Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கணவனுக்கு பயப்படலாமா?

Posted on October 23, 2011 by admin

  கணவனுக்கு பயப்படலாமா? 

[ பல பெண்கள் திருமணமான புதிதில் கணவனுக்கு பயப்பட்டாலும் காலம் செல்லச்செல்ல கணவனை தன் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள். இயற்கையிலேயே பயந்த சுபாவமுடைய சில பெண்கள் கணவனுக்கு பயந்து வாழக்கூடியவர்களாகவே காலத்தை நகர்த்துகிறார்கள்.

மனைவி தனக்கு பயப்பட வேண்டும் என்று எண்ணுகின்ற பழங்கால தலைமுறையினரின் அணுகுமுறையை இக்கால இளம்தலைமுறை பெரிது படுத்தாமல் இருப்பது உண்மையில் ஆறுதலான விஷயமாக இருந்தாலும் வரதட்சணை போன்ற விஷயங்களில் அவர்களது அடாவடி இன்றைய மனைவிமார்களை பயம் கொள்ளச்செய்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

எப்போதும் கணவனுக்கு பயந்து வாழும் மனைவியால் கணவன் தவறான பாதையில் செல்லும்போது அவனை திருத்தி நேர்வழிக்கு கொண்டு வர முடியாது. இது குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றதல்ல.. கண்வன் தவறு செய்தால் துணிச்சலுடன் அதை திருத்தக்கூடியவளாக மனைவி இருந்தால்தான் குடும்பம் குடும்பமாக இருக்கும்.

எது எப்படி இருந்தாலும் கணவன் மனைவிக்கோ அல்லது மனைவி கணவனுக்கோ பயந்து கொண்டே இருந்தால் வாழ்க்கை சுவைக்காது. கணவன் மனைவிக்குள் பயமில்லாத வாழ்க்கை இருந்தால்தான் தாம்பத்தியமும் இனிதாக இருக்கும்.]

  கணவனுக்கு பயப்படலாமா? 

`என் கணவரை நினைச்சாலே பயமாக இருக்கிறது’ என்று சில பெண்கள் சொல்வார்கள். பயம் என்பது திருடனுக்கு போலீஸ் மீது ஏற்படலாம். கணவன் – மனைவி உறவென்பது போலீஸ் திருடன் போன்றதல்ல!

கணவன் மீது மரியாதை இருக்க வேண்டும். அதையும் மீறி இருவருக்குள்ளும் இருக்க வேண்டியது அன்பு, நட்பு, பாசம், நேசம்.

இவ்வாறு வாழ்க்கை நடத்தும் ஜோடிகள் அதிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். பிரச்சினைகளை தைரியமாக சமாளிப்பார்கள். இவர்கள் `இல்லற’ வாழ்க்கையும் ரொம்ப ஜாலியாக இருக்கும்.

சில குடும்பங்களில் கணவன்-மனைவி உறவு வாத்தியார் மாணவி என்ற நிலையில் அமைந்து விடுகிறது. சமையலில் பெயர் வாங்க வேண்டும். நடை, உடை, பாவனையில் அவர் பாராட்ட வேண்டும். விழுந்து விழுந்து உபசரித்து `சபாஷ்’ வாங்க வேண்டும் என்ற ரீதியில் அத்தகைய மனைவிகள் நடந்து கொள்கிறார்கள். இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளும் வாழ்க்கை சிறக்க உதவுவதில்லை.

கடுமையாக மனைவி உழைத்தும், கணவருக்காக தன்னை மாற்றிக் கொண்டும், அதற்குரிய பிரதிபலனை கணவன் வழங்காதபோது அவள் மனமொடிந்து எதிர்மறையாக நடக்கத் தொடங்கி விடுவாள்.

உங்க வீட்டில் நீங்க எப்படி? பயப்படவோ, எப்போதும் பாராட்டுக்காக உழைக்கவோ செய்யாதீர்கள். அன்பை, நட்பை வெளிப்படுத்துங்கள் அது போதும். ஆயிரம் விதத்தில் உங்களுக்கும் பிரிக்க முடியாத இறுக்கத்தை ஏற்படுத்தி விடும்.

பல பெண்கள் திருமணமான புதிதில் கனவணுக்கு பயப்பட்டாலும் காலம் செல்லச்செல்ல கணவனை தன் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள். இயற்கையிலேயே பயந்த சுபாவமுடைய சில பெண்கள் கணவனுக்கு பயந்து வாழக்கூடியவர்களாகவே காலத்தை நகர்த்துகிறார்கள்.

மனைவி தனக்கு பயப்பட வேண்டும் என்று எண்ணுகின்ற பழங்கால தலைமுறையினரின் அணுகுமுறையை இக்கால இளம்தலைமுறை பெரிது படுத்தாமல் இருப்பது உண்மையில் ஆறுதலான விஷயமாக இருந்தாலும் வரதட்சணை போன்ற விஷயங்களில் அவர்களது அடாவடி இன்றைய மனைவிமார்களை பயம் கொள்ளச்செய்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

எப்போதும் கணவனுக்கு பயந்து வாழும் மனைவியால் கணவன் தவறான பாதையில் செல்லும்போது அவனை திருத்தி நேர்வழிக்கு கொண்டு வர முடியாது. இது குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றதல்ல.. கண்வன் தவறு செய்தால் துணிச்சலுடன் அதை திருத்தக்கூடியவளாக மனைவி இருந்தால்தான் குடும்பம் குடும்பமாக இருக்கும்.

எது எப்படி இருந்தாலும் கணவன் மனைவிக்கோ அல்லது மனைவி கணவனுக்கோ பயந்து கொண்டே இருந்தால் வாழ்க்கை சுவைக்காது. கணவன் மனைவிக்குள் பயமில்லாத வாழ்க்கை இருந்தால்தான் தாம்பத்தியமும் இனிதாக இருக்கும். என்பதை மறக்காதீர்கள்.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 72 = 81

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb