Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

எனக்குப் பிடிக்கும்…! உங்களுக்கு….?

Posted on March 21, 2011 by admin

 

தாயின் முகம் பார்க்கப் பிடிக்கும்

அவள் பொழியும் பாசம் பிடிக்கும்

மனைவியின் கண்களை நேராக பார்த்துப்பேச பிடிக்கும்

அவள் பேசுவதே கண்களால் என்றால் ரொம்ப பிடிக்கும்

இதழ் பிரியாத புன்னகை பிடிக்கும்

புன்னகையில் மறைந்திருக்கும் நிஜமான நேசம் பிடிக்கும்

அதிர்ந்து பேசாத வார்த்தைகள் பிடிக்கும்

வார்த்தைகளற்ற மெளனம் பிடிக்கும்

அதிகாலையில் அவள் புரிந்திடும் காதல் பிடிக்கும்

மழலையின் மொழி பிடிக்கும்

பல சமயங்களில் குழந்தையாய் மாறிட பிடிக்கும்.

 

தூக்கத்தில் கனவுகள் பிடிக்கும்

கனவில் கண்டதை கவிதைகளாய் மாற்ற பிடிக்கும்

காலநேரம் தாண்டி படித்திட பிடிக்கும்

படித்த நல்ல கருத்துக்களை செயல்படுத்திட பிடிக்கும்

மனம் விரும்பும் சமயங்களில் எழுதிட பிடிக்கும்

படைப்பதைவிட படைத்ததை ரசித்திட பிடிக்கும்

ரோஜாவின் வண்ணம் பிடிக்கும்

மல்லிகையின் மணம் பிடிக்கும்

 

ஜில்லென்ற மழையில் நனைய பிடிக்கும்

கரைமணலில் அமர்ந்து கடலலைகள் ரசிக்க பிடிக்கும்

மின்சாரமில்லா இரவில் மெழுகுவத்தியின் ஒளி பிடிக்கும்

முழு நிலவொளியில் படகு பயணம் பிடிக்கும்

பட்டாம்பூச்சியின் படபடப்பு பிடிக்கும்

பூவிதழில் உள்ள பனித்துளி பிடிக்கும்

தாலாட்டும் ரயில் பயணம் பிடிக்கும்

தொலைத்தூர பயணங்களில் தோளில் சாய்ந்து தூங்க பிடிக்கும்

(அம்மாவின் தோளில் மட்டும், சமயங்களில் என்னவளிடமும்)

 

எதுவும் சுத்தமாக பளிச்சென்று இருப்பது பிடிக்கும்

செய்கின்றவைகளை நேர்த்தியாக செய்திட பிடிக்கும்

வாழ்வில் சின்ன சின்னதாய் நல்மாற்றங்கள் பிடிக்கும்

முயற்சிகளை விடாமல் முயற்சிப்பது பிடிக்கும்

புரிந்துக்கொண்டு விட்டுக்கொடுப்பது பிடிக்கும்

கோபங்களை புன்னகையால் வென்றிட பிடிக்கும்

தனிமையில் நினைவுகள் பிடிக்கும்

நினைவுகளால் சிந்திடும் கன்ணீர்த்துளி பிடிக்கும்!

–   ஷப்பீர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

33 − = 24

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb