Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஆடை பெண்களின் முக்கிய தற்காப்பு ஆயுதம்

Posted on August 29, 2011 by admin

ஆடை பெண்களின் முக்கிய தற்காப்பு ஆயுதம்

வீடே உலகம் என்று முடக்கப்பட்டுக் கிடந்த பெண்கள் உலகமே வீடு என விசால அறிவோடு வெளிப்பட்டுள்ள இன்றைய காலத்திலும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்தபடியே உள்ளன என்பது அவலகரமான உண்மையாகும்.

பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும் பெண்கள் முன்வந்துவிட்ட இந்த காலத்திலும் பெண்கள் மீதான வக்கிரத் தாக்குதல்கள் குறையவில்லை. அடுப்பங்கரையில் மட்டுமே அடைந்து கிடந்த பெண்கள் ஆட்சி மன்றங்களில் அடிபதித்திருக்கும் இந்த காலத்திலும் பெண் முன்னேற்றம், பெண் விடுதலை ஆகியவை குறித்த சரியான வரையறைகள் பெறப்படாமலே உள்ளன.

ஆண்களை விடக் குறைவான அளவில் பெண்கள் உடை உடுத்துவதும், ஒழுக்கச் சீர்கேடுகளில் ஆண்களையும் விட ஒருபடி மேலே நிற்பதும் தான் பெண் விடுதலையின் சின்னங்கள் என ஒரு சில பெண்ணியவாதிகள் பேசுவதும், எழுதுவதும் பெண்ணினத்தை பாதிப்புகளின் படுகுழியில் தள்ளியுள்ளன என்று சொன்னால் மிகையாகாது.

வீட்டு நிர்வாகப் பணிகளான சமையல், குழந்தை பராமரிப்பு, பெரியோரைப் பேணுதல் போன்ற பணிகளெல்லாம் பெண்ணடிமைத்தனத்தின் சின்னங்கள், வீட்டு வேலைகளை பெண்கள் செய்வதே இழிவு, வெளியிடங்களில் பணிபுரியச் செல்வதே பெண் விடுதலை என்று சில பெண்ணியவாதிகள் வேதாந்திகள் போல கூறி வருகின்றனர்.

தவிர்க்க இயலாத சூழல்களில் குடும்பத்தைத் தாங்கி நிறுத்தும் பொறுப்பு பெண்ணின் மீது சுமத்தப்படும் போது வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்வதை யாரும் குறை கூற முடியாது. ஆடம்பர வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும், பெண் விடுதலை என்ற நோக்கிலும், வலியச் சென்று வெளியிடங்களில் வேலைச் செய்வது பெண்களுக்குப் பெருந்தீமையாக அமைவதை அவர்கள் எண்ணிப் பார்க்க தவறி விடுகின்றனர்.

வீட்டு வேலைகளும், குழந்தை பராமரிப்பும், பெரியோரைப் பேணுதலும் இழிவான செயல்கள் அல்ல என்பதை பெண்கள் விளங்க வேண்டும். வீட்டு நிர்வாகம் செய்யும் பெண்கள் இல்லத்தரசியாகவும், வெளியிடங்களுக்குப் பணிக்குச் செல்கையில் ஆளுமைக்குட்பட்ட ஊழியராகவும் ஆகிவிடும் எதார்த்த நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, தவிர்க்கவியலாத காரணங்களின்றி வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்வதை பெண்கள் தவிர்ப்பது அவர்களின் நிம்மதிக்கு வழிகோலும். பணிக்குச் செல்லும் பெண்கள் பெரும்பான்மையாக பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதை இன்றைய புள்ளி விபரங்கள் துல்லியமாகக் கூறியுள்ளன.

பாலியல் சீண்டல்களுக்கு வக்கிரப் பார்வைகளே முழு முதற் காரணமாக அமைகின்றன. கண்ணியமான உடைகளே என்றும் பெண்களுக்கு முதல் பாதுகாப்பாகத் திகழும். எனவே இதை எல்லாப் பெண்களும் பின்பற்றினால் பெரும்பாலான பாலியல் வக்கிரங்கள் குறைந்துவிடும்.

கண்ணியமான ஆடைகளால் பெண்கள் தன்னைக் தற்காத்துக் கொள்ள வேண்டும். அத்துமீறிச் சீண்டும் ஆண் வக்கிரர்களை எதிர்கொள்ளும் தைரியத்தையும், வீரத்தையும் பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றி: மாலை மலர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 7 = 12

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb