Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஏன் தனிமை? ஒதுங்கி வாழாதீர்கள்!

Posted on July 25, 2011 by admin
ஏன் தனிமை? ஒதுங்கி வாழாதீர்கள்!

சிலருக்கு எப்போதுமே தனிமை பிடித்த விஷயம். மணிக்கணக்கில் தனிமையில் இருக்க விரும்புவார்கள்.

எதற்கு தனிமை? தன்னைத்தானே சிறைப்படுத்திக்கொள்கிற மாதிரி எதற்காக தீவு மாதிரி மற்றவர்களிடம் இருந்து துண்டித்துக்கொள்ள வேண்டும்?

கேள்விகளை இதுமாதிரியான தனிமை விரும்பிகளிடம் கேட்டால் இவர்களிடம் இருந்து உடனடியாக பதில் வராது. அமைதி காப்பார்கள். அந்த அமைதிக்குப் பின்னால் ஒரு ஆழமான சோகம் இருக்கும். அது என்னவென்று அத்தனை சீக்கிரம் வெளிப்படுத்திவிட மாட்டார்கள்.

மற்றவர்களிடம் தங்களின் விஷயங்களை சொல்லும்போது அது வெளியரங்கமாகி இன்னும் விபரீதத்தை ஏற்படுத்தும். அதன்பிறகு நாம் தவறாக விமர்சிக்கப்படுவோம் என்கிற அவமானத்தை தவிர்க்கிற போக்கே பயத்துக்கு காரணம்.

சரி, மனம் விட்டுப்பேச ஒருவர் கூடவா இல்லாமல் போய் விடுவார்கள்? இருப்பார்கள். ஆனால் இவர்கள் மனம் விட்டுப் பேசினால் தானே. பொதுவான விஷயம் பேசுவார்கள். நாட்டு நடப்பு பற்றிக்கூட அவ்வப்போது விசாரித்துக் கொள்வார்கள். அதே நேரம் தங்கள் விஷயம் என்று வரும்போது மட்டும் வாயை இறுக மூடிக் கொண்டு விடுவார்கள்.

ஒரு விஷயத்தை சரியா, தவறா என்று கணிப்பதில் ஏற்படுகிற குழப்பமே இவர்களின் விஷயங்களை இருட்டுக்குள் தள்ளி வைக்கின்றன. விடை வராத கணக்கை போட்டுப் போட்டுப் பார்த்து கால நேரத்தை வீணடிக்கிற மாதிரி தீர்க்கமுடியாத விஷயங்களை தங்களுக்குள்ளாக போட்டுப்போட்டு குழம்பிக்கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களில் பலர் தங்கள் மனைவி, பிள்ளைகளிடம் கூட இது விஷயமாய் கலந்து பேசமாட்டார்கள். இதுமாதிரியான அணுகுமுறைகளில் ஒரு நாள் திடீரென பிரச்சினை வெடித்து கடைசியில் அமளிதுமளியில் கொண்டு விட்டுவிடும். அதோடு இவர்களால் ஒட்டுமொத்த குடும்பமும் மீட்பு இல்லாமல் அவதிப்படுகிற நிலைமையும் ஏற்பட்டு விடக்கூடும் சிலர் இருக்கிறார்கள்.

பேசினாலே வம்பு என்று நினைத்துக்கொள்கிற ரகம் இவர்கள். பல நேரங்களில் அமைதி விரும்பிகளாகவே இருந்து விடுவார்கள். ஆனால் இவர்களிடம் விஷயம் இருக்கும். எப்போது எங்கே பேச வேண்டுமோ அங்கே கட்டாயம் இவர்கள் குரல் நேரத்துக்கு ஒலிக்கும்.

இது நிச்சயமாக ஆபத்தில்லாத அமைதி. தேவையில்லாத நேரங்களில் எல்லாம் எதற்கு வீணாகப் பேசி பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிற ரகமாக இவர்கள் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் மற்றவர்கள் பேசுவதை கேட்டுக் கொள்வார்கள். அதில் தங்கள் கருத்தை சொல்லாவிட்டாலும் அதில் உள்ள சாராம்சத்தை கிரகித்துக்கொண்டு விடுவார்கள். அது மட்டுமின்றி ஒருவர் அதிகம் பேசுவதால் எந்த மாதிரியான புதுப்புது பிரச்சினைகளில் சிக்குகிறார்கள் என்பதையும் அவர்களால் சட்டென கிரகித்துக் கொண்டுவிட முடிகிறது.

சிலருக்கு நண்பர்கள் அமைய மாட்டார்கள். தவறிப்போய் அப்படி அமைந்தாலும் அதை ஸ்டெடி பண்ணிக்கொள்ளத் தவறி விடுவார்கள். இவர்கள் டேஸ்ட்டுக்கும் நண்பர்கள் டேஸ்ட்டுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அதனாலும் தனிமைப்படுத்தப்படும் இவர்கள் அதையும் நல்லதுக்கென்றே எடுத்துக் கொள்வார்கள். வீட்டில் இருந்து ஆபீஸ், ஆபீஸ் விட்டால் வீடு என்கிற உணர்வைக் கொண்டிருக்கிற பலரும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் தான்.

கலகலப்பாக பேசுவது என்பது சிலருக்கு கைவந்த கலை. ஒரு வீட்டுக்குள் இப்படி கணவன்-மனைவி இருவரில் ஒருவர் கலகலப்புப் பேர்வழியாகவும் அடுத்தவர் அமைதி விரும்பியாகவும் இருந்தால், வீட்டில் ஒரு வித அசாதாரண அமைதி குடிகொண்டிருக்கும். கலகலப்புக்கு மவுனம் ஆட்சி செய்கிற இடத்தில் பெரும்பாலும் வேலை இருக்காது

ஒதுங்கி ஒதுங்கி வாழாதீர்கள்!

ஒதுங்கி ஒதுங்கி வாழ்வதுதான் வாழ்வா? தேங்கியிருந்து கொண்டு நாளை என்னும் கனவில் வாழ்வதுதான் வாழ்வா? எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி வைப்பதுதான் வாழ்வா? இல்லை எப்போதும் செயல் புரிந்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை, நதி போல ஓடிக் கொண்டிருப்பதே வாழ்க்கை, பலர் வாழ்க்கையை பதுங்கிக்கொள்ளும் இடமாகவே வைத்திருக்கின்றனர். ஓடிக்கொண்டிருப்பதில் தான் உத்வேகமும், உற்சாகமும் இருக்கும், புத்துணர்ச்சியும் புது வேகமும் இருக்கும். செயல்பட தயங்குகிறவர்கள் அவைகளையெல்லாம் அலைச்சல்களாக நினைத்து அடங்கியிருக்கிறார்கள்.

எதிலும் ஆர்வமில்லை, எதையும் தேடி போக மனமில்லை, அதுவாக வரட்டும் பார்க்கலாம் என்று அமர்ந்திருந்தால், அப்படி எதுவும் வந்து விடாது, எதற்கும் சோம்பல், எதை செய்யவும் ஆர்வமின்மை இவைகளுக்கெல்லாம் காரணம் மனத்தளர்வு அப்படி என்னதான் கிடைக்கப் போகிறது என்ற சலிப்பு, இப்படி தன்னம்பிக்கையில்லாமல் முன்னோக்கி நடக்காமல் பின்னோக்கி நடப்பவர்கள் விழித்துக் கொள்ளுங்கள், எதுவும் தானாக வருவதில்லை எதையும் நாம்தான் கொண்டு வர வேண்டும் என்பதை நம்புங்கள்.

வாழ்வு என்பது ஒரு துடிப்பு, வாழ துடிக்கிறவனே வாழ கற்றுக்கொள்கிறான், எதிலும் எதிர் நீச்சல் போடுகிறான். உங்களுக்குள்ளே ஒரு துடிப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், வாழ வேண்டும், முன்னேற்றம் வேண்டும் என்ற துடிப்பு ஏற்படும் போது தயக்கம், சோம்பலெல்லாம் காணாமல் போய் விடும். செயல்களில் எளிதானது, கடினமானது என்று எதுவும் கிடையாது, நாம் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது, எனவே சோர்வு, அலைச்சல், என்று எடுத்துக் கொள்ளாமல் ஓடிக்கொண்டிருங்கள்

வெற்றியில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட அந்த வெற்றியை நோக்கி ஓடுவதில்தான் அதிக மகிழ்ச்சி இருக்கிறது. மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் ஒரு செயலை செய்ய வேண்டுமானால், அடுத்தவர்களின் தூண்டுதல்களினால் இல்லாமல் நம்க்குள்ளிருந்து ஏற்படும் உந்துதலினால் செயல்பட வேண்டும். உள்ளுணர்வுகளின் தூண்டுதல்களை போன்ற வலைமை வெளியே வேறு எங்கிருந்தும் கிடைப்பதில்லை, எந்த திடமான முடிவும் நம்மிலிருந்துதான் ஆரம்பிக்கப் படவேண்டும்.

வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களெல்லாம், நம்மை உருவாக்கவே ஏற்படுகிறது, அதில் சோர்ந்து போகாமல் அதிலிருந்து புதிய பாடத்தினை, புதிய வழியினை, கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு செயலை செய்து முடிப்பதற்கு ஒரு வழியல்ல பல வழிகள் உள்ளன. நாம் காணும் துன்பங்கள்தான் நமக்கு புது வழியினை காட்டித்தருகின்றன அதே துன்பத்தில் துவண்டு போனோமானால் எல்லா வாசல்களும் அடைக்கப்பட்டு விடும். அங்கேதான் பல தற்கொலைகளும் நிகழுகின்றன எனவே துவண்டு விடாமல், நம் உள்ளுணர்வுகளால் உலகை வெல்வோம்.

விலகியிருந்து பார்க்கும்போது எல்லாமே, சிக்கல் நிறைந்ததாகவே தெரியும். துணிவோடு புகுந்து சென்றால் வானமும் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கும். எனவே எதற்கும் தயக்கம் வேண்டாம் அஞ்சாமல் புறப்படுங்கள். வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆஒதுங்கி ஒதுங்கி வாழ்வதுதான் வாழ்வா? தேங்கியிருந்து கொண்டு நாளை என்னும் கனவில் வாழ்வதுதான் வாழ்வா? எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி வைப்பதுதான் வாழ்வா? இல்லை எப்போதும் செயல் புரிந்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை, நதி போல ஓடிக் கொண்டிருப்பதே வாழ்க்கை, பலர் வாழ்க்கையை பதுங்கிக்கொள்ளும் இடமாகவே வைத்திருக்கின்றனர். ஓடிக்கொண்டிருப்பதில் தான் உத்வேகமும், உற்சாகமும் இருக்கும், புத்துணர்ச்சியும் புது வேகமும் இருக்கும். செயல்பட தயங்குகிறவர்கள் அவைகளையெல்லாம் அலைச்சல்களாக நினைத்து அடங்கியிருக்கிறார்கள்.

எதிலும் ஆர்வமில்லை, எதையும் தேடி போக மனமில்லை, அதுவாக வரட்டும் பார்க்கலாம் என்று அமர்ந்திருந்தால், அப்படி எதுவும் வந்து விடாது, எதற்கும் சோம்பல், எதை செய்யவும் ஆர்வமின்மை இவைகளுக்கெல்லாம் காரணம் மனத்தளர்வு அப்படி என்னதான் கிடைக்கப் போகிறது என்ற சலிப்பு, இப்படி தன்னம்பிக்கையில்லாமல் முன்னோக்கி நடக்காமல் பின்னோக்கி நடப்பவர்கள் விழித்துக் கொள்ளுங்கள், எதுவும் தானாக வருவதில்லை எதையும் நாம்தான் கொண்டு வர வேண்டும் என்பதை நம்புங்கள்.

வாழ்வு என்பது ஒரு துடிப்பு, வாழ துடிக்கிறவனே வாழ கற்றுக்கொள்கிறான், எதிலும் எதிர் நீச்சல் போடுகிறான். உங்களுக்குள்ளே ஒரு துடிப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், வாழ வேண்டும், முன்னேற்றம் வேண்டும் என்ற துடிப்பு ஏற்படும் போது தயக்கம், சோம்பலெல்லாம் காணாமல் போய் விடும். செயல்களில் எளிதானது, கடினமானது என்று எதுவும் கிடையாது, நாம் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது, எனவே சோர்வு, அலைச்சல், என்று எடுத்துக் கொள்ளாமல் ஓடிக்கொண்டிருங்கள்

வெற்றியில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட அந்த வெற்றியை நோக்கி ஓடுவதில்தான் அதிக மகிழ்ச்சி இருக்கிறது. மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் ஒரு செயலை செய்ய வேண்டுமானால், அடுத்தவர்களின் தூண்டுதல்களினால் இல்லாமல் நம்க்குள்ளிருந்து ஏற்படும் உந்துதலினால் செயல்பட வேண்டும். உள்ளுணர்வுகளின் தூண்டுதல்களை போன்ற வலைமை வெளியே வேறு எங்கிருந்தும் கிடைப்பதில்லை, எந்த திடமான முடிவும் நம்மிலிருந்துதான் ஆரம்பிக்கப் படவேண்டும்.

வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களெல்லாம், நம்மை உருவாக்கவே ஏற்படுகிறது, அதில் சோர்ந்து போகாமல் அதிலிருந்து புதிய பாடத்தினை, புதிய வழியினை, கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு செயலை செய்து முடிப்பதற்கு ஒரு வழியல்ல பல வழிகள் உள்ளன. நாம் காணும் துன்பங்கள்தான் நமக்கு புது வழியினை காட்டித்தருகின்றன அதே துன்பத்தில் துவண்டு போனோமானால் எல்லா வாசல்களும் அடைக்கப்பட்டு விடும். அங்கேதான் பல தற்கொலைகளும் நிகழுகின்றன எனவே துவண்டு விடாமல், நம் உள்ளுணர்வுகளால் உலகை வெல்வோம்.

விலகியிருந்து பார்க்கும்போது எல்லாமே, சிக்கல் நிறைந்ததாகவே தெரியும். துணிவோடு புகுந்து சென்றால் வானமும் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கும். எனவே எதற்கும் தயக்கம் வேண்டாம் அஞ்சாமல் புறப்படுங்கள். வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆக வேண்டும் எனவே வாழ்வை நேசியுங்கள், உங்களை நேசியுங்கள் வாழ்க்கை உங்கள் உள்ளங்கைக்குள் அடங்கி நிற்கும்.

source: http://www.dinasari.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

40 − = 32

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb