Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

திருமணம் என்பது விளையாட்டல்ல

Posted on April 15, 2012 by admin

  

திருமணம் என்பது விளையாட்டல்ல

இளம் பெண்களால் ஏற்படும் பிரச்சினைகள் சமீபகாலங்களில் அதிகரித்து வருகின்றன. இளம் பெண்களின் பெற்றோர் உஷாராக இருந்து அவர்களை வழிநடத்தவேண்டும். இப்படி…!

o உங்களுக்கு கிடைத்த அனுபவங்களை வைத்துக்கொண்டு, நீங்கள் சந்தித்த பெண்களை நினைத்துக்கொண்டு உங்கள் மகளை சந்தேகப்பட வேண்டாம். அவர்களை ஓரளவு கண்காணிக்க வேண்டும் என்பது அவசியம்தான். அதற்காக அவர்களது ஒவ்வொரு செயலிலும் மூக்கை நுழைப்பது அவசியமற்றது.

o மகளை தனியாக இருக்கவும், தனிமையில் இருந்து சிந்திக்கவும் அதிக வாய்ப்புகளை கொடுக்கவேண்டாம். தனிமையை விரும்பும் பெண்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவும், எளிதாக காதல் வசப்பட்டு விடுபவர்களாகவும், சின்னச் சின்ன தோல்விகளைக்கூட தாங்க முடியாதவர்களாகவும் இருப்பதுண்டு.

o மகளின் படிப்பு, வேலை, எதிர்காலம், திருமணம் பற்றிய உங்கள் கனவு எப்படி இருக்கிறது என்பதை அவளிடம் உணர்த்துங்கள்.

o நமது பாரம்பரியம், ஒழுக்கம், கலாசாரம் போன்றவைகளை அடிக்கடி மகளிடம் சொல்லிக்காட்டாமல் நீங்கள் அதன்படி நடந்து காட்டுங்கள். அதுதான் அவளையும் நல்வழிப்படுத்தும்.

o நீங்கள் அவளுக்கு கொடுக்கும் எல்லா சுதந்திரமும் எல்லைக்குள் இருக்கட்டும். `நீ எதை வேண்டுமானாலும் படி… நீ எந்த வேலையானாலும் பார்… நீ எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் செல்.. நீ யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்…’ என்பது போல் சுதந்திர எல்லையை பரவலாக்க வேண்டாம். நீ எதைச் செய்ய முன்வந்தாலும் அதில் எங்கள் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்லிவையுங்கள்.

o திருமணம் என்பது விளையாட்டல்ல. அது சடங்குகளுக்கும், கோலாகலத்திற்கும் உருவாக்கப்பட்டதல்ல. பொறுப்பும், புனிதமும் நிறைந்தது. அதனால் அதற்குரிய மரியாதையை கொடுத்தே ஆக வேண்டும் என்பதை உணர்த்துங்கள்.

-ஆஷா தினேஷ்.


 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

80 + = 87

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb