Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஃபத்வாவும் தக்வாவும்

Posted on October 25, 2011 by admin

 

 ஃபத்வாவும் தக்வாவும் 

பேரறிஞர் அவுரங்கஸேப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் ஒரு பணியாள் இருந்தார். அவருடைய பெயர் முஹம்மது அப்ரார். அவுரங்கஸேப் ரஹ்மதுல்லாஹி அலைஹ எப்போதும் அவரை முஹம்மது என்றே அழைப்பார்கள்;. எப்போதாவது ‘அப்ரார்’ என்றும் அழைப்பதுண்டு.

ஆனால், ‘அப்ரார்’ என்று அவரை அவுரங்கஸேப் அவர்கள் அழைக்கின்றபோதெல்லாம் ஏதோ மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம்போல் உடனே அந்த பணியாள் செம்பில் தண்ணீர் கொண்டு வந்து வைப்பார். அவுரங்கஸேப் ரஹ்மதுல்லாஹி அவர்களும் ‘உளூ’ செய்து கொள்வார்கள்.

இப்படி நீண்ட நாட்களாக நடந்து வந்தது. இதனை பல நாட்களாக தொடர்ந்து கவனித்து வந்த ஒருவருக்கு விபரம் ஒன்றும் பிடிபடவில்லை. சந்தேகத்தை ஒருநாள் அந்த பணியாளரிடம் கேட்டுவிட்டார். ‘ஆமாம்! உம்மை ‘அப்ரார்’ என்று பாதுஷா அழைத்தவுடன் நீ செம்பில் தண்ணீர் கொண்டு செல்வதன் மர்மம் என்ன?’ என்று கேட்டார்.

அதற்கு அந்த பணியாள், ‘ஆலம்கீர் அவுரங்கஸேப் அவர்கள் எப்போதும் என்னை ‘முஹம்மது’ என்றே அழைப்பார்கள். முஹம்மது என்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் என்பதால் உளூ இல்லாமல் அப்பெயரை அவர்கள் உச்சரிக்க மாட்டார்கள். ஆலம்கீர் அவர்கள் எப்போதும் உளூவுடனேயே இருப்பார்கள். உளூ முறிந்துவிட்டால் என்னை முஹம்மது என்று அழைக்காமல் ‘அப்ரா’ என்று அழைப்பார்கள். உடனே நான் புரிந்து கொண்டு அவர்கள் உளூச் செய்வதற்காக தண்ணீர் எடுத்துச் செல்வேன்’ என்று விளக்கமளித்தார்.

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரைச் சொல்ல உளூ தேவையா? என்று நம் தூய்மைவாத அறிவு கேள்வி கேட்கும். இல்லை என்றுதான் ஃபத்வாவும் பதில் சொல்லும். ஆனால் தக்வாவின் அடிப்படையில் (அவுரங்கஸேப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைப்போல) ஒருவர் அவ்வாறு செயல்பட்டால் அதைக் குறை காண்பது அறிவுடமையாகாது.

இன்று எல்லா விஷயங்களும் ஃபத்வா கண்ணோட்டத்தில் தான் பார்க்கப்படுகின்றன. கூடுமா? கூடாதா? என்றே நம்முடைய கேள்வி எல்லாம் முடிவடைகின்றன.

இப்படி ஃபத்வாக்களை மட்டும் பிடித்துக்கொண்டு அலைபவன் ஒருபோதும் உபரி வணக்கங்களில் இனிமை காணமாட்டான் என்பது நிதரிசனமான உண்மை.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

60 + = 61

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb