சிந்திக்க மட்டும்!
நீடூர் பாபு
பார்க்காத சொர்க்கத்தின் மீது..
யாருகுத்தான் ஆசையில்லை..
நம்பிக்கை கொள்ளாதவருக்கும்..
சிந்திக்கின்ற நேரத்தைவிட..
சீரழிகின்ற நேரம் அதிகம்..
மார்க்கம் என்பது ஏற்று அணிவது மட்டுமல்ல..
கற்று கற்ப்பித்து வாழ்ந்து காட்டுவது..
நிலையான வாழ்க்கை இல்லை..
நிலையான இளமை இல்லை..
நிலையான செல்வம் இல்லை.
நிலையான ஆசைகள் மட்டும்..
மரணம் வரை….
சமுதாய புரட்சி நலன்…
சந்தர்ப்பவாதிகளாள்..
சாக்கடையானது…
நாகரீகமாம் மேலை நாட்டு கலாச்சாரமாம்..
ஆடை குறைப்பில் என் குலப்பெண்கள்..
பழம்பெரும் பண்பாடு பகுத்தறிவு ஏற்காத..
பாழடைந்த பண்பாடு…
மறுமை வெற்றி எல்லோரும் விருப்புகிறோம்..
வணங்காமல் தர்மம் அளக்காமல்..
இறக்க பிறந்த மனிதர்கள்..
படைத்த ஓர் இறைவனை..
மறந்து வாழ பழகினார்கள்