Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மத்ரஸா நிர்வாகக் கோளாறு!

Posted on February 14, 2012 by admin

மத்ரஸா நிர்வாகக் கோளாறு!

வெள்ளையர் ஆட்சி காலத்தில் கிருத்தவ நடைமுறை, இங்கிலாந்து பழக்க வழக்கம், மொழி, கலாச்சாரம், பண்பாடு பாரத மக்கள் மீது திணிக்கப்பட்டது. துப்பாக்கி, பீரங்கி, சிறைச்சாலை, தூக்கு மேடை துணை தந்தது.

மிகுந்த நெருக்கடியான சூழலில், மத சடங்குகள், அடிப்படை வாதத்தை காப்பாற்ற முஸ்லிம் பொதுமக்கள் மத்ரசா இயக்கத்தை நம்பினர். ஆதரித்தனர். போற்றி மதித்து வளர்த்தனர்.

இன்றைய அறிவியல் யுகத்தில் மதப் பிரச்சாரம், மத அடிப்படைக் கூறுகள் தொலைக்காட்சி, வீடியோ, தகவல் தொழில்நுட்ப சாதனம் வாயிலாக இல்லத்தை நாடியடைகிறது.

மதவாதியை நேரில் பார்த்ததேயில்லை. ஆனால் இண்டர்நெட் உதவியுடன் கருத்துக்கள் பலமாக மனதைக் கவ்வுகின்றன. நேயர்வட்டம் பரவும் காலம் இது.

வக்பு வாரிய சொத்து பெருமளவு தமிழகத்தில் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. பொதுச் சொத்து நிர்வாகத்தில் முஸ்லிம் சமுதாயம் மிகவும் பலவீனமாக நடைபோடுவதை எளிதாகவே காணமுடிகிறது. நிர்வாகிகள் எஜமான் தன்மையுடன் கோலோச்சுவதை மறுக்கமுடியாது. பணக்கார கொட்டம் தாங்கமுடியவில்லை.

ஐம்பது ஆண்டுகள் முன்னர் முஸ்லிம் மதவாதிகளுக்கு பெரிய வரவேற்பு சமுதாயத்தில் நிலவியது. தப்லீக் மத்ரசா, தரீக்கத் மத்ரஸா, வஹ்ஹாபி மத்ரஸா, தர்கா மேலாதிக்க மத்ரஸா பிரிவுகள் பொதுமக்கள் மத்தியில் மனச்சோர்வு தந்தன. முஸ்லிம் சமுதாயம் மத்ரசா ஈடுபாட்டை தளர்த்த துவங்கியது.

ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கூட்டம் சரிந்து விட்டது. மாணவர் சேர்க்கைக்கு தாளம் போட வேண்டிய திண்டாட்டம். தரம் படுபாதாளத்தை நோக்கி வீழ்கிறது.

மூத்த மதவாதிகளின் வாரிசுகள் பெரும்பாலோர் இன்று ஐ.டி. நிபுணர், எம்.எஸ், எம்.டி, எம்.பி.ஏ, மருத்துவ, பொறியியல், வணிக மேலாண்மை பட்டதாரிகளாயுள்ளனர். மதப்பிரச்சாரத்தின் பக்கம் நெருங்குவதில்லை.

மத்ரஸா நிர்வாகம், பண வரவு, மாணவர் ஆசிரியர் எண்ணிக்கை தகுதி, மொழி, சொத்து விவரம் பொதுமக்களுக்கு தெரியவேண்டும். சமீபகாலமாக இதழ்களில் மத்ரஸா நிர்வாகக் கோளாறு அச்சேறுகிறது. வெளிப்படையான தன்மையுடன் மதவாதிகள். மதப்பிரச்சார நிறுவனங்கள் செயல்படவேண்டும். இண்டர் நெட் பயன்பாட்டை ஆதரித்து உரிய தகவல்களை சமுதாயத்துக்கு சமர்ப்பிக்கலாம். இல்லையெனில், மத்ரஸா இயக்கம் பலவீனப்படும்.

-ஆணங்காச்சி ரசூல், முஸ்லிம் முரசு ஜனவரி 2012

source: http://jahangeer.in/?paged=4

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 52 = 58

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb