Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மனிதனின் கேள்வியும் அல்லாஹ்வின் பதிலும்

Posted on July 27, 2011 by admin

கேள்வி : அல்லாஹ்வின் சட்டங்கள் கஷ்டமானைவையா?

பதில் : அல்லாஹ் உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகின்றான். ஏனெனில் மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். (குர்ஆன் 4:28)

கேள்வி : குர்ஆனை மாற்ற நபிக்கு உரிமையுண்டா?

பதில் : இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டுவாரும். அல்லது இதை மாற்றிவிடும் என்று கூறுகிறார்கள். அதற்கு என் மனப்போக்கின் படி அதை நான் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை. என் மீது வஹியாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனைக்கு நான் நிச்சயமாக பயப்படுகிறேன் என்று (நபியே) நீர் கூறுவீராக. (குர்ஆன் 10:15)

கேள்வி : நபி ஏழையாகவே வாழ்ந்தாரா?

பதில் : அவன் உம்மை அனாதையாகக் கண்டு, அப்பால் புகலிடம் அளிக்கவில்லையா? இன்னும், உம்மை வழியற்றவராக் கண்டு அவன் நேர்வழியில் செலுத்தினான். மேலும் அவன் உம்மை தேவை உடையோராகக் கண்டு (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவனாக ஆக்கினான். (குர்ஆன் 93:6௮) (ஆரம்ப காலத்தில் இறங்கிய 11வது வஹி)

கேள்வி : வேறு தெய்வங்களை ஏசலாமா?

பதில் : அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள். (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல் வரம்பை மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். (குர்ஆன் 6:108)

கேள்வி : அல்லாஹ் எவருடன் நேரடியாக பேசுகிறான்?

பதில் : அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹியாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதை தன் அனுமதியின் மீது வஹியை அறிவிக்கக்கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை. (குர்ஆன் 42:51)

கேள்வி : எதை பலமாகப் பற்றிப் பிடிக்கும்படி நபிக்குக் கூறப்பட்டது?

பதில் : (நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர். (குர்ஆன் 43:43)

கேள்வி : குற்றவாளிகளுக்கு நரகம் கொஞ்ச காலத்திற்கா?

பதில் : நிச்சயமாக, குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.அவர்களுக்கு அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது. (குர்ஆன் 43:74,75)

கேள்வி : அல்லாஹ் தூரத்தில் இருக்கின்றானா?

பதில் : (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.(குர்ஆன் 2:188)

கேள்வி : எதைப் பின்பற்ற வேண்டும்?

பதில் : (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.

(குர்ஆன் 7:3)

கேள்வி : எல்லா நபிமார்களின் சரித்திரங்களையும் முஹம்மது நபியவர்களுக்கு அல்லாஹ் கூறியுள்ளானா?

பதில் : திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை; ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள். (குர்ஆன் 40:78)

கேள்வி : சூரியன், சந்திரனை வணங்கலாமா?

பதில் : இரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் – இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள். (குர்ஆன் 41:37)

கேள்வி : திக்ர் என்பது எது?

பதில் : நிச்சயமாக, எவர்கள் நல்லுபதேசம் (குர்ஆன்) தம்மிடம் வந்த போது அதை நிராகரித்தார்களோ (அவர்கள் உண்மையை உணர்வார்கள்) ஏனெனில் அதுவே நிச்சயமாக மிகவும் கண்ணியமான வேதமாகும். (குர்ஆன் 41:41)

கேள்வி : நூஹு நபிக்கு போதிக்கப்பட்டது எது?

பதில் : நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்’ என்பதே – இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சமையாகத் தெரிகிறது – தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் – (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். (குர்ஆன் 42:13)

கேள்வி : தீமைகளை தேடிக்கொள்வது யார்?

பதில் : அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.(குர்ஆன் 42:30)

கேள்வி : நபி மறுமையில் என்ன கூறுவார்?

பதில் : “என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார். (குர்ஆன் 25:30)

கேள்வி : அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலர் உண்டா?

பதில் : இன்னும், நீங்கள் பூமியில் (எங்கு தஞ்சம் புகுந்தாலும்) அவனை இயலாமல் ஆக்குபவர்கள் இல்லை; மேலும், உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர, பாதுகாவலனோ, உதவிபுரிபவனோ இல்லை. (குர்ஆன் 42:31)

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 4

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb