Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பெண் குழந்தைகள் இருக்கும் வீடுதான் ஆனந்தமயமான வீடு!

Posted on December 7, 2011 by admin

பெண் குழந்தைகள் இருக்கும் வீடுதான் ஆனந்தமயமான வீடு

இரண்டும் பெண் குழந்தையா? சந்தோஷப்படுங்க!

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் வீடுதான் ஆனந்தமயமான வீடு என்கிறது புதிய ஆய்வு.

`ஆசைக்கொரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண்’ என்று நம்மூரில் பழமொழி சொல்வார்கள். முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் மகிழும் பெற்றோர் இருக்கிறார்கள். ஆனால் அடுத்த குழந்தையும் பெண்ணாகப் பிறந்தால், பெரும் சங்கடம் எனக்கு வந்துவிட்டது’ என்று வருந்த தொடங்குவார்கள். ஆனால், இரண்டும் பெண் குழந்தைகள் உள்ள வீடுதான் மிகமிக சந்தோஷமான குடும்பம் என்று புதிய ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான குடும்பங்களை ஆய்வு செய்ததில் கிடைத்த சுவாரஸ்ய தகவல்கள் இங்கே;

ஒரு வீட்டில் இரண்டுமே பெண் குழந்தைகளாக இருந்தால் அந்தக் குழந்தைகள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ளாதாம். ஒருவருடன் ஒருவர் இணைந்து விளையாடுவார் களாம். அரிதாகத்தான் அம்மா, அப்பாவுக்கு தொல்லை தருவார்கள். நீங்கள் போகக்கூடாது என்று தடுக்கும் மண்மேடு, புழுதியில் எல்லாம் சென்று விளையாடாமல் சமர்த்து என்று பெயர் வாங்குவார்களாம்.

அதேபோல பெண் குழந்தைகள் அதிகமாக கூச்சல் போடுவதில்லை. அவர்கள் ஒருவரை யொருவர் கண்டு கொள்ளாமல் முகத்தை திருப்பிக் கொள்வது ரொம்ப அபூர்வம். அவசர நேரத்தில் அம்மாவிடம் செல்லமாக இருக்கும் குழந்தையை அப்பாவிடம் விட்டுச் சென்றாலும் அடம்பிடித்து அழ மாட்டார்களாம். அந்த சூழலுக்கேற்ப பெற்றோருடன் அடம்பிடிக்காமல் பிரியமாக இருந்து ஒத்துழைப்பார்களாம்.

அக்கம் பக்கத்தவர்கூட இந்த சகோதரிகளை விரும்ப தொடங்கிவிடுவார்கள் என்கிறது ஆய்வு முடிவு. இந்த குழந்தைகளின் கலகலப்பான பழக்கவழக்கங்களும், சுற்றி இருப்பவர்களுக்கு உதவும் குணம், ஒத்துழைக்கும் குணம் போன்றவை மற்றவர்களையும் கவர்ந்துவிடுகிறது. அதனால் சுற்றியுள்ளவர்களும் இவர்களின் `விசிறி’ ஆகிவிட, வீட்டிலும், வீட்டுக்கு வெளியிலும் ஒரு சந்தோஷமான சூழல் உருவாகிவிட வாழ்வே வசந்தமாகிவிடுவதாக தெரிய வந்துள்ளது.

இரண்டு பெண் குழந்தைகளுக்கு அடுத்தபடியாக ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ள வீடு ஓரளவு சந்தோஷமாக இருக்கிறதாம். இந்தக் குழந்தைகள் 86 சதவீத அளவில் ஒருவருக்கொருவர் பாசத்துடன், இணக்கமான நட்பு காட்டுவதாக தெரிய வந்துள்ளது.

சந்தோஷம் அனுபவிப்பதில் மூன்றாவது நிலையில் இருக்கிறார்கள் 2 ஆண் குழந்தைகள் உள்ள குடும்பத்தினர். மற்றவருக்காக பல விஷயங்களை புரிந்து கொண்டு விட்டுக் கொடுப்பதில் ஆண் குழந்தைகள் கெட்டிக்காரர்களாம். ஆனால் இவர்கள் தாய் அல்லது தந்தை யாராவது ஒருவர் அரவணைப்பைத்தான் விரும்புவதாக தெரிகிறது. மற்றவர் பொறுப்பில் விட்டுவிடும் சூழல் வந்தால் அடம்பிடிப்பார்கள் என்கிறது, ஆய்வு.

source: http://senthilvayal.wordpress.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

32 + = 36

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb