Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இன்னுமா கைக்கூலி?

Posted on September 26, 2011 by admin

[ “மணம்புரிந்து கொள்பவர்கள்

மாநபியின் கூட்டத்தார்”

எனத்தெரிந்தும் பணம்கேட்போர்

இழிதகைமை என்னசொல்ல?

 

பெற்று வளர்ப்பதற்கும்

பெண்மகளைக் காப்பதற்கும்

உற்றதுயர் சுமந்தவரின்

உள்ளம் சபிக்காதா?

 

சன்மார்க்கச் சேயாகி

சமுதாயத் தாயாகப்

பொன்வாசல் அமைப்பவளைப்

பொருள்பெற்றா மணப்பார்கள்?]

 

இன்னுமா கைக்கூலி?

 

ஏம்பல் தஜம்முல் முஹம்மது .

 

அல்லாஹ் ஒருவனென

அவன்தூதர் முஹம்மதென

சொல்லும் உறுதியினர்

சுரண்ட நினைப்பதுவோ?

  

ஒப்புக்கோ மார்க்கம்?

ஊருக்கோ உபதேசம்?

அப்பழுக்கை நீக்காமல்

அளப்பளக்கும் பேச்செதற்கு?

  

சமுதாய நடுநிலையும்

சன்மார்க்க நெறிமுறையும்

அமுதாகும்; அதற்குள்

அழிக்கும் விஷக்கலப்பா?

 

“மார்க்கத்தில் பாதி”யென

மதிக்கும் திருமணத்தில்

பேர்த்துப் பணம்பறித்தல்

பெருங்கயமை ஆகாதோ?

 

நபிவழியாம் திருமணத்தை

நடத்துகையில் அதற்குரிய

அபிவிருத்தி கைக்கூலி

யாலழுக்காய் ஆவதுவோ?

 

வேசிக்கும் பணம்கொடுப்பார்;

வீட்டு விளக்கிடத்தில்

’காசுகொடு!’ எனக்கேட்டால்

காறி உமிழாரோ?

 

“இல்லாள் இலாதிருத்தல்

ஏழைமையே” அதைமாற்றும்

நல்லாள் வருகைக்கா

நாணமின்றிப் பணம்கேட்பார்?

 

“மணம்புரிந்து கொள்பவர்கள்

மாநபியின் கூட்டத்தார்”

எனத்தெரிந்தும் பணம்கேட்போர்

இழிதகைமை என்னசொல்ல?

 

பெற்று வளர்ப்பதற்கும்

பெண்மகளைக் காப்பதற்கும்

உற்றதுயர் சுமந்தவரின்

உள்ளம் சபிக்காதா?

 

சன்மார்க்கச் சேயாகி

சமுதாயத் தாயாகப்

பொன்வாசல் அமைப்பவளைப்

பொருள்பெற்றா மணப்பார்கள்?

 

இருந்தால் கரைசேர்வர்;

இல்லையெனில், மூழ்கிடுவார்

வருந்தித் துடிதுடித்தல்

வரலாறாய்த் தொடருவதா?

  

பிறர்துன்பம் அறியீரோ?

பெண்மகவைப் பெறவிலையோ

உறவை வளர்ப்பதற்கே

உதவிடுமோ கைக்கூலி?

 

கல்லும் கரைந்துருகும்

கடும்பாம்பும் மனமிரங்கும்

சொல்லுமிந்தக் கைக்கூலி

சுகம்கண்டார் இரங்குவரோ?

 

கள்ளத்தால் பிறர்செல்வம்

கவருவதே கைக்கூலி!

உள்ளம் அவர்க்கேது?

உபதேசம் ஏறாது!

 

வெள்ளமெனப் பெருகும்

வேதனையின் கண்ணீரைக்

கொள்ளி நெருப்பென்று

குறிப்பறிய அவர்மாட்டார்!

  

முதிர்கன்னி ஆனபின்னும்

முடியாத திருமணத்தால்

கதிகலங்கி நிற்பவர்கள்

கரைசேர வழியிலையே!

 

கரைசேர வழியின்றிக்

கதிகலங்கி நிற்பவர்க்கு

முறைசெய்தே ஆறுதலை

முன்வைக்க மொழியிலையே!

 

‘கொள்கை இது’வென்று

கொள்ளாமல் சமுகத்தின்

கொள்ளையராய்த் திரியும்கைக்

கூலியரை அனுமதியோம்!

  

நல்லோர் மவுனத்தால்

நடக்காத நற்செயலால்

எல்லார்க்கும் தானே

இழிவுப் பழிசூழும்?

  

இன்னும் இருப்பதுவோ

எமக்குள்ளே கைக்கூலி?

என்னருமைச் சோதரரே,

எழுவீர் ஒழிப்பதற்கே!

 

-ஏம்பல் தஜம்முல் முஹம்மது.

source: http://www.mudukulathur.net/?p=7799

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

72 + = 79

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb