Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

விருந்தினரை நம் அன்பால் கவரவேண்டுமேயன்றி பகட்டால் அல்ல!

Posted on December 25, 2011 by admin

விருந்தினரை நம் அன்பால் கவரவேண்டுமேயன்றி பகட்டால் அல்ல!

     எம். முஹம்மது சித்தீக்     

வழக்கமாக நான் செல்லும் என் நண்பனின் வீட்டிற்கு ஒரு நாள் ஞாயற்றுக்கிழமை சென்றேன். என் நண்பன் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் இருப்பவன் அன்று ஏனோ சற்று சோர்வாகவும் கலகலப்பின்றியும் காணப்பட்டான். சோர்வுக்கு காரணம் கேட்டபோது எல்லாம் உன் தங்கைதான் காரணம்.

அவளுடைய தோழி ஏதோ ஒரு புதிய சாப்பாட்டு தட்டுகளை வாங்கி இருக்காளாம். இவளுக்கும் அந்த மாதிரி தட்டுகள் வேண்டும் என அடம் பிடிக்கிறாள். நம் வீட்டில் என்ன தட்டுகளா இல்லை. பொருளாதார நிலையும் சாதகமாக இல்லை என்றாலும் அவள் புரிந்து கொள்ள மறுக்கிறாள், என்று வருத்தத்தோடு சொன்னான்.

“ஏனம்மா! மாமா வேதனைபடும்படி நடந்து கொள்கிறாய். சற்று நிலைமையை புரிந்து கொண்டு பொருமை காக்கலாமே!” என்றேன் நண்பனின் மனைவியை பார்த்து.

“என்ன அண்ணா நீங்களும் புரிந்து கொள்ள மாட்டீர்களா? என் தோழியின் கணவருக்கு இவரைவிட சம்பளம் குறைவு. காலத்திற்கேற்ற பொருட்கள் நம் வீட்டில் இல்லையென்றால் இவரைத்தானே குறைவாக மதிப்பிடுவார்கள்!” என்றார்.

கணவன் மனைவி ஊடலில் நான் தலையிட விரும்பாமல் அங்ருந்து அமைதியாக நழுவிவிட்டேன். இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் அங்கு சென்றேன். “என்ன அண்ணா எங்களையெல்லாம் மறந்து விட்டீர்களா?” என்று கேட்ட வண்ணம் என்னை வரவேற்றார்.

“ஆமாம் உங்கள் சண்டையெல்லாம் முடிந்துவிட்டதா?” என்று வினவியவாறு உள்ளே சென்று அமர்ந்தேன்.

“அதெல்லாம் போன வாரமே முடிந்துவிட்டது. புதிய தட்டுகளும் வந்துவிட்டன” என்றான் என் நண்பன் இடை மறித்து.

தலையணை மந்திரம் வென்றுவிட்டதை உணர்ந்தேன். அவர்களின் ஊடல் மறைந்ததை எண்ணி மகிழ்ந்தேன். அப்புதிய தட்டுக்களையும் பார்க்க விழைந்தேன். என்னை அவர்கள் சமையல் அறைக்கு அழைத்துச்சென்றார்கள். என்ன ஆச்சரியம், அவர்கள் வாங்கிய புதிய தட்டுக்கள் பிரிக்கப்படாமல் அலமாரியை அழகுப்பொருட்கள் போல அலங்கரித்துக்கொண்டிருந்தது.

ஏன் இன்னும் பிரிக்கப்படவில்லை என நான் வினவிய போது, விருந்தாளிகள் வரும் போதுதான் அவை பயன் படுத்தப்படும் என பதில் தெளிவாகவும் உறுதியாகவும் வந்தது குடும்பத்தலைவியிடமிருந்து!

நான் மிகவும் வியந்து போனேன். சிரமப்பட்டு உழைத்து பணம் கொடுத்து வாங்கிய கணவன், வாழ்வின் ஏற்ற தாழ்வுகளில் பங்குள்ள கணவன் மங்கிய தட்டில் சாப்பிட வேண்டுமாம். என்றோ ஒருநாள் நம்மை பார்த்துவிட்டு சென்றுவிடும் விருந்தாளிக்கு புதிய தட்டில் உபசரணமாம். என்ன உலகம், நம் உதிரத்தில் உதித்து நம்மோடு பினைந்து நாளை நம்மை காப்பாற்றப்போகும் குழந்தைகள் மங்கிய தட்டில்தான் உண்ணவேண்டுமாம். மரியாதைக்காக வந்து போகும் விருந்தினருக்கு புதிய தட்டில் உபசரிப்பாம். வீட்டில் உள்ளவற்றை இன்முகத்தோடும், qஉள்ளன்போடும் பகிர்ந்து வழங்குவதுதானே விருந்தோம்பல். அதனை விடுத்து போலியாகவும், பகட்டுக்காகவும் வாழ்வதுதான் வாழ்க்கையா?

நாம் விருந்தினரை நம் அன்பால் கவரவேண்டுமேயன்றி பகட்டால் அல்ல! சிந்திப்பார்களா?

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

69 − 62 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb