Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அம்மா என்றொரு அழகான தேவதை

Posted on March 29, 2011 by admin

அம்மா என்றொரு அழகான தேவதை

நீ தான் எனக்கு முதல் சொந்தம் உலகில்

நீ சொல்லி தெரிந்து கொண்டேன் பின்னாளில் மிச்சம்

உன்னிடம் நான் பெற்ற உயிர் மூச்சு ஒவ்வொன்றும்

எனைவிட்டுப் போகாதம்மா உயிர் உள்ளவரைக்கும்

 

பாலூட்டி சோறூட்டி பாசமாய் வளர்த்தவளே

தாலாட்டி சீராட்டி தாங்கி வளர்த்தவளே

அன்பாய் ஆதரவாய் அணைத்து வளர்த்தவளே

பண்பாய் பாசமாய் பார்த்து வளர்த்தவளே

 

கத்தி அழுது தொண்டை வற்றி போனாலும்

கதைக்க முடியாமல் ஏங்கித் தவித்தாலும்

உன்னை கண்டுவிட்டால் உறங்கிவிட முடியுமென்று

சொல்லிக் கொடுக்காமல் புரிய வைத்தவளே

 

மெல்லத் துயில்கலைந்து விழிதிறந்து பார்த்து

உன்முகம் காணாது ஊர்கூட்டி வைத்தாலும்

பக்குவமாய் வந்து பாலூட்டித் தலைகோதி

முத்தமொன்று கொடுத்து இனிக்க வைத்தவளே

 

அதிகாலை எழுந்து அனைத்தும் செய்து

பள்ளிக்கு அனுப்ப பம்பரமாய் சுழன்று

திரும்பி வரும்போது திருப்தியாய் சமைத்து

படுக்க போகும்வரை பாடு பட்டவளே

 

எத்தனை கஷ்டத்திலும் என்னைப் படிக்கவைக்க

படாத பாடுபட்டு பரிதவித்த போதும்

உள்ளம் கலங்காது என்னுடன் உடனிருந்து

உயர்த்தி வைத்து உச்சி குளிர்ந்தவளே

 

பல்கலை சென்று பட்டம் வாங்கினாலும்

விரிவுரைகள் முடிந்து வேலைக்கு சென்றாலும்

பச்சை குழந்தையாய் என்னை பாவித்து

குறையே இல்லா(த)மல் பாசம் வைத்தவளே

 

அம்மா என்று அழைத்தாலே போதும்

கவலைகள் எல்லாம் கரைந்து போகும்

கோடி இன்பங்கள் கொட்டிக்கிடந்தாலும்

அம்மா என்ற சொல்லுக்குள் அனைத்தும் அடங்கிவிடும்.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

52 + = 54

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb