Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நன்மையில் உங்களை முந்திவிட்டவர்களை நீங்களும் பிடித்து விட கூடிய ஒரு நற்காரியம்

Posted on March 30, 2012 by admin

நன்மையில் உங்களை முந்திவிட்டவர்களை நீங்களும் பிடித்து விடக் கூடிய ஒரு நற்காரியம்

”ஏழை மக்கள் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ‘பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகிறார்கள். மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதனால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர்; உம்ராச் செய்கின்றனர்; அறப்போரிடுகின்றனர்; தர்மமும் செய்கின்றனர். (ஏழைகளாகிய நாங்கள் இவற்றைச் செய்ய முடிவதில்லை)’ என்று முறையிட்டனர்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகிறேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்திவிட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கிறீர்களோ அவர்களும அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவராவீர்கள்.

(அந்த காரியமாவது) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 முறை இறைவனைத் துதியுங்கள்; 33 முறை இறைவனைப் புகழுங்கள்; 33 முறை இறைவனைப் பெருமைப படுத்துங்கள்’ என்று கூறினார்கள். நாங்கள் இது விஷயத்தில் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர் ஸுப்ஹானல்லாஹ் 33 முறையும், அல்ஹம்துலில்லாஹ் 33 முறையும் அல்லாஹு அக்பர் 33 முறையும் கூறலானோம்.

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்” என்று 33 முறை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 முறை கூறினார்கள் என அமையும்’. என்று விளக்கம் தந்தார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி எண் 843)

இந்த பொன்மொழியில் பல படிப்பினை நமக்கு உள்ளது. ஏழைகளான சகாபாக்கள், வசதி படைத்தவர்களைப்போல் நாம் மாளிகை கட்டமுடியவில்லையே, ஆடை- ஆபரணங்களால் நம்மை அழகு படுத்திக்கொள்ள முடியவில்லையே, அவர்களைப்போன்று வாகனங்கள் வைத்துக்கொள்ள முடியவில்லையே, அவர்களைப்போன்று அறுசுவை உணவுகளை உட்கொண்டு சுகவாழ்க்கை வாழ முடியவில்லையே என்று அவர்கள் ஆதங்கப்பட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கோரிக்கை வைக்கவில்லை.

நபியவர்களே! அவர்களெல்லாம் செல்வ செழிப்பில் மிதக்கும்போது நாங்கள் மட்டும் வறுமையில் வாடவேண்டுமா? எனவே எங்களுக்கு செல்வம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். அதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக, வசதி படைத்தவர்கள் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதனால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர்;உம்ராச் செய்கின்றனர்; அறப்போரிடுகின்றனர்; தர்மமும் செய்கின்றனர். இதன் மூலம் நன்மையில் அவர்கள் முந்துகிறார்களே என்றுதான் நபியவர்களிடம் முறையிடுகிறார்கள்.

இதை பார்க்கும்போது இந்த உலகத்தில் அவர்களை ஆட்கொண்டிருந்த வறுமையை மறுமைக்காக பொறுத்து, அமல்களின் மூலம் அந்த மறுமையை அடையமுயற்சித்த அவர்களின் அடங்காத தாகம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

இன்றும் கூட நம்மில் சிலர் தங்களுக்கு ஏதேனும் வறுமை வந்துவிடுமானால், என்ன அல்லாஹ்! நான் அவனை ஐவேளை தொழுகிறேன்; எனக்கு வறுமையை தந்துள்ளான். ஆனால் பெருநாள் மட்டுமே பள்ளிவாசல் பக்கம் எட்டிப்பார்க்கும் மூஸாவுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுத்துள்ளானே என்று அங்கலாய்ப்பவர்களையும் பார்க்கிறோம். நம்முடைய சிந்தனை அவனைவிட நாம் எப்படி பணக்காரனாக ஆவது என்று; ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் பண்படுத்தப்பட்ட அந்த சத்திய சகாபாக்களுக்கோ என்ன செய்தால் நாம் மற்றவர்களைவிட நன்மையில் முந்தமுடியும் என்ற சிந்தனை. அதுதான் அந்த மேன்மக்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு.

இது ஒருபுறமிருக்க, அந்த ஏழை சகாபாக்களுக்கு நன்மையில் முந்துவதற்கு ஒரு செயலை, அதாவது தொழுகைக்கு பிறகு ‘ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்” என்று 33 முறை கூறுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்களே! இது இன்றைக்கு நம்மில் எத்துனை பேரிடம் நடைமுறையில் உள்ளது..? இமாம் ஸலாம் கொடுத்தவுடன் மடைதிறந்த வெள்ளம்போல் அடுத்தவர்களை தாண்டிக்குதித்து வெளியேறுவதே நம்மில் பலரின் இன்றைய நிலை. இதில் பர்ல் மட்டுமே தொழும் தவ்ஹீத் வாதிகளும் உண்டு. இவ்வாறெல்லாம் இருக்கும் நமது நிலை மாறவேண்டும். சகாபாக்கள் எப்படி நன்மையை தேடி, தேடி செய்தார்களோ, அதுபோல் நாமும் செய்யமுன்வந்தால்தான் மறுமையில்,அந்த சத்திய சகாபாக்கள் அளவுக்கு ‘மெரிட்’டில் பாஸ் பன்ன முடியாவிட்டாலும், எதோ ‘பெயில்’ ஆகாமலாவது தப்பிக்கலாம்.

என்ன! அடுத்த தொழுகையில் இறைவனை 33 முறை இறைவனைத் துதிக்கவும்; 33 முறை இறைவனைப் புகழவும்; 33 முறை இறைவனைப் பெருமைப்படுத்தவும் ரெடியா..?

-முகவைஅப்பாஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

69 − 66 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb