Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நூலில் கோர்க்கப்பட்ட மணிமாலை அறுந்து ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக விழுவதுபோல்,…

Posted on October 9, 2011 by admin

“போர்க்களத்தில் கிடைக்கும் ஙனீமத் பொருளைத் தனது செல்வமாகக் கரதப்படுமானால்,

அமானிதமாக வைக்கப்பட்ட பொருளை ஙனீமத் பொருளாக எண்ணப்படுமானால்,

தன்னிடம் பாதுகாப்பதற்காகக் கொடுத்து வைக்கப்பட்ட அமானிதத்தை உரியவரிடம் ஒப்படைக்காமல் தான் உபகோப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்படுமானால்,

ஸகாத்தை வரியாக கருதப்படுமானால்,

தீனுக்காக இல்லாமல் உலக ஆதாயத்துக்காகக் கல்வி கற்கப்படுமானால்,

ஒருவர் தன் மனைவிக்கு வழிபட்டு தாய்க்கு மாறு செய்யத் துவங்கினால்,

தன் நண்பனை நெருக்கமானவனாகவும் தந்தையை தனக்குத் தூரமாகவும் கருதுவானேயானால்,

மஸ்ஜித்களில் பகிரங்கமாகக் கூச்சல் போடப்படுமானால்,

பெரும்பாவி ஒரு சமுதாயத்தினருக்குத் தலைவனாக ஆக்கப்படுவானேயானால்,

ஒரு கூட்டத்தினரின் நிர்வாகப் பொறுப்பு மிகக் கேவலமானவனிடம் ஒப்படைக்கப்படுமேயானால்,

ஒருவனின் கெடுதியை விட்டும் தப்பிப்பதற்காக அவனுக்கு கண்ணியமளிக்கப்படுமேயானால்,

மது அருந்துவது சர்வ சாதாரணமாக ஆகிவிடுமேயானால்,

சமுதாயத்தின் முன்னோர்களை பின்னோர்கள் தூற்றுவார்களேயானால்,

செந்நிறக்காற்று, பூமியதிர்ச்சி, பூமியில் புதையுண்டு போதல், மனிதர்களின் முகங்கள் உருமாற்றப்படுதல்,

வானத்திலிருந்து கல்மாரிப் பொழிதல் ஆகிய வேதனைகளை எதிர்பார்த்திருங்கள்.

அதே போல் நூலில் கோர்க்கப்பட்ட மணிமாலை அறுந்துவிட்டால் ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக விழுவதுபோல், தொடர்ச்சியான வேதனைகள் வருவதையும் எதிர்பார்த்திருங்கள்.’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள், நூல்: திர்மிதீ)

 

எந்த சமுதாயத்தில் ஙனீமதட பொருளில் பகிரங்கமான மோசடி நடைபெறுமோ, அவர்களின் உள்ளங்களில் எதிரியைப் பற்றிய திடுக்கம் போடப்படும்.

விபச்சாரம் எந்த சமுதாயத்தில் பொதுவாகப் போய்விடுமோ, அவர்களில் மரணம் அதிகரித்துவிடும்.

எந்தச்சமுதாயம் அளவை, நிறுவையில் குறைவு செய்யுமோ, அவர்களுடைய உணவு எடுக்கப்பட்டுவிடும். அச்சமுதாயத்தினரின் தேவைகள் நிறைவேறாமல் போய்விடும்.

தீர்ப்பு வழங்குவதில் எந்தச் சமுதாயம் அநியாயம் செய்யுமோ, அவர்களில் ரத்தம் ஓட்டுவது அதிகரித்துவிடும்.

எந்தச்சமுதாயம் ஒப்பந்தத்தை மீறுமோ, அவர்களின்மீது எதிரிகள் சாட்டப்படுவர்.’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள், நூல்: முஅத்தா)

 

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:

“முஸ்லிம்களின் கூட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பானவர், ஒருவரை தன் உறவினர் அல்லது நண்பர் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே முஸ்லிம்கள் மீது அதிகாரியாக நியமித்து விடுவாராயின், அவர் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கும். மறுமைநாளில் அவன் தரப்பிலிருந்து எந்தவித மீட்புப்பணம் கொடுக்கப்பட்டாலும் அல்லாஹ் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டான். இறுதியில் அவனை நரகத்தில் வீசியெறிவான்!” (அறிவிப்பாளர்: யஸீத் பின் அபீஸுயான் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: கிதாபுல் கராஜ், இமாம் அபூ யூஸுஃப் ரஹ்மதுல்லாஹி அலைஹி)

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

95 − = 87

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb