்டளையைக் கூறுவதிலிருந்தே ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்டால் ஒருவர் தனக்கு சொந்தமான வியாபாரக் கடையை மூடிவிட வேண்டும். மாற்று மதத்தவர்களையோ அல்லது ஜூம்ஆ கடமையாகதவர்களையோ கொண்டு வியாபாரம் செய்வது ஹராம் என்பதையும் அதன் மூலம் வரும் வருவாயும் ஹராமாகும் என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நிர்பந்தம் என்று வரும்போது மார்க்கத்தில் சில விதிவிலக்குகள் உள்ளன. அது போல் ஜும்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்ட பிறகு வியாபாரம் செய்வது ஹராமாகும் என்றாலும் சில சூழ்நிலைகளில் ஒருவன் நிர்பந்தத்திற்குள்ளானால் அது அல்லாஹ்விடம் பாவமாகக் கருதப்படாது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

45 − = 38

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb