Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இறைத்தூதரின் பிரார்த்தனை வேண்டும்

Posted on August 29, 2011 by admin

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரார்த்தனை வேண்டும்

சஅத் இப்னு உபாதா ரளியல்லாஹு அன்ஹு ஓர் உன்னதமான நபித்தோழர். அன்சாரிகளின் தலைவர்களில் ஒருவர். அருமையான ஸஹாபி. ஒருமுறை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சஅதைப் பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு வந்தார்கள். வீட்டின் ஒரமாக நின்று கொண்டார்கள். ”அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறினார்கள். சஅத் ரளியல்லாஹு அன்ஹு உள்ளே உட்கார்ந்து இருந்தார்கள். ஆனால் மெதுவாக பதில் கூறினார்கள்.

பதில் ஏதும் வராததால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீண்டும் ஒருமுறை ஸலாம் கூறினார்கள். சாதாரணமாக ஒருவரைப் பார்த்து நாம் ஸலாம் கூறினால் அவருக்காக நாம் துஆ செய்கிறோம் என்று தான் பொருள்! ஒரு முஸ்லிமுக்காக இன்னொரு முஸ்லிம் துஆ செய்தால் அல்லாஹ் அதனை உடனே ஏற்றுக் கொள்வான். சாதாரண முஸ்லிமுடைய துஆவையே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்றால் அல்லாஹ்வுடைய தூதர் துஆ செய்தால் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பானா? கண்டிப்பாக ஏற்றுக் கொள்வான். ஆகையால் இந்த முறையும் சஅத் ரளியல்லாஹு அன்ஹு சப்தமிட்டு பதில் சொல்லவில்லை. மெதுவாக பதில் கூறினார்கள்.

சஅதுடைய மகன் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தார். ”தந்தையே! ரசூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸலாம் கூறுகிறார்கள். நீங்கள் பதில் சொல்லாமலேயே இருக்கிறீர்களே!” என்று கேட்டார்.

”….அமைதியாக இரு! இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) ஸலாம் கூறினால் நமக்கு நலம் ஏற்படும்.”

”சஅத்!” மூன்றாவது முறையும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸலாம் கூறினார்கள். மூன்றாவது முறையும் மெதுவாகவே சஅத் ரளியல்லாஹு அன்ஹு பதில் கூறினார்கள். மூன்று முறை ஸலாம் கூறியும் பதில் வராவிட்டால் நாம் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும். (அவ்வாறே நாம் யாரையாவது செல்ஃபோனில் கூப்பிடும் போதும் மூன்றுமுறை கூப்பிட்ட பிறகும் அவர் செல்ஃபோனை வைத்துவிட வேண்டும்.)

மூன்றுமுறை கூப்பிட்டும் பதில் வராததால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கிருந்து கிளம்பத் தொடங்கினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போவதைக் கண்ட சஅத் ரளியல்லாஹு அன்ஹு ஓடோடிச் சென்று ”வஅலைக்கும் அஸ்ஸலாம்” என்று சப்தமாகக் கூறினார்கள்.

”இறைத்தூதர் அவர்களே! தங்களுடைய துஆவை அதிகமாகப் பெற்றுக் கொள்ளவேண்டும், அதன் மூலமாக அல்லாஹ்வுடைய அருளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் நான் சப்தமாக பதில் கூறாமல் மெதுவாக பதில் கூறினேன். ஆகையால் தவறாக எடுத்துக் கொள்ளாமல் என் வீட்டுக்கு வாருங்கள்!!” இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் சந்தோஷம் அடைந்தார்கள். இறைத்தூதரை சந்தோஷம் அடையச் செய்யமுடியும் என்றால் அதனைவிடப் பெரும் சந்தோஷம் என்னவாக இருக்கப் போகின்றது?

source: http://islamiyappaarvai.blogspot.com/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

22 − = 14

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb