Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

புறம் பேசினால் அமல் இழப்பு

Posted on April 22, 2012 by admin

  புறம் பேசினால் அமல் இழப்பு  

அடுத்தவர் விவகாரங்களை தவறாகப் பேசுவது கூடாது. மிகவும் எச்சரிக்கையாக பேசவேண்டும். மற்றவரை குறைபடுத்தி பேசக்கூடாது.

துனியாவில் நாம் உதாரணம் பார்க்கலாம். தரக்குறைவாகப் பேசினால் மான நஷ்ட வழக்கு போடுகின்றனர். இவர் என்னைப் பற்றி பேசியதால் எனக்கு கண்ணியம் குறைந்து விட்டது. இவ்வளவு இழப்பு ஏற்பட்டது. என் வணிகம் படுத்துவிட்டது. வணிக நட்டம் வந்தது. இல்லாததும் பொல்லாததுமான செய்திகளை பரப்பிவிட்டார். அது உண்மையுமல்ல. நட்டத்துக்கு இவரே பொறுப்பு. ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வாங்கித் தருமாறு மனு அளிக்கின்றனர்.

ஒருவர் கஷ்டப்பட்டு உழைத்த, சம்பாதித்த, பணத்தை மாஜிஸ்டிரேட் இன்னொருவருக்கு உத்தரவிடுகிறார். எத்தகைய உழைப்புமின்றி பாதிக்கப்பட்டவர் வாங்கி செல்கிறார். தவறாக, இட்டுக்கட்டி பேசியதால் வந்த தண்டனை.

இன்னொருவரை குறித்து தவறாக புறம்பேசினால் அமல் நற்கரும பரிசு அவருக்குச் சென்றுவிடும். உமது கையை விட்டுப்போன பணம் உமக்கு நஷ்டம். அதே போன்று உமது அமல் இன்னொருவர் கணக்கில் சென்றுவிட்டால் உனக்கு இழப்பு, இழப்புதான்.

நாம் அமல் செய்கிறோம். அடுத்தவரை தரக்குறைவாக பார்த்து அமல்களை இழந்து வருகிறோம். நோன்பு பிடித்து தூங்கி தொலையுங்கள். அதுவும் இபாதத். விழித்துக் கொண்டிருந்தால் புறம்பேசி அமல்களை இழந்துவிடுகிறீர்.

நோன்பாளி தூங்கினாலும் இபாதத். புறம் கூறி அமல் பறிபோகாது. தூங்கிக் கொண்டே தொழ முடியாது. தூக்கத்தில் கஃபா தவாபு செய்ய முடியாது. தூங்கிக் கொண்டே ஹஜருல் அஸ்வத் புனித கல்லை முத்தமிட முடியாது. தூங்கிக் கொண்டே எந்த அமலும் செய்ய முடியாது. தானம் கொடுப்பதற்கும் விழிப்பு தேவை. தூக்கத்தில் தொழுகையாளி, கொடையாளியாக வாய்ப்பில்லை. ஆனால் தூக்கத்தில் நோன்பாளியாக முடியும்.

இபாதத் அறுந்துபோகவில்லை. நோன்பு தொடர்கிறது. விழிப்பு தூக்கம், நோன்பின் பயன் உண்டு. வாய் மூடியிருந்தாலே போதும். பெரிய தஸ்பீஹ். வாய் திறந்து அடுத்தவரை தரக்குறைவாகப் பேசிவிடக் கூடாது.

நான் கண்ணாடி அணிந்துள்ளேன். கண்ணாடி வழியாக உங்களை பார்க்கிறேன். கண்ணாடி பார்ப்பதில்லை. கண்ணாடி முன்னால் இருக்கிறது. என்றாலும் நான்தான் உங்களை பார்க்கிறேன். சிருஷ்டி இருகிறது. ஆனால் அதனுடன் இருந்து கொண்டு அல்லாஹ் உமது தேவையை பூர்த்தி செய்கிறான். கண்ணாடிக்கு பின்னால் ஜீவனுடன் இருப்பவன் யார். காலையிலிருந்து இரவு வரை செயல் செய்தாலும் நபிகளார் போன்று செய்தால் மட்டுமே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். இல்லையென்றால் நிராகரிப்பான்.

இறப்பு வரை எந்த செயல் செய்தாலும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்ததை மட்டும் செய்ய இயலும். அல்லாஹ்வை இல்ம், ஞானம் மூலம் பார்க்கலாம். புறக்கண்ணால் பார்க்க இயலாது. கண்களை கண்களால் பார்க்க முடியாது. முன்னால் ஒரு கண்ணாடி வேண்டும். கண்களை மேஜையில் வைத்துவிட்டால் பார்க்கமுடியாது. என் கண்களை பார்ப்பதற்கே ஒரு கண்ணாடி தேவைப்படுகிறது.
 

-மௌலானா பிலாலிஷாஹ் ஹஜ்ரத்

தகவல் : ஆணங்காச்சி ரசூல்முஸ்லிம் முரசு மார்ச் 2012


Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb