Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பாவங்களிலேயே மிகப்பெரியது, அல்லாஹ்வுக்கு இணை வைத்தலே!

Posted on April 14, 2012 by admin

 பாவங்களிலேயே மிகப்பெரியது,  அல்லாஹ்வுக்கு  இணை வைத்தலே! 

உலகில் மனிதன் புரியும் பாவங்களிலேயே மிகப்பெரியது, அல்லாஹ்வுக்கு இணை வைத்தலே!

“ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் தூதர்களை அனுப்பி இருக்கிறோம்। (அத்தூதர்கள் அச்சமுகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள் (ஷைத்தான்களாகிய) தாகூத்துகளிடமிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.” (அந்நஹ்ல்: 36)

“உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம்முடைய தூதர்களிடம் அர்ரஹ்மானையன்றி வணங்கப்படும் வேறு தெய்வங்களை நாம் ஆக்கியிருந்தோமா? என்று கேட்பீராக!.” (அல்ஜுக்ருஃப்: 45)

“எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அப்பொழுது அவன் வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனைக் கொத்திக்கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்)காற்று அவனை வெகுதூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துச் சென்றதைப் போன்றோ இருக்கின்றான்.” (அல்ஹஜ்: 31)

“நிச்சயமாக அல்லாஹ் இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான்.” (அந்நிஸா: 48)

“மனிதர்களே! நீங்கள் உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம்.’ (அல்பகரா: 21)

மேலும் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை ஆக்காதீர்கள். நிச்சயமாக நான் அவனிடமிருந்து உங்களுக்கு தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்தான்.” (அத்தாரிஆத்: 51)

”என்னுடைய சமூகத்தவர்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனன்றி உங்களுக்கு வேறு கடவுள் இல்லை.” (அல்அஃராஃப்: 59)

மேலும், “நிச்சயமாக என்னைத்தவிர வேறு இறைவன் இல்லை. எனவே என்னையே நீங்கள் வணங்க வேண்டும் என்று நாம் வஹீ அறிவிக்காமல் உமக்கு முன்னர் எந்த நபியையும் நாம் அனுப்பவில்லை.” (அல்அன்பியா: 25)

“இன்னும் அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்க மாட்டார்கள்.” (அல்புர்ஃகான்: 68)

(அல்லாஹ்வையாகிய) எனக்கு யாதொன்றையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள்.” (அந்நூர்: 55)

“நீர் இணை வைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்கள் யாவும் அழிந்து விடும். நிச்சயமாக நீர் நஷ்டமடைந்தவர்களில் ஆகி விடுவீர் என உமக்கும் உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் (வஹீ) அறிவிக்கப்பட்டது. ஆகவே நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும் அவனுக்கு நன்றி செலுத்துவோரில் நீர் ஆகி விடுவீராக!.” (அல்ஜுமர்: 65-66)

”அல்லாஹ்வையே வணங்க வேண்டும். அவனுக்கு யாதொன்றையும் நான் இணையாக்கக் கூடாது என்றும், அவன் பக்கமே (உங்களை) நான் அழைக்கிறேன். இன்னும் அவன் பக்கமே மீட்சியும் இருக்கிறது.” (அர்ரஃது: 36)

“இன்னும் உமது இரட்சகன் பக்கம் நீர் அழைப்பீராக! நிச்சயமாக நீர் இணை வைப்போரில் ஒருவராக ஆகி விட வேண்டாம்,” (அல்கஸஸ்: 87)

“உமது இரட்சகனால் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக! அவனைத்தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு இல்லை. இன்னும் இணை வைப்போரை நீர் புறக்கணித்து விடும்.” (அன்ஆம்: 106)

இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியதை அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் என்னையும் என் மக்களையும் சிலைகளை வணங்குவதிலிருந்து தூரப்படுத்துவாயாக என்றும், என் இரட்சகனே! நிச்சயமாக (இந்த சிலைகள்) மனிதர்களில் அநேகரை வழிகெடுத்து விட்டன.” (இப்ராஹீம்: 35-36)

“எனவே அல்லாஹ்வுடன் வேறோர் நாயனை நீர் அழைக்காதீர். (அவ்வாறு அழைத்தால்) அதனால் நீர் வேதனை செய்யப்படுபவர்களில் ஆகி விடுவீர். இன்னும் நீர் உம்முடைய நெருங்கிய உறவினர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக.” (அஷ்ஷுஅரா: 213-214)

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 15 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb