Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தாய்மைக்கு முதல் வில்லன்!

Posted on February 19, 2012 by admin

      தாய்மைக்கு முதல் வில்லன்  !       

திருமணமான பெண்கள் அதிகம் எதிர்பார்ப்பது தாய்மை. ஆரோக்கியமான தம்பதிகள் எளிதில் குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்புண்டு.

அதேசமயம் பெண் தாய்மையடைவதை தடுக்கும் எதிரிகள் பல உண்டு. உறவில் ஈடுபாடின்றி இருப்பது, நோய் தாக்குதல் போன்றவையும் பெண்களின் தாய்மைக்கு எதிரியாகின்றன. தாய்மைக்கு வில்லனாக திகழ்பவைகளை வெல்வது குறித்து மகப்பேரியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம்.

தாய்மைக்கு முதலில் வில்லனாக இருப்பது, `பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்’. இந்திய பெண்களில் ஐந்தில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. சினைப்பையில், நீர் கோர்த்த பருக்கள் தோன்றுவதையே பாலிசிஸ்டிக் ஓவேரியன் நோய் தாக்குதல் ஆகும்.

நீர்கோர்த்த அந்த பருக்கள் புற்றுநோய் கட்டிகளாக மாற வாய்பில்லை என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். இதற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் தாய்மை அடையலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஹார்மோன் பாதிப்பு    

இந்த பாதிப்பு கொண்டவர்களுக்கு முகப்பரு தோன்றும். உடல் குண்டாகும். முகம், வயிறு, மார்புப் பகுதியில் முடி வளரும். மேலும் ஹார்மோன் பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கும். பரம்பரை ரீதியாகவும் இந்த நோய் தோன்றும். இந்த நோய் பாதிப்புள்ள பெண்களின் உடலில் ஆண்களுக்கான டெஸ்ட்டோஸ்டிரான் ஹார்மோன் பெருமளவு சுரப்பதே இத்தகைய முரண்பாடுகளுக்கான காரணமாகும்.

இவர்களுக்கு பெண்களுக்குரிய ஹார்மோனை சுரக்கவேண்டிய சினைப்பையும், பிட்யூட்டரி சுரப்பியும், அதனை சரிவர சுரக்காத நிலை ஏற்படுவதால் அவர்களுக்கு மாதவிலக்கு நெருக்கடி தோன்றும். எனவே அருகில் உள்ள மகப்பேறு நிபுணர்களை தொடர்பு கொண்டு சரியான சிகிச்சை பெற்றுக்கொண்டால் இந்த குறைபாடுகள் நீங்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    உலர்வுத் தன்மை     

பெண்களின் இனப்பெருக்க உறுப்பு சுரப்பிகள் ஜெல்லி போன்ற திரவத்தை சுரக்கின்றன. இதனை `செர்விக்கல் மியூக்கஸ்’ என்கிறோம். கணவரின் உயிரணு நீந்தி வேகமாகச் செல்ல துணைபுரிவது இந்த திரவத்தின் வேலை. இது கெட்டியாகி விட்டாலோ, தேவையான அளவு இல்லாவிட்டாலோ தாய்மைக்கு தடை ஏற்படும். எனவே உலர்வுத்தன்மையை போக்க சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்.

    பலவீனமே எதிரி    

பெண்கள் பிறப்பு உறுப்பை இறுக்கமாக்கும் `வெஜைனெஸ்மாஸ்’ நோய் ஏற்பட்டிருந்தாலோ, செக்ஸ் மீது ஆர்வம் இல்லாமல் இருந்தாலோ, செக்சை அருவறுப்பு நிறைந்ததாக கருதினாலோ அதற்கான சிகிச்சைகளை பெற்று, தீர்வு தேடிக்கொள்ள வேண்டும்.

ஆண்களிடையே உள்ள பலவீனமும் பெண்கள் தாய்மையடைவதற்கு தடையாகிறது. விந்தணு குறைபாடு, ஈடுபாடின்மை போன்றவையும் தாய்மை பேற்றினை தடுக்கும் எதிரியாக திகழ்கிறது.

திருமணமான பெண்கள் அதிகம் எதிர்பார்ப்பது தாய்மை. ஆரோக்கியமான தம்பதிகள் எளிதில் குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. அதேசமயம் பெண் தாய்மையடைவதை தடுக்கும் எதிரிகள் பல உண்டு. உறவில் ஈடுபாடின்றி இருப்பது, நோய் தாக்குதல் போன்றவையும் பெண்களின் தாய்மைக்கு எதிரியாகின்றன. தாய்மைக்கு வில்லனாக திகழ்பவைகளை வெல்வது குறித்து மகப்பேரியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம்.

தாய்மைக்கு முதலில் வில்லனாக இருப்பது, `பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்’. இந்திய பெண்களில் ஐந்தில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. சினைப்பையில், நீர் கோர்த்த பருக்கள் தோன்றுவதையே பாலிசிஸ்டிக் ஓவேரியன் நோய் தாக்குதல் ஆகும். நீர்கோர்த்த அந்த பருக்கள் புற்றுநோய் கட்டிகளாக மாற வாய்பில்லை என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். இதற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் தாய்மை அடையலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

     நோய் தொற்றுகள்   

சிலருக்கு கிளன்டிடா போன்ற கிருமித்தொற்றுகள் பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும். சரியான நேரத்தில் அதற்கான சிகிச்சையை பெறாவிட்டால், செக்ஸ் செயல்பாட்டில் ஈடுபடும்போது வலி தோன்றும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதும், சில வகை ஆன்டிபயோடிக் மருந்துகளை தேவையில்லாமல் சாப்பிடும்போதும், அதிக நேரம் ஈரத்தன்மையோடு இருக்கும்போதும் இந்த கிருமித்தொற்று ஏற்படும். எனவே உடல் நலத்திற்கு ஏற்ற சத்தான உணவுகளை உட்கொண்டு நோய்கிருமிகள் தாக்காத வகையில் பாதுகாக்க வேண்டும் என்பது மகப்பேறியல் நிபுணர்களின் ஆலோசனை.

சிலருக்கு கிளன்டிடா போன்ற கிருமித்தொற்றுகள் பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும். சரியான நேரத்தில் அதற்கான சிகிச்சையை பெறாவிட்டால், செக்ஸ் செயல்பாட்டில் ஈடுபடும்போது வலி தோன்றும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதும், சில வகை ஆன்டிபயோடிக் மருந்துகளை தேவையில்லாமல் சாப்பிடும்போதும், அதிக நேரம் ஈரத்தன்மையோடு இருக்கும்போதும் இந்த கிருமித்தொற்று ஏற்படும். எனவே உடல் நலத்திற்கு ஏற்ற சத்தான உணவுகளை உட்கொண்டு நோய்கிருமிகள் தாக்காத வகையில் பாதுகாக்க வேண்டும் என்பது மகப்பேறியல் நிபுணர்களின் ஆலோசனை.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

52 − = 43

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb