Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பெண்களுக்கு எதிராக நடக்கும் 99 சதவீதக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்!

Posted on March 31, 2012 by admin

பெண்களுக்கு எதிராக நடக்கும்

99 சதவீதக் கொடுமைகளுக்கு

முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்!

பாலியல் தொழிலுக்காகப் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்படுவது குறித்து தேசிய பெண்கள் ஆணையம் சமீபத்தில் நாடு முழுவதும் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இந்தியாவில் 378 மாவட்டங்களில் பாலியல் தொழிலுக்காகப் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தும் அவலநிலை தொடர்வதாக தேசிய பெண்கள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பது: இந்தச் சமூக அவலநிலையானது தென் மற்றும் கிழக்கு மாநிலங்களில்தான் அதிகமாக அரங்கேறுகிறது. கேரளம், ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் பாலியல் தொழிலுக்காகப் பெண்களையும், சிறுமிகளையும் கடத்தும் நிலை தொடர்கிறது.

    தமிழகத்தில் :    

இதையடுத்து தமிழகத்தில்தான் பெண்களும், சிறுமிகளும் அதிகம் கடத்தப்படுகின்றனர். இங்கு 93.33 சதவீத மாவட்டப் பகுதிகளில் இருந்து பெண்களையும் சிறுமிகளையும் சப்தமில்லாமல் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர். இதைத்தொடர்ந்து ஒரிசாவில் 86.66 சதவீத மாவட்டப் பகுதிகளிலும், பிகாரில் 86.48 சதவீத மாவட்டப் பகுதிகளிலும் பெண்களையும், சிறுமிகளையும் கடத்தும் அவலம் நீடிக்கிறது.

இதுதவிர்த்து, பிற மாநிலங்களிலும் குறிப்பிட்ட சதவீதத்திலான பெண்களும், சிறுமிகளும் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படும் கொடுமை நடந்தேறுகிறது. 28 லட்சம் பெண்கள்… இந்தியா முழுவதும் 28 லட்சம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழில் ஈடுபடும் பெண்களில் 2.4 சதவீதம் பேர் 15-35 வயதுக்கு இடைப்பட்டவர்கள். 43 சதவீதம் பேர் சிறுமிகள்.

இந்தத் தொழிலில் குறிப்பிட்ட சதவீதத்தினர் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றால், மற்றொரு குறிப்பிட்ட சதவீதத்தினர் தங்களது குடும்ப நபர்களாலேயே வலுக்கட்டாயமாக இத்தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள். அந்தவகையில், 22 சதவீதப் பெண்கள் தங்களது குடும்பத்தாரின் வற்புறுத்தலின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 8 சதவீதம் பெண்கள் தங்களது கணவரின் நெருக்குதலின் பேரிலும் 18 சதவீதம் பேர் தங்களது நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரின் சூழ்ச்சி வலையிலும் சிக்கி இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

    காரணம் என்ன?   

பெரும்பாலும் பின்தங்கிய பகுதியில்தான் பாலியல் தொழில் அதிகம் நடக்கிறது. வறுமையும், ஏழ்மையும்தான் அப்பாவிப் பெண்களை இத்தொழிலுக்கு இட்டுச் செல்லும் முக்கியக் காரணிகளாக உள்ளன. பின்தங்கிய வேலைவாய்ப்பற்றப் பகுதியில்தான் பெண்களுக்கு எதிராகப் பிற அநீதிகளும் அதிகம் அரங்கேறுகின்றன. பெண்களுக்கு எதிரான அநீதிக்கு பாலினப் பாகுபாடும் முக்கியக் காரணமாக உள்ளது. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையைத் தடுக்க சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் சரியாக அமல்படுத்தப்படுவதில்லை. இதுவும் பெண்களுக்கு எதிராக துணிச்சலாக அநீதி இழைக்கப்படுவதற்கு காரணம்.

    தீர்வு என்ன?    

பெண்கள் இதுபோன்று பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு பொருளாதாரச் சூழ்நிலைதான் முக்கியக் காரணம். இதனால் அவர்களை முதலில் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக்க வேண்டும். அதேபோல, பெண்களுக்கு எதிரான அநீதியைத் தடுக்க நடைமுறையில் உள்ள சட்டத்தைத் திறன்படச் செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிராக அநீதி இழைப்பவர்களுக்கு கடுமையானத் தண்டனை வழங்கத் தயங்கக்கூடாது. இதையெல்லாம்விட பெண்கள் என்பவர்கள் சமுதாயத்தில் மதிக்கப்படக்கூடியவர்கள் என்ற மனநிலையை அனைவர் மத்தியிலும் உருவாக்க முயலவேண்டும். இவ்வாறு செய்தாலே பெண்களுக்கு எதிராக நடக்கும் 99 சதவீதக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனினும் பெண்களுக்கு எதிரான அநீதியை மட்டும் இன்னும் தடுத்து நிறுத்த முடியவில்லை. வியாபாரப் பொருள்களாய் பெண்கள் கருதப்படும் அவலநிலை இன்றும் நீடிக்கிறது. இந்த நிலை என்று மாறும்? என்பதே சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாகவும், கேள்வியாகவும் உள்ளது. இதற்கு அரசு நடவடிக்கை மட்டும் போதாது. பெண்கள் விஷயத்தில் மக்களும் தங்களின் தவறான மனநிலையை மாற்றிக் கொள்ள முன்வரவேண்டும்.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

19 − = 17

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb