[ வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான உறவுக்கு சிறந்தது. இது பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை.
உங்கள் மீது உங்களது பார்ட்னருக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, ‘இன்னிக்கு என்ன பன்னப் போறானோ’ என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.
முடிவில்லாமல் நீளும் கல்விதான் இந்தக் கலவி என்பதை புரிந்து கொண்டால் நிச்சயம் ஒவ்வொரு உறவும் மறக்க முடியாத அனுபவமாக அமையும்.]
இல்லறத்தில் நீங்கள் ஹார்டுவேரா சாஃப்ட்வேரா?
ஒருகம்ப்யூட்டருக்கு எப்படி ‘ஹார்டுவேர்’ போல ‘சாஃப்ட்வேரும்’ அவசியமோ அது போலத்தான் செக்ஸ் வாழ்க்கையும். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாஃப்ட்’ ஆகவும் இருப்பது அதீத அவசியம். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள்.
உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் எக்ஸ்டிராவாகவே இருக்கும். அதற்கான சில டிப்ஸ்கள்…
எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் களத்தில் குதித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும். எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவன்தான் புத்திசாலி. வீட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாகி விடக் கூடாது.
வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை.
‘வெரைட்டி’யாக முயற்சிப்பதில் தவறில்லை. அதேசமயம், அது விரக்தியில் கொண்டு போய் விட்டு விடக் கூடாது என்பதும் முக்கியமானது. கடுமையான முயற்சிகளை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அமைதியான, ஆழமான, நீடித்த உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள்.
அதேபோல மனம் நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக் கொண்டு ‘ஆட்டத்தில்’ இறங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற்றங்களுக்கு வித்திட்டு விடலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும், கூடலையும் உறுதியாக்கும், உற்சாகப்படுத்தும்.
அதேசமயம், படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு ‘பிளான்’ செய்வதும் தவறு. செங்கல், ஜல்லி, மணல், சிமென்ட் இல்லாமல் கட்டடம் கட்டப் போனால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அதுவும். கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் என சின்னச் சின்ன பிளானுடன் போனாலே போதுமானது. அதாவது அடிப்படை இருக்க வேண்டும். அபரிமிதமான திட்டமிடல்கள் இங்கு அவசியமற்றவை.
உங்கள் மீது உங்களது பார்ட்னருக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, ‘இன்னிக்கு என்ன பன்னப் போறானோ’ என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.
அதேபோல ‘பொசிஷன்’ குறித்தும் குண்டக்க மண்டக்க எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதில் அப்படி பார்த்தோமே, செய்து பார்த்தால் என்ன என்று முயற்சித்தால் சில நேரங்களில் ஏமாற்றமோ அல்லது கசப்பான அனுபவமோ ஏற்படக் கூடும். அதனால் முடிந்ததை செய்யுங்கள் – முக்கியமாக உங்களது பார்ட்னருக்கு பிடித்தமானதை மட்டும் செய்யுங்கள். இது மிகவும் சவுகரியமானது, பாதுகாப்பானதும் கூட.
செக்ஸ் என்பது கற்றுக்கொள்வதுதான். எல்லோரும் எல்லாம் தெரிந்தவர்கள் அல்ல. முடிவில்லாமல் நீளும் கல்விதான் இந்தக் கலவி என்பதை புரிந்து கொண்டால் நிச்சயம் ஒவ்வொரு உறவும் மறக்க முடியாத அனுபவமாக அமையும்.
இன்னொரு முக்கியமான விஷயம். எதுவுமே முழுமையானதல்ல. முழுமையானது என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. எனவே இன்று சரியில்லையே என்ற ஏமாற்றத்துடன் தூங்கப் போகாதீர்கள். நாளை இதை விட சிறந்த இரவாக அமையலாம் இல்லையா?. எதிர்பார்ப்பும், நம்பிக்கையும்தானே வாழ்க்கை.
நன்றி: டாக்டர் ஷர்மிளா, இளைய நிலா.
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாகை மாவட்டத்தைச்சேர்ந்த ஒரு ஊரில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சட்டத்தை அறிவித்தார்கள். அதாவது ”இனி 16 வயதுக்கு கீழுள்ள எந்த பெண்ணுக்கும் திருமணம் என்று வந்தால் ஊர் ஓலை கொடுக்கப்பட மாட்டாது” என்பதே அது.
ஊர் முதவல்லியிடம் இந்த சட்டத்தை கொண்டுவருவதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று வினவும்பொழுது அவர் சொன்ன காரணம்; ”சில தினங்களுக்கு முன் ஒரு இளம்பெண்ணுக்கும் ஒரு வாலிபனுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்த மறுநாளிலிருந்து அந்த இளம்பெண் ஏதோ பைத்தியம் பிடித்தவள் போல் ஆகிவிட்டாள். என்னவென்று விசாரித்ததில் முதலிரவில் மணமகன் வலுக்கட்டாயமான கடுமையான உறவை மேற்கொண்டதால் அந்த புதுமண இளம்பெண் நிலைகுலைந்து இப்படி ஆகிவிட்டாள் என்று தெரிந்தது” என்றார். மற்றபடி இப்படி ஒரு சட்டத்தை கொண்டுவருவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்பதை அவர் தயக்கமின்றி ஒப்புக்கொண்டார். ஆக இது திருமணம் முடிக்கும் இளைஞர்கள் மனதில் இறுத்திக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.
”கிணற்றுத்தண்ணிரை வெள்ளமா கொண்டு போகப்போகிறது” என்பது பழமொழி. வாகனத்தை இயக்கும்போது எடுத்த எடுப்பில் வேகத்தை கூட்டினால் என்னவாகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே!ஆரம்பத்தில் சாஃப்ட்வேரே சிறந்தது. போகப்போக அவரவர் விருப்பத்திற்கு இணங்க ஹார்டுவேராக மற்றிக்கொள்ளலாம். அப்பொழுதுதான் இல்லறம் கசக்காமல் இனிக்கும்.