Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இறந்தவரின் உறவினரிடம் கூற வேண்டியவை!

Posted on December 28, 2010 by admin

உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்:

”நோயாளியிடமோ அல்லது இறந்தவரிடமோ நீங்கள் இருக்க நேரிட்டால், நல்லதைக் கூறுங்கள். நீங்கள் சொல்லக் கூடியவற்றிற்கு வானவர்கள் ‘ஆமின்’ கூறுகிறார்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(என் கணவர்) அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹு இறந்தபோது, நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ”இறைத்தூதர் அவர்களே! அபூஸலமா இறந்து விட்டார்கள்” என்று கூறினேன்.

”அல்லாஹு மஹ்ஃபிர்லீ வலஹு, வஅஹ்கிப்னீ மின்ஹு உக்பன் ஹஸனதன் (இறைவனே! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக, அவரை விட சிறந்த துணையை எனக்கு ஏற்படுத்துவாயாக)” என்று நீ கூறு! என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

அதை நான் கூறினேன். அவரை விட சிறந்தவர்களான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எனக்கு அல்லாஹ் துணையாக்கினான். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 920)

உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்:

”ஒரு மனிதனுக்கு சோதனை ஏற்பட்டதும் ”இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன். அல்லாஹும்ம அஜிர்னீ ஃபீமுஸீபத்தீ வக்லிஃப்லீ கய்ரன் மின்ஹா (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள். நாம் அவன் பக்கமே மீளுபவர்களாக உள்ளோம். இறைவனே! என் சோதனையில் எனக்கு கூலியைத் தருவாயாக! அதைவிட சிறந்ததை எனக்குப் பகரமாக்குவாயாக) என்று கூறினால், அவருக்கு அல்லாஹ் அவரின் சோதனைக்கு கூலியைத் தந்து, அதைவிட சிறந்ததை அவருக்கு பகரமாக்காமல் இருப்பதில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

(என் கணவர்) அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹு இறந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு கட்டளையிட்டபடிக் கூறினேன். அவரையும் விட சிறந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே எனக்கு கணவராக ஆக்கினான். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 921)

அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

”ஓர் அடியானின் குழந்தை இறந்துவிட்டால், வானவர்களிடம் அல்லாஹ், ”என் அடியானின் குழந்தை (உயிரை) கைப்பற்றினீர்களா?” என்று கேட்பான். ”ஆம்” என அவர்கள் கூறுவார்கள்.

”என் அடியானின் இதயத்தைக் கைப்பற்றினீர்களா? என்று அல்லாஹ் கேட்பான். ”ஆம்” என அவர்கள் கூறுவார்கள். ”என் அடியான் என்ன கூறினான்? என்று கேட்பான். ‘

‘உன்னைப் புகழ்ந்தான். ”இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன் எனக் கூறினான்” என்று வானவர்கள் கூறுவார்கள். ”சொர்க்கத்தில் என் அடியானுக்கு வீடு கட்டுங்கள். அதற்கு ”புகழுக்குரிய வீடு” என்று பெயரிடுங்கள்!” என்று அல்லாஹ் கூறுவான். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 922)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅறிவிக்கின்றார்கள்:

”ஓர் இறை நம்பிக்கை கொண்ட அடியானின் குழந்தையை இவ்வுலகில் நான் கைப்பற்றி, அவன் அதை பொறுமையாக எடுத்துக் கொண்டால், அவனுக்குக் கூலியாக சொர்க்கத்தைத் தவிர வேறில்லை’ என்று அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி (ரியாளுஸ்ஸாலிஹீன்: 923)

உஸாமா இப்னு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெண் மக்களில் ஒருவர் (ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா) தன் மகன் இறந்து விட்டதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். அப்போது வந்தவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”என் மகளிடம் செல். நிச்சயமாக அல்லாஹ்வுக்கு எடுத்துக் கொள்ளவும், கொடுக்கவும் உரிமை உண்டு என்று அவரிடம் கூறு! அல்லாஹ்விடம் உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. அவர் (என் மகள்) பொறுமையாக இருந்து, நன்மையை நாடும்படி அவருக்கு கட்டளையிடு” என்று கூறினார்கள். (இது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாகும்). (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 924)

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

13 − = 3

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb