Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

திருமணம் முடிக்கவிருக்கும் பெண்ணிடம் பேசலாமா?

Posted on July 4, 2011 by admin

 திருமணம் முடிக்கவிருக்கும் பெண்ணிடம் பேசலாமா?       

கேள்வி:  அஸ்ஸலாமு அலைக்கும் உஸ்தாத், என்னுடைய நண்பர் அவர் இஸ்லாமிய சிந்தனை பெற்றவர் தஃவாவுடைய பாதையில் அயராது உழைப்பவர். அவருக்கு ஒரு நிச்சயிக்கப்பட்ட பெண் உள்ளது இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கு அடுத்த வருடம் நிக்காஹ், இப்பொழுது இருவரும் டெலிஃபோன் மூலம் இருவரும் பேசிக்கொள்கிறார்கள். இதனை சில அவருக்கு மற்ற சகோதரர்களும் மத்தியில் சில மனக்கசப்பு. இந்த கேள்விக்கு குர்ஆன், ஸுன்னா பார்வையிலும் இப்போதுள்ள கால சூழ்நிலை கொண்டு பதில் கூறவும்.

பதில்:  பெண்களோடு பேசுவது அவசியத் தேவையாயின் ஆகுமானதாதும். கற்பித்தல், டாக்டரோடு பேசல், வியாபாரத் தேவைகள் போன்ற பல்வேறு தேவைகளின் போது மஹ்ரமியத் அல்லாத பெண்களுடன் பேச முடியும். இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு பேசியுள்ளார்கள் என்பது மிகப் பல ஹதீஸ்களில் வந்துள்ளது. ஸஹாபாக்களும், ஸஹாபிப் பெண்களுடன் பேசியுள்ளார்கள் என்பது மிகவும் பிரசித்தம். உதாரணத்திற்கு இரண்டொரு ஹதீஸ்களை கீழே தருகிறேன்.

ஃதாபித் இப்னு கைஸ் என்பவரின் மனைவி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே ஃதாபித்தின் மார்க்க நடத்தையிலோ, ஒழுக்கத்திலோ நான் குறை காணவில்லை. ஆனால் நான் நன்றி கொன்ற முறையில் அவரோடு நடந்து கொள்வேனோ என்று தான் பயப்படுகிறேன் என்று கூறினார். அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரது தோட்டத்தை நீ திருப்பி கொடுக்கத் தயாரா? எனக் கேட்டார்கள். அப்பெண் ஆம் என்றார். அவ்வாறே அவர் தோட்டத்தை திருப்பிக் கொடுக்க இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஃதாபிதிடம் அப்பெண்ணை பிரிந்துவிடுமாறு பணித்தார்கள் (ஸஹீஹ் புகாரி)

ஸபீஆ பின்த் ஹாரிஸ் அல் அஸ்லமிய்யா என்ற பெண்ணின் கணவர் ஸஃத் இப்னு கவ்லா ஹஜ்ஜதுல் விதாவின் போது மரணித்தார். அப்போது கர்ப்பவதியாக இருந்த ஸபீஆ மிகச் சில நாட்களிலேயே பிள்ளையை ஈன்றார். பிள்ளைபேற்று நிலையிலிருந்து அவர் தூய்மையானதும் திருமணம் பேசி வருவோருக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அந்நிலையில் அவரிடம் சென்ற அபூ ஸலாபில் இப்னு பஃலாக் அவரைப் பார்த்து என்ன திருமணம் பேசி வருவோருக்காக அழகுபடுத்திக் கொண்டீரா? திருமணம் முடிக்க விரும்புகிறீரா? நான்கு மாதங்கள் 10 நாட்கள் சென்ற பின்னரே நீர் திருமணம் முடிக்க முடியும் என்றார்… (ஸஹீஹ் புகாரி)

இவ்வாறு பேசுவது அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அல்குர்ஆன் கீழ்வரும் விஷயத்தை கவனதிற் கொள்ள வேண்டும்.

‘விபச்சாரத்தை நெருங்காதீர்கள்….’ (அல் இஸ்ரா 32)

அதாவது விபச்சாரம் செய்வது மட்டுமல்ல அதனை நெருங்கவும் கூடாது என இவ்வசனம் கூறுகிறது. பேசுவதும் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்ல முடியும் என்பதை இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும். பார்வை, பேச்சு, தொடுதல் என்ற இவை அனைத்தும் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்வதாகும். இதனையே மேற்குறிப்பிட்ட வசனம் தடை செய்கிறது.

திருமண ஒப்பந்தம் முடியும் வரையில் ஒரு பெண் உறவால் ஆகமாட்டாள். திருமணம் பேச்சுவார்த்தை முடிவது குறிப்பிட்ட பெண்ணை மனைவியாக்க மாட்டாது. இந் நிலையில் இருவரும் தனியே சந்திப்பது,உரையாடுவது போன்ற அனைத்தும் கூடாததாகும். ஏனெனில் திருமணம் பேசப்பட்ட இருவரும் பகிடியாகப் பேசல், சிலவேளை மறைமுகமான காம உணர்வைத் தூண்டும் வார்த்தைகளைப் பேசல் என்பன தம்மை அறியாமலேயே நடந்துவிடும்.

திருமணம் பேச்சுவார்த்தை மட்டுமே முடிவுக்கு வந்திருப்பின் அது இடையில் முறிய முடியும் எனவே ஒரு பெண் தன்னைக் காத்துக் கொள்ளல் மிகவும் முக்கியமானது. கணவன் மனைவி என்ற உறவு கொண்டாட முடியாத நிலையில் அந்த வகையிலான ஆரம்ப நடத்தைக்குக் கூட நாம் வந்துவிடக் கூடாது.

All answer by: Sheik Usthaz Mansoor.

source: http://ipcblogger.net/roshan/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 1 = 6

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb