Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மனிதர்கள் சிந்திக்க வேண்டாமா?

Posted on May 19, 2011 by admin

இறைவனை சிந்திக்காதவர்கள்

இன்னும் அவர்கள் (சிந்தித்து) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக (பல்வேறு) விளக்கங்களைகூறியுள்ளோம். (அல்குர்ஆன் 17:41)

நிச்சயமாக இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் விவரித்துள்ளோம். (அல்குர்ஆன் 17:89 )

இன்னும் நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணங்களையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம் எனினும் மனிதன் அதிகமாக தர்க்கம் செய்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 39:27)

மேலுள்ள நான்கு வசனங்களும் வெவ்வேறு வசனங்களாக இருந்தாலும் சிந்திக்க வேண்டும் என்ற ஒத்த கருத்தை ஓங்கி ஒலிக்கின்றன.

ஷைத்தான் மனிதர்களின் சிந்தனையை மழுங்கச் செய்து பகுத்தறிவு என்ற வார்த்தைக்கு ஒரு மங்கலான விளக்கமளித்து அவர் அவர்கள் செய்வதுதான் சரி என்ற நிலையில் அழகாகக் காண்பித்து மனிதர்களில் அனேகரை இணை வைக்கும் கொடிய பாவத்திலும், அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத பாவங்களிலும் இறை நிராகரிப்பிலும் இட்டுச் செல்கின்றான்.

இறைவனை நம்புவது நன்மையான காரியம்தான்.

அந்த இறையை வணங்குவதற்காக நாமாகவே ஒன்றை உருவாக்கி, ஒரு தோற்றத்தை ஏற்படுத்திஇறைத்தன்மை யெல்லாம் நாம் உருவாக்கிய உருவங்களுக்கு இருப்பதாக நினைக்கின்றார்களே? நம்மை படைத்தவன் தான் இறைவனாக இருக்க இயலும் நாம் படைத்தவைகள் இறைவனாக கடவுளாக இருக்க சாத்தியமில்லை. அப்படியானால் நம்மை படைத்தது யார்? அந்த இறைவனின் தன்மை, ஆற்றல், ஆட்சியதிகாரம் என்ன? என்பதை சிந்திப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் தன்மைகள் அவற்றிற்கு இருக்கின்றனவா? என்பதையாவது சிந்திக்க வேண்டும்.

அவர்களுக்கு நடக்க கூடிய கால்கள் உண்டா? அல்லது பிடிப்பதற்குறிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்கு பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு கேட்கக் கூடிய காதுகள் உண்டா? நபியே கூறும்! நீங்கள் இணை வைத்து வணங்கும் தெய்வங்களை எல்லாம் அழைத்து எனக்கு தீங்கு செய்திட சூழ்ச்சி செய்து பாருங்கள். இதில் எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள். (அல்குர்ஆன் 7:195)

இவ்வாறு ஒவ்வொரு விசயத்தையும் அறிவுக்கு பொருத்தமாக கூறி, சிந்தனையில் ஆழ்த்தி, பகுத்துணரச் செய்வதுதான் குர்ஆனின் தன்மையே. இவ்வாறு எதையும் பற்றி சிந்திக்காதவர்களை குர்ஆன் உவமையாக கூறி விமர்சிப்பதை கீழுள்ள வசனங்களை படித்து பாருங்கள்.

நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தை) கேட்கின்றார்கள். அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைகின்றீரா? அவர்கள் கால் நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை அல்ல (அவற்றை விடவும்) அவர்கள் மிகவும் கேடு கெட்டவர்கள். (அல்குர்ஆன் 25:44)

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர் பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாத செவிடர்களும் ஊமையர்களும் தான். (அல்குர்ஆன் 8:22)

குர்அன் போன்று எவ்வேதமும் சிந்தனையை தூண்டவுமில்லை. சிந்திக்காதவர்களை குர்ஆன் போன்று எவ்வேதமும் விமர்சனம் செய்யவுமில்லை. குர்ஆன் சிந்தனை செய்ய திறந்த மடலாக திகழ்கின்றது. தன்னையே சிந்தித்து ஏற்றுக் கொள்ளும்படி அறை கூவல் விடுகின்றது.

உண்மையை சிந்திக்காதவர்கள் இறவனிடம் இழிவானவர்கள்; மேலும் சிந்திக்காதவர்கள் கண் இருந்தும் குருடர், வாய் இருந்தும் ஊமையர், செவி இருந்தும் செவிடர்கள் என்று ஊனமுற்றவராக சித்தரிக்கின்றது. கால்நடைகள் என்றெல்லாம் சிந்திக்காதவர்களை ஒப்பிட்டு வர்ணிக்கிறது. இப்படிப்பட்ட விமர்சனங்கள் இனியாவது சமுதாயத்தின் சிந்தனைக்கதவை திறக்குமா? நல்லறிவுடையோர்தான் குர்ஆனை சிந்திப்பார்கள் என அல்லாஹ் கூறுவதால் எங்களுக்கு நல்லறிவு கொடுக்கப்படவில்லை, எவ்வாறு சிந்திப்பது என கேட்கப் போகின்றார்களா?

மனிதர்கள் சிந்திக்க வேண்டாமா?

நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 2:44)

தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. (அல்குர்ஆன் 2:269)

அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82)

(நபியே!) நீர் கூறும்; “என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.” இன்னும் நீர் கூறும்; “குருடனும் பார்வையுடைவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” (அல்குர்ஆன் 6:50)

உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம். (அல்குர்ஆன் 6:98)

அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 13:

நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும் நன்மை செய்யுமாறும் உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும் மானக்கேடான காரியங்கள் பாவங்கள் அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் – நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். (அல்குர்ஆன் 16:90)

அவர்கள் தங்களுக்குள்ளே (இத பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும் உண்மையையும் குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள். (அல்குர்ஆன் 30:8)

அச்சமும் ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து அதைக் கொண்டு பூமியை – அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 30:24)

மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும் பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன் அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை அவ்வாறிருக்க (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள். (அல்குர்ஆன் 35:3)

அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும் போதும் மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் – சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 39:42)

அவர்கள் கூறுவார்கள்; “நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்.”

இறைவன் நம்அனைவருக்கும் சிந்தித்து உணரும் நல்லறிவை தந்து அருள்வானாக!

source: www.readislam.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

66 − = 56

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb