Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முன்மாதிரி பெண்கள்

Posted on February 6, 2012 by admin

முன்மாதிரி பெண்கள்

 அபூ சுமையா

இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் நடந்த ஒரு நிகழ்வு!

ஒரு நபித்தோழி தனது மகன் போர்க்களத்தில் இறந்துவிட்டதாகக் கேள்விப் படுகிறார். மகன் இறந்ததும் நெஞ்சில் அடித்துக்கொண்டு தலைவிரி கோலமாக புலம்பும் ரகம் அல்ல அந்த பெண். யுத்த களத்தில் பாய்ந்த அம்பு முதுகிலா அல்லது நெஞ்சிலா என்று பார்த்து நெஞ்சில் என்றால் சந்தோஷப்படும் வீரப்பரம்பரையைச் சேர்ந்த பெண் அவர்.

மகன் இறந்த செய்தி உண்மைதானா என்று அறிய போர்க்களம் நோக்கி ஓடுகிறார். அப்போதுதான் ‘ஹிஜாப்’ பர்தா முறை முறை புதிதாக சட்டமாக்கப்பட்டிருந்தது. எனவே தன் மகனைப் பலிகொடுத்து அதை உறுதி செய்வதற்காக போர்க்களம் நோக்கி ஓடிக்கொண்டிருந்த அந்த இக்கட்டான நேரத்திலும் தனது உடல் முழுமையாக மூடப்பட்டிருக்கிறதா என்று சில மணித்துளிகள் கால அவகாசம் எடுத்துக்கொள்கிறார்.

பின்னொரு நாளில் அந்தப் பெண்ணிடம் அந்த துக்ககரமான சமயத்திலும் எப்படி உங்களால் பர்தா விஷயத்தில் கவனம் செலுத்த முடிந்தது என்று வினவப்பட்டபோது அந்த பெண்மணி சொன்ன பதில் என்ன தெரியுமா?

‘நான் என் மகனைத்தான் இழந்தேனே தவிர எனது மானத்தை(ஹயா) அல்ல!’.

 

இன்றைய கால கட்டத்தில் நடந்த இன்னொரு நிகழ்வு

2002 பிப்ரவரி 28. குஜராத் கோத்ரா சம்பவத்திற்கு மறுநாள் நடந்த இன்னொரு நிகழ்வு. அதை அஹமதாபாத் நரோமா பாட்டியாவைச் சேர்ந்த ஆயிஷா (42) இப்படி விவரிக்கிறார்.

ஒரு தெருவில் பிணங்களின் நடுவில் வெறியர்களால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட ஆபிதா என்ற 50 வயது முதிய பெண்மணி நிர்வாணமாக எரிந்து கொண்டிருக்கிறாள். என்னை நோக்கி கரம் கூப்பி ‘ஆயிஷா! நான் நிர்வாணமாக எரிந்து கொண்டிருக்கிறேனே, இந்த உடலை மறைக்கவேணும் ஏதாவது துணி கொடு அம்மா’ என்ற கதறினாள். என்னுடைய சேலையைக் கிழித்து அவளைக் காப்பாற்ற முயன்றேன். ஆனால் என் முயற்சி பலிக்கவில்லை. என் கண் முண்பாகவே அவள் கருகிச் செத்தாள். (புதிய கலாச்சாரம், மார்ச் 2003)

இப்படி இஸ்லாமிய உணர்வுகளுடனேயே வாழ்ந்து அதே இஸ்லாமிய உணர்வுகளுடனேயே மரணிக்க விரும்புகிற இஸ்லாமிய பெண்கள் இன்னும் நம்மில் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அத்தகைய உணர்வுகளை நம்மிடமிருந்து சுத்தமாகத் துடைத்தெடுக்கும் காரியங்கள் சமீபகாலமாக பொது நிகழ்வில் அதிகம் அரங்கேறி வருகின்றன.

முஸ்லிம்களை அழிக்க அவர்களை கலாச்சார ரீதியாக பலவீனமாக்குவதுதான் ஒரே சிறந்த வழி என் எண்ணித் தங்கள் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளன அந்நிய சக்திகள். இதில் நம்மை நாம் தற்காத்துக்கொள்வது என்பது நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியைப் பொறுத்ததுதான். எனவே நமது கலாச்சாரத்தை பாதுகாப்பதில் ஒவ்வொரு முஸ்லிமும் எச்சரிக்கையுடன் இருப்போம். அல்லாஹ் உதவி புரிவானாக.

– சிந்தனை சரம் ஜூன் 2003

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 3

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb