Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஸ்பெக்ட்ராம் ராஜாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை!!!

Posted on March 16, 2011 by admin

இது தற்கொலையா? கொலையா?

முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் நெருங்கிய நண்பரும் கிரீன் கௌஸ் புரமொட்டர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான சாதிக் பாட்சா இன்று காலை தேனாம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

2G ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ அதிகாரிகள் டிசம்பர் மாதம் 8 ம் தேதி சாதிக் பாட்சாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். மேலும் இன்று மாலை டெல்லியில் உள்ள சி.பி. ஐ அலுவலகத்துக்கு விசாரணைக்கு வர சாதிக் பாட்சாவுக்கு சம்மன் அனுப்பப் பட்டு இருந்ததாகவும் அதற்காக மதியம் 2 மணிக்கு சாதிக் பாட்சா டெல்லி செல்ல இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

2004 ம் ஆண்டு தொடங்கப் பட்ட கிரீன் கௌஸ் நிறுவனத்தில் இணை இயக்குனராக இருந்த ராசாவின் மனைவி 2008 ல் விலகிக் கொண்டார். ராசாவின் சகோதரர் கலிய பெருமாள் இந்நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பு வகித்து வருகிறார். 2004 ௦ ம் ஆண்டு ரூ 1 லட்சம் முதலீட்டில் தொடங்கப் பட்ட கிரீன் கௌஸ் நிறுவனத்துக்கு 600 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து உள்ளதாம். ஐந்து ஆண்டுகளில் ரூ 600 கோடி அளவுக்கு சொத்து சேர்த்தது எப்படி என்பது குறித்தும் சி.பி.ஐ விசாரணை செய்து வருவதாகத் தெரிகிறது.

மேலும் கடந்த 2007 ம் ஆண்டு கிரீன் கௌஸ் புரமொட்டர்ஸ் நிறுவனம் சிங்கப்பூரிலும் தனது கிளையைத் துவக்கியுள்ளது. சிங்கப்பூர் கிளைக்கு நடைபெற்ற பண பரிவர்த்தனைகள் குறித்தும் சி.பி.ஐ விசாரணை செய்து வருகிறது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் வரும் மார்ச் 31 அன்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட உள்ளதாக சி.பி.ஐ இன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில் சாதிக் பாட்சா தற்கொலை செய்தது இருப்பது குறிப்பிடத் தக்கது. சாதிக் பாட்சா மரணம் தற்கொலை தான் எனபது குறித்து உறுதியான தகவல் தெரிய வில்லை. எனினும் சாதிக் பாட்சாவின் மனைவி பானு அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரபல தொலைக் காட்சி செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி சாதிக் பாட்சா பலவீனமான மனிதர் அல்ல என்றும் இது கொலையா அல்லது தற்கொலையா என உறுதியான முடிவுக்கு வர முடிய வில்லை என்று தெரிவித்துள்ளார்.

source: http://www.inneram.com/2011031614577/rajas-close-aide-sadiq-batcha-commits-suicide

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 46 = 52

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb