Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

காதல்கணவனாய், காதல்மனைவியாய் மாறுங்கள்!

Posted on October 22, 2011 by admin


 காதல்கணவனாய், காதல்மனைவியாய் மாறுங்கள்!  

இலக்கியம் பல படித்து

இரவு பல வழித்து

கவிதை பல படைக்கிறேன்… ஆனாலும்

தொலைபேசியில் நீ சொல்லும்

.ம்.. என்பதற்கு ஈடான

கவிதை என்னிடம் இல்லை.

 

இனிக்க இனிக்க உன்

நினைவுகளை குடித்துக் கொண்டே

இருப்பதால்…

சர்க்கரை வியாதி வந்துவிடுமோ

என்ற பயம் எனக்கு.

 

இரண்டு வரி கவிதை சொன்னால்

நான்கு முறை வெட்கப் படுவாயே

உன் வெட்கத்தை கடிதம்

மூலம் எப்படி

வெளிக்காட்டப் போகிறாய்…?

   காதல்கணவனாய், காதல்மனைவியாய் மாறுங்கள்!   

கள்ளக்காதல், காணாமல் போகும் காதலர்கள் என்று பல்வேறு வகை காதல்கள் இந்த சமுதாயத்தை மிரட்டிக் கொண்டிருக்கின்றன.

அன்று, காதலில் தோற்ற தேவதாஸ், காதலை கல்லறையில் முடித்துக்கொண்ட லைலா-மஜ்னு, காதல் மனைவிக்காக உலக அதிசயத்தையே எழுப்பிய ஷாஜஹான்… என்று காதலால் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர்.

இவர்களை தலைமுறை தலைமுறையாக நினைவில் கொள்ளும் நாம், மனைவியை மட்டும் காதலியாய் ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம்.

மனைவியை விட்டு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தாலும் மனைவியின் மீது கொஞ்சமும் காதல் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது இன்றைய காலத்தின் கட்டாயம். கீழ்க்காணும் கவிதை வரிகலாள் போன்றவைகளை மனைவியின் மீதுள்ள காதலை எழுதித்தள்ளுங்கள். உங்கள் மனைவி உங்களை மென்மேலும் காதலிப்பாள்.

“அன்பே

நீ வெளியில் வராதே;

வண்ணத்து பூச்சிகளெல்லாம்

நீ தான் மலரென்று

தேனெடுக்க

முற்றுகையிட்டுவிடும்”

என்று, காதலிக்கும் போது காதலியிடம் ஐஸ் மேல் ஐஸ் வைத்தவர்கள்கூட, கடைசியில், ‘அப்படியா நான் சொன்னேன்?’ என்று அரசியல்வாதிகள் ஸ்டைலில் பல்டி அடிப்பதையும் நடைமுறை வாழ்வில் பார்க்க முடிகிறது.

அடிக்கடி மெரீனா பீச்சுக்கு விசிட் அடிக்கும் சிராஜ் அன்றும் அப்படியே அங்கு சென்றிருந்தார். அது மாலைநேரம் என்பதால் குளுமையை அள்ளிக்கொண்டு வந்து வீசிச்சென்றது கடல்காற்று. அந்த இனிமையில் அப்படியே காலாற நடந்து சென்றார்.

ஓரிடத்தில், கரையோரம் படகு ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சிறிது நேரம் அமர்ந் திருக்கலாம் என்று நினைத்தவர் அதை நோக்கி நடந்தார்.

படகை நெருங்க நெருங்க இரண்டு பேர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது.

“உனக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். நம்மைக் கண்டு ஓடிப்போகும் அந்த சூரியனைக் கூட உனக்கு பிடித்து தருவேன். ஏன்… இன்னும் சிறிதுநேரத்தில் நம்மை காண வர இருக்கும் நிலவைக்கூட பிடித்து உனக்கே உனக்காய் பரிசளிப்பேன்” என்று காதல் வசனம் பேசிக்கொண்டிருந்தான் அந்த காதலன்.

அதற்கு காதலி சொன்னாள்…

“எனக்கு அதெல்லாம் வேண்டாம். நீ உன் மனைவியை டைவர்ஸ் செய்தால் போதும்” என்றாள்.

‘காதல் என்கிற போர்வையில் இப்படி கலாச்சாரத்தை சீரழிக்கிறார்களே’ என்று கோபம் கொண்ட சிராஜ், அவர்களை லெப்ட் ரைட் வாங்க நெருங்கினார்.

அவர்களை பார்த்த அடுத்த நொடியே அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டார். அங்கிருந்த பெண் வேறு யாருமல்ல; சிராஜின் மனைவிதான்!

சென்னை போன்ற நகரங்களில் இப்படி ஓப்பனாகவே நடமாடும் கள்ளக்காதலர்கள், பல இடங்களில் ரகசியமாக சந்தித்துக்கொள்கிறார்கள் என்கிறார்கள் போலீசார்.

இப்படிப்பட்ட கள்ளக்காதல் அதிகரிக்க காரணம் என்ன? அன்பு கிடைப்பதில் ஏற்பட்ட பற்றாக்குறைதான்!

பீச்சுக்கு அடிக்கடி காற்று வாங்க வந்த சிராஜுக்கு, கூடவே மனைவியையும் அழைத்து வந்து மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று தோன்றவில்லை. அதனால்தான், அவர் மனைவி இன்னொரு துணையை தேடிவிட்டாள்.

பணம், பணம் என்று பணத்தை மாத்திரமே தேடும் இன்றைய சமுதாயம், அன்புதான் பெரிய பொக்கிஷம் என்பதை மறந்தே போய்விட்டது.

ஒருவர் ஞானியைப் பார்க்கச் சென்றார்.

“திருமணம் ஆன புதிதில் கலகலப்பாக, அன்பாக என்னிடம் பேசிய என் மனைவி இப்போது என்னை கண்டாலே எரிந்து விழுகிறாள். நான் என்ன செய்வது?” என்று கேட்டார்.

“தினமும் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டு மனைவியிடம் கொடு. மீண்டும் கல கலப்பாக பேசுவாள் உன் மனைவி” என்றார் சாமி யார்.

கேள்வி கேட்டவருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

`மனைவி எரிந்து விழு வது ஏன் என்று கேட்டால், முதலிரவுக்கு செல்லும் வழிமுறையை கூறுகிறாரே இந்த ஞானி; ஒருவேளை போலி ஞானியாக இருப் பாரோ?’ என்று கூட சந்தேகித்தார்.

தனது சந்தேகத்தை சாமியாரிடம் வெளிப்படுத்தாமல் வெளியேறினார். செல்லும் வழியில் பூக்கடையை அவர் பார்த்துவிட, ‘இன்று ஒருநாள் தான் சாமியார் சொன்னபடி செய்து பார்ப்போமே’ என்று ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு போனார், வீட்டுக்கு!

வீட்டு வாசலில் காலை வைக்கவே அவருக்கு பயமாக இருந்தது. எப்போதும் எரிந்து விழுபவள், இன்னிக்கு கொஞ்சம் அதிகமாக எரிந்து விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்தார்.

இருந்தாலும் மனதை ஒருவழியாக தேற்றிக்கொண்டு வீட்டுக்குள் சென்றார்.

கணவனை மல்லிகைப்பூவுடன் பார்த்த அவரது மனைவியின் முகத்தில் திடீர் மகிழ்ச்சி, பரவசம்!

ஓடி வந்து மல்லிகைப்பூவை வாங்கியவள், “என்னங்க… இந்த பூவை நீங்களே என் தலையில் வைத்து விடுங்களேன்” என்று கொஞ்சினாள், சிணுங்கினாள்.

அவருக்கு நடப்பது கனவா? நனவா? என்ற சந்தேகமே வந்துவிட்டது. ‘ஞானி கொடுத்த ஐடியா நல்லா ஒர்க்அவுட் ஆகுதே’ என்று தனக்குள் சிலிர்த்துக் கொண்டார்.

மறுநாளும் மல்லிகைப்பூவை வாங்கிச் சென்றார். அப்போதும் அவரை அன்பாக வர வேற்று உபசரித்தாள் மனைவி.

சிலநாட்கள் இப்படியே கழிந்தது.

ஒருநாள், தனக்கு மல்லிகைப்பூ ஐடியா கொடுத்த ஞானியைப் பார்க்கச் சென்றார்.

“நீங்க சொன்னபடியே மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு போனேன். வழக்கமாக, என்னை கண்டுகொள்ளாத என் மனைவி என்னை விழுந்து, விழுந்து கவனித்தாள், அன்பொழுகப் பேசினாள். எப்படி அவள் மாறினாள்?” என்று கேட்டார்.

“அன்பை ஒருவரிடம் இருந்து தானாக பெற்றுவிட முடியாது. நாமும் அன்பாக இருந்தால் தான் அடுத்தவர்களிடம் அதே அன்பை பெற முடியும்” என்று கூறிய ஞானி, “ஆமாம்… நான் சொல்வதற்கு முன்பு கடைசியாக எப்போது உன் மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு போனாய்?” என்று கேட்டார்.

சிறிதுநேரம் யோசித்தவர், “எப்படியும் ஏழு எட்டு மாதம் இருக்கும்” என்றார்.

அதை சுட்டிக்காட்டிய ஞானி, “மனைவிக்கு தங்கம், வெள்ளி, பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்துதான் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பது கிடையாது. அன்பாக ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக்கொடுத்தாலே போதும். அன்புக்கு அவ்வளவு பவர் இருக்கிறது. இனியாவது மனைவியிடம் அன்பாக இரு. அவளும் உன்னிடம் அன்பாக இருப்பாள்” என்று வாழ்த்தி அனுப்பினார்.

நீங்களும் உங்கள் மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க வேண்டுமா? ஃபாலோ மீ……

வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தாலும் மனைவியின் மீதுள்ள காதலை அவ்வப்போது தெரியப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அது இன்றைய காலத்தின் கட்டாயம். அதற்கு கீழ்க்காணும் கவிதைகள் போன்றவை கூட உங்களுக்கு உதவலாம். 

இலக்கியம் பல படித்து

இரவு பல வழித்து

கவிதை பல படைக்கிறேன்… ஆனாலும்

தொலைபேசியில் நீ சொல்லும்

“ம்..” என்பதற்கு ஈடான

கவிதை என்னிடம் இல்லை!

   

இனிக்க இனிக்க உன்

நினைவுகளை குடித்துக் கொண்டே

இருப்பதால்… 

 
சர்க்கரை வியாதி வந்துவிடுமோ 

என்ற பயம் எனக்கு!

 

நான்கு முறை வெட்கப் படுவாயே!

உன் வெட்கத்தை கடிதம்

மூலம் எப்படி

வெளிக்காட்டப் போகிறாய்

வெளிக்காட்டப் போகிறாய்…

 

o நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள்.

o முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாக இருந்து விடாதீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்த விஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும்ஒன்றாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தால், அதில் வரும் கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில் மனைவி இருக்கிறாள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள்.

o எடுத்துக்கொண்டால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரி யாமல்கடலை’ போட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் விஷயத்தில் பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது. ஒன்றுமே இல்லாத விஷயத்தைக்கூட பலமணிநேரம் பேசு வார்கள். அதே போன்று நீங்களும் பேசுங்கள். அதற்காக, ஒன்றும் இல்லாத விஷயத்தை பேசுங்கள் என்று அர்த்தம் இல்லை. உங்கள் குடும்பத்துக்கு தேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்த விவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம்.

o பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி அந்த பூக்களை உங்கள்அன்பான மனைவிக்கு வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.

o சம்பளம் பெறுவோர், சம்பளம் வாங்கிய நாள் அன்று மல்லிகைப்பூவுடன் மனைவிக்கு பிடித்த ஸ்வீட்டையும் வாங்கிக்கொண்டு கொடுத்தால் அவர்களதுமனைவி அடை யும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.

o உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினைத்திருங்கள். ஒருகாதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வானோ, அதே போன்று நடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள்.

o உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா? நிறைவேறாத ஆசைகள் இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன்’ என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள் இப்படி கேட்டமாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள்.

o மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்தநேரம், அவள் மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலே பொழியும்.

மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம் அன்பாக இருப்பாள். நீங்கள் அவளிடம் ஒரு காதல்கணவனாய் பழகும்போது அவளும் உங்கள் காதல்மனைவியாய் மாறிவிடுவாள்!

ஆகவே காதலியுங்கள், உங்கள் இல்லற பார்ட்னரை!

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb