Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மூன்றாவது இயக்கம்!

Posted on February 26, 2011 by admin

நாகூர் மீரான்

சிறு வணிகம் பெரு வணிகத்தில் தனித்து கோலோச்சும் முஸ்லிம்கள், கூட்டு வணிகத்தில், கொள்முதலில் ஈடுபாடு காட்டுவதில்லை. தமது வட்டம் தவிர்த்து வெளிவட்டத் தொடர்பில்லை. வேறு வணிகர்ளோடு கூட்டு வைப்பதில்லை.

நாடார், தேவர், வன்னியர், மார்வாரி, குஜராத்தி, போரா போன்றவர்களிடம் கூட்டு முயற்சி, ஒருங்கிணைப்பு, கூட்டுக் கொள்முதல், கூட்டு வணிகம் நடைபெறுகிறது. கூட்டு வணிகத்தில் நாட்டமில்லாத முஸ்லிம் வியாபாரி திடீரென திவாலாகிறார், காணாமல் போகிறார்.

கூட்டுறவு நிறுவனமான T.U.C.S. சில்லரை வணிகத்தை சென்னையில் முதலில் துவங்கியது. அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் தேனாம்பேட்டை காமதேனு அங்காடி 1996இல் துவங்கப்பட்டது. தமிழகத்தில் 34 கூட்டுறவு பண்டக சாலைகள் இயங்குகின்றன. 2009-10க்கு 1,400 கோடிக்கு பொருட்கள் விற்பனையானதாக A.I.T.U.C பொருளாளர் முத்தையா தினசரி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

முஸ்லிம் சமூகம் இரு இயக்கமாகச் செயல்படுகிறது. ஒரு அமைப்புக்கும் மற்றோர் அமைப்புக்கும் தொடர்பில்லை. இரண்டு மதரஸாக்களுக்கிடையில் நட்பில்லை. சேரி முஹல்லா வாசிக்கும் முன்னேறிய முஹல்லா வாசிக்குமிடையில் பெண் கொடுக்கல், வாங்கல் நடைபெறவில்லை. நட்பு, பழக்கம் எதுவுமில்லை. தொழுகை வரிசை தவிர ஒரு உறவுமில்லை. இந்த நிலையில் கூட்டுக் கொள்முதல் மூலமாவது ஒருங்கிணையலாம்.

தமிழக முஸ்லிம் ஜனத்தொகை 40 இலட்சம். ஒரு குடும்பம் ஐவர் எனில் 8 இலட்சம் குடும்பங்கள்.

மாதம் 5,000/ம் செலவழிக்கும் குடும்பத்திலிருந்து 50,000ம் செலவு செய்யும் குடும்பங்கள் வரை உள்ளன.

ஒரு குடும்பத்திற்கு சராசரியாக மாதம் 10,000 செலவு என்ற கணக்கில் 8 லட்சம் குடும்பத்திற்கு 800 கோடி செலவாகும்.

இத்தொகையனைத்தும் பரவலாகப் பிரிந்து வெளி வணிகர்களுக்குச் சென்றடைகிறது. இதனைச் சமூகத்திற்குள் திருப்பலாம்.

கூட்டுக் கொள்முதல் நடத்தி தேவையான பொருட்களை மொத்தமாகப் பெற்று வழங்குவதன் மூலம் சமூகத்திற்கு 200 கோடி நிகர லாபம் கிடைக்கும்.

மாதம் பத்தாயிரம் செலவிடுபவர்க்கு அதிகபட்சம் 2,000/ + ம் மிச்சமாகும். சமூகத்திற்குள் ஒருங்கிணைப்பு ஏற்படும். ஒருவருக்கொருவர் அறிமுகம் ஏற்படும்.

இந்த ஒருங்கிணைப்பையே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரும்பினார்கள்.

தனித்து செல்பவன் இஸ்லாம் என்ற வளையத்தை தன் கழுத்திலிருந்து கழற்றி வீசியவன் ஆவான் என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியது தவிர்க்கப்படும்.

சமூகம் ஆழமாய்ச் சிந்தித்து இந்த மூன்றாவது இயக்கத்தை முன்னெடுக்கலாம். சிறிய அளவில் துவங்கினால், பரவலாகச் சென்றடையும். விருட்சமாய் விரிவடையும்.

நன்றி: முஸ்லிம் முரசு, அக்டோபர் 2010

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 9

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb