Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நீண்டநாட்கள் உயிர் வாழ முதுமையிலும் தாம்பத்தியம்!

Posted on July 6, 2011 by admin

o நீண்டநாட்கள் உயிர் வாழ முதுமையிலும் தாம்பத்தியம்!

o வயது ஒரு தடையல்ல!

o முதுமையில் நோய்களைத் துரத்தும் தாம்பத்யம்

o முதுமையிலும் உடலை ஆரோக்கியமாக மாற்றும் தாம்பத்யம்

o முதுமையிலும் தாம்பத்யம் அவசியம்

o ஆண்மையை – பெண்மையை மிளிரச்செய்ய!

வயதான பிறகும் அன்பான தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்கள் நீண்டநாட்கள் உயிர் வாழ்வதாக ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதயகோளாறுகள், மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் உற்சாகம் அதிகரித்து நோயின் தாக்கம் குறைவதாகவும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    நீண்ட நாள் உயிர் வாழலாம்   

டென்ஷன், மன இறுக்கம், கவலை, படபடப்பு இவைகளுக்கு உடலுறவு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது உடலுறவில் ஈடுபடுவதனால் ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்தினால் ஆஸ்துமா நோயுள்ளவர்களின் பிடிப்புகள் உடனே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன. அவ்வாறே உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களின் இரத்தக்குழாய் இறுக்கமும் தளர்த்தப்பட்டு விடுகிறது.

நரம்பு, தசைபிடிப்பு, முதுகுப் பிடிப்பு, வலி உள்ளவர்களுக்கும் உடலுறவு நல்ல பலனைத் தருகிறது என்று மருத்துவஆராய்ச்சிகள் கூறுகின்றன. வயதான பிறகும் தாம்பத்யத்தில் ஈடுபட்டவர்கள் நீண்ட நாள்கள் உயிர் வாழ்கிறார்கள் என்று கூறுகிறது.

    வயது ஒரு தடையல்ல  

ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுணர்வு, வயது உணர்ச்சியில் வேறுபாடு இல்லை. விந்து விரைந்து வெளிவருவதற்கும், உடலுறவில் இச்சை இல்லாததற்கும் ஆரோக்கியக் குறைவு, நோய், மருந்து மாத்திரைகள், மது, புகையிலை, போதை, சிகரெட், எண்ணெய், கொழுப்பு, அதிக எடை ஆகியவை காரணமாகும்.

மாதவிடாய் நின்றாலும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரக்கும்வரை 50, 60 வயது வரையிலும் கூடப் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்கும். அதனைப் போல, செக்ஸ் ஹார்மோன் டோஸ்டேரோன் சுரக்கும் 70, 80 வயதுவரை ஆண்களுக்கு உடலுறவில் இச்சையும், ஈடுபாடும் இருக்கும்.

    ஆழ்ந்த உறக்கம்    

பாலுறவு என்பது நல்ல தூக்க மருந்தாகும். நிம்மதியற்ற மனிதனுக்குத் திருப்தியையும், உடலுக்கு நல்ல ஓய்வுடன் ஆழ்ந்த தூக்கத்தையும் அளிப்பது உடலுறவு ஒன்று தான். ஒரு திருப்தியான புணர்ச்சிக்குப் பிறகு உடலும் மனமும் தளர்ந்து ஓய்ந்து தானாகவே தூக்க நிலைக்குப் போய்விடுவதாக பிரிட்டனிலுள்ள இராயல் சொசைட்டி மருத்துவக் கழகம் 1993 இல் கண்டறிந்துள்ளது.

உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் சக்திக்குறைவு உடலுறவில் இருக்காது. நல்ல உடற்பயிற்சி செய்தபின் ஏற்படும் தூக்கத்தைவிட நல்ல புணர்ச்சியில் ஈடுபட்டபின் ஏற்படும் தூக்கம் ஆழ்ந்ததாய் இருக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.

உடல் உறவின் உச்சக்கட்டத்தின் போது எண்டோர்பின்கள் மூளைக்குச் செல்வதால் இவை சிறந்த வலி நிவாரணியாகவும், தூக்க ஊக்கியாகவும் செயல்படுகின்றன. மேலும், அந்தச் சமயத்தில் வெளிப்படும் ஒப்பியட்டுகள் என அழைக்கப்படும் தூக்கக் கலக்கம் கலந்த நிலையையும், உடலில் களைப்பையும் அதே சமயம் முழு மனநிறைவான உணர்வையும் தருகின்றன.

எனவே வயது எதுவாக இருந்தாலும் நிறைவான தாம்பத்யமும், உறவும் தொடர்ந்தால் மன நிம்மதிக்கும், உடல் நலனுக்கும் எந்தக் குறையும் இருக்காது என்பதில் சந்தேகமில்லை.

    முதுமையிலும் உடலை ஆரோக்கியமாக மாற்றும் தாம்பத்யம்    

மனிதர்களுக்கு சத்தான உணவும், உடல் பயிற்சியும் எந்த அளவுக்கு முக்கியமோ அதுபோல தாம்பத்ய உறவும் அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதன் மூலமும் ஆரோக்கியம் பெற முடியும்.

செக்ஸ் குறைபாடுகள் பற்றி வெளிப்படையான விவாதம் தேவை என வலி யுறுத்தும் மருத்துவர்கள் அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள்.செக்ஸ் உணர்வுக் குறைவு உயிருக்கே அச்சுறுத்தல் என்றும் சர்க்கரை நோய், இதய நோய்கள் அதிக பட்ச கொலஸ்ட்ரால் அதற்கு காரணமாக இருக்கக்கூடும் எனவும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

    பலனளிக்கும் யுனானி மருத்துவம்    

தாம்பத்ய உறவில் ஏற்படும் குறைபாட்டினால் கணவன் மனைவிக்கிடையே பரஸ்பர அன்பும் நெருக்கமும் குறையும். எனவே செக்ஸ் குறைபாட்டை நீட்டிக்க விடக்கூடாது.

ஆங்கில வழியில் அளிக்கப்படும் மருந்துகள் தொடர்ந்து உரிய பலனளிக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின் விளைவாக உடல் எடை கூடுதல், இதய நோய்கள், புராஸ்டேட் புற்றுநோய் போன்றவை ஏற்படக்கூடும். ஆனால் உடலுறவுத் திறனில் மாற்றம் இருக்கும்.ஆனால் யுனானியைப் பொறுத்தவரையில் பலனை மட்டுமே தரக்கூடிய பல மருந்துகள் உள்ளன.

யுனானி மருத்துவத்தில் நோயைக் குணப்படுத்த மட்டுமின்றி நோயாளியின் உடலுக்கு சக்தி தரவும், நோய் எதிர்ப் பாற்றலை ஏற்படுத்தவும் சேர்த்தே மருந்து தரப்படுகின்றன. இதனால் நோயிலிருந்து விடுபடும் நோயாளி உடல் வனப்போடும் இளமைத் துடிப்புடனும், சுறுசுறுப்புடனும் இயங்க முடிகிறது.

ஏனென்றால் பாதாம் பிஸ்தா, குங்கு மப்பூ, ஆப்பிள் முரபா, அக்ரூட், ஜல் கோசா, பிண்டக் போன்ற உடலுக்கு வலு சேர்க்கும் பழ வகைகளும் மூலிகைகளும் சேர்த்தே யுனானி மருந்துகள் தயார் செய்யப்படுவதால்.

    ஆண்மையை – பெண்மையை மிளிரச்செய்ய    

ஆண்மை மிளிரச்செய்யும் டெஸ்ட்டோஸ்டீரான்: எந்த நோயாளியாக இருந்தாலும் புதுத்தெம்புடன் நடமாட முடிகிறது என்கிற உத்தரவாதத்தை தருவதுடன், ஆண்மைக் குறைவோடு வருபவருக்கு என்ன மருந்துகள் தரப்படுகின்றன என்பதையும் கூறுகிறோம்.

பெண்மையை மிளிரச் செய்வதில் ஈஸ்ட்ரோஜனுக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்மையைக் காத்து நிற்பதில் டெஸ்ட் டோஸ்டீரான் பங்கும் இருக்கிறது.இந்த டெஸ்ட்டோஸ்டீரான் அளவை அதிகரிக்க வெறும் மருந்தால் முடியாது. மருந்து வடிவில் உடலுக்கு வலுவேற்ற வேண்டியது அவசியம்.

பாதாம் பருப்பு, பிஸ்தா, அக்ரூட், ஜால்கோஜா, பிண்டக் பருப்பு, பிஸ்து கிஸ்து, அபுல்கிப்பிப், துக்மே கலியூன், துக்மே ஜர்ஜிர், குங்குமப்பூ, குஷக், சிங்காடா, கசகசா, சுக்கு, லவங்கப்பட்டை போன்றவற்றால் செய்யப்பட்ட யுனானி மூலிகை மருந்துகள் தரப்பட்டால் ஆண்மைக் குறைவு முற்றிலும் நீங்கும்.நடுவயதை தாண்டிக் கொண்டிருக்கும் பெரும்பாலான ஆண்கள் செக்சில் பட முடியாத நிலை இருக்கும். அது நிரந்தரமல்ல. தற்காலிகமானதே. மறுபடியும் உங்களை இளமைத்துள்ளலோடு வைக்க யுனானி மூலிகைகளால் முடியும்.

    முதுமையிலும் தாம்பத்யம் அவசியம்    

வயாக்ரா மாத்திரையை தயாரித்து விற்பனை செய்து வரும் பிஸ்ஸர் நிறுவனம் நடுத்தர மற்றும் முதியோரிடையே உள்ள தாம்பத்திய உறவு குறித்து உலகளாவிய அளவில் ஆய்வு நடத்தியது. அதில் 40 முதல் 80 வயதுக்கு உட்பட்ட ஆண்- பெண் இருபாலர்களிடமும் நடத்தப்பட்ட ஆய்வில் முதுமையிலும் செக்சில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் கொரிய மக்கள் என்பது தெரிய வந்தது.

90% பேர் செக்ஸ் என்பது இப்போதும் தங்கள் வாழ்வின் முக்கிய அங்கம் எனத்தெரிவித்தனர். ஆனால் ஹாங்காங்கில் எடுக்கப்பட்ட சர்வேயில் 38% முதியோர் மட்டுமே தாம்பத்ய உறவில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளனர். இத்தகைய ஆய்வுகள் மொத்தம் 28 நாடுகளில் எடுக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டிலோ, வயதுக்கு வந்த பெண்ணோ பையனோ வீட்டில் இருந்து விட்டால் தாம்பத்யமே தவறு என்ற ரீதியில் நடுத்தர வயது பெண்கள் யோசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதனால்தான் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

முதுமையிலும் தாம்பத்யத்தை அனுபவிக்க முடியும், அனுபவிக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் கூற்று.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

37 − = 30

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb