Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட பகுதிகள்

Posted on December 28, 2010 by admin

Related image

தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட பகுதிகள்    

     அபூ பாஸிம்       

நெல்லை எக்ஸ்பிரஸ் 6.30 க்குப் புறப்படும் என அறிவிப்பாளினி மெல்லிய குரலில் அறிவித்தார்.

ஹஜ்ஜுக்குச் செல்லும் நபரை வழியனுப்ப திரண்டிருந்த கூட்டம் இமாமை ஏறிட்டது.

இமாம் புரிந்து கொண்டார். மஃக்ரிப் தொழுகை 6.15 க்கு. ஆனால் இங்கே பிளாட்ஃபாரத்திலேயே ஜமாஅத்தாக தொழுதிடலாம். இமாம் முன்னால் நின்றார். பின்னால் கூட்டம் அணிவகுத்தது. சுருக்கமாக ஓதி தொழ வைத்துவிட்டு திரும்பிப் பார்த்தார் இமாம்.

பத்து பேர்களோடு துவங்கிய தொழுகை ஐம்பது, அறுபது பேர்களாய் பெருகியிருந்தது. பிளாட்ஃபார்ம் பிதுங்கி வழிந்தது. பயணிகள் செல்ல வழிதெரியாமல் தொழுது முடிக்கட்டும் என அங்கேயே பொறுமையுடன் காத்திருந்தனர்.

இமாமுக்கு மனதில் நெருடல்.

 
எழுந்து மக்களை நோக்கி பேசத் துவங்கினார்.

”அன்பான மக்களே!

நம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் பொருந்தும் மாதிரி அழகான வழிகளைக் காட்டியுள்ளார்கள். அதில் ஒன்று எங்கே தொழ வேண்டும், எங்கே தொழக் கூடாது என்பது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்,

‘ஏழு இடங்களில் தொழுவது தடை செய்யப்பட்டுள்ளது;

1. அசுத்தம் கொட்டப்படும் இடம்,

2. ஆடு, மாடுகளை அறுக்கும் இடம்,

3. மண்ணறை,

4. வழிப்பாதை,

5. ஒட்டகக் கொட்டகை,

6. குளியலறை,

7. கஃபாவின் மாடி

(அறிவிப்பாளர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு,  நூல்: திர்மிதீ)

‘மக்கள் செல்லும் வழிப்பாதையில் தொழக்கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருக்க நீங்கள் போக்குவரத்தை நிறுத்தும் முறையில் இங்கே அடைத்துக் கொண்டு தொழுகிறீர்கள். இதைப் பார்க்கும் மக்கள் உங்களை வெறுப்பார்கள். பிறகு உங்கள் மார்க்கத்தை வெறுப்பார்கள்.”

இமாமின் பேச்சைக் கேட்டதும் மக்கள் அவசர அவசரமாய்க் கலைந்து வழியேற்படுத்திக் கொடுத்தனர். கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒருவர் முன்வந்தார். இமாமின் கையைப் பற்றினார்.

‘ஹலோ! என் பெயர் சிலராசன். மதங்களின் பெயரால் நடக்கும் அநியாயங்களை அருமையான முறையில் சுட்டிக்காட்டினீர்கள். நன்றி’

‘இது என்னுடைய கடமை’ என்றார் இமாம் அடக்கமாக.

நன்றி: சிந்தனை சரம் செப்டம்பர் 2010

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb