Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அதிகம் கேட்க வேண்டியது எதை?

Posted on December 26, 2010 by admin

  மவ்லவி எஸ். லியாகத் அலீ மன்பஈ     

‘மேலும் அவர்கள் கூறுவார்கள்: ‘எங்கள் இரட்சகா! ஜஹன்னம் எனும் நரகத்தின் வேதனையை எங்களை விட்டும் திருப்பி விடுவாயாக! நிச்சயமாக அதன் வேதனை தாங்கிக்கொள்ள முடியாததாக உள்ளது. நிச்சயமாக அது (ஜஹன்னம்) நிலையாகத் தங்கியிருப்பதற்கும், சற்று நேரம் தங்குவதற்கும் மிகக் கெட்டதாகவும் இருக்கிறது.’ (அல்குர்ஆன் 25: 65,66)

வெற்றி பெற்ற நல்லடியார்களின் பண்புகளில் ஒன்றாக அல்லாஹ் குறிப்பிடும் இந்த பிரார்த்தனை செய்யும் பண்பு, நல்லோர்களின் இயல்பாகவே இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

பிரார்த்தனை தான் வணக்கத்தின் மூளை – சத்து என்று கூறிய நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் கேட்டுப்பெற வேண்டிய இம்மை, மறுமை சம்மந்தப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் அல்லாஹ்விடமே கேட்குமாறு நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இறை வேதமாம் திருக்குர்ஆனும் மனிதர்கள் தங்களது அனைத்துத் தேவைகளையும் அல்லாஹ்விடமே கேட்குமாறு அறிவுறுத்துகிறது.

அற்புதத் திருக்குர்ஆன் சுமார் 60 க்கும் மேற்பட்ட துஆக்களைப் பதிவு செய்து வைத்துள்ளது. மேலே இடம்பெற்றுள்ள துஆதான் எல்லா நல்லடியார்களின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை பின்வரும் நிகழ்ச்சியின் மூலம் நாம் உணர முடியும்.

‘மனிதர்களாலும் ஜின்களாலும் நரகத்தை (ஜஹன்னம்) நான் நிரப்புவேன்’ என்ற உம் இறைவனின் சொல் பூர்த்தியாகி விட்டது’ (அல்குர்ஆன் 12:119) போன்ற வசனங்கள் நரகின் கொடிய வேதனையிலிருந்து நாம் பாதுகாப்புத் தேடியவர்களாகவே இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.

அன்னை உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒருமுறை துஆச் செய்யும் பொழுது, ‘யா அல்லாஹ்! என் கணவர் (நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்), தந்தை அபூ ஸ{ஃப்யான், சகோதரர் முஆவியா உள்ளிட்ட அனைவரையும் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த செல்வத்துடனும் நல்லாழ்வு வாழச்செய்வாயாக!’ என்று பிரார்த்திக்கின்றார்கள். இதைக்கேட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உம்மு ஹபீபாவே! அல்லாஹ்வால் நிர்ணயம் செய்யப்பட்டுவிட்ட இந்த விஷயங்கள் பற்றிக் கேட்பதைவிட நரகின் வேதனையை விட்டுப் பாதுகாப்புக்கும், பாவமன்னிப்புக்கும் கேட்டால் நன்றாக இருக்கும்’ என்று கூறி, பிரார்த்தனைகளிலேயே அதிக இடத்தைப் பிடிக்க வேண்டிய விஷயம் இதுதான் என்பதை உணர்த்தினார்கள். 

ஏனெனில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் படைத்து அவர்களுக்கு சிரம் பணிந்து மரியாதை செய்யுமாறு அவன் கட்டளையிட்டபோது, அதற்குப் பெருமையாக மறுத்துப் பேசிய இப்லீஸிடம் அல்லாஹ் சொன்ன வார்த்தை: ‘உன்னையும், உன்னைப் பின் தொடர்ந்தவர்களையும் கொண்டு நரகத்தை (ஜஹன்னம்) நான் நிச்சயம் நிரப்புவேன்’ (அல்குர்ஆன் 7:18) என்பதுதான்.

நரகத்தை விட்டுப் பாதுகாப்பு பெற்றுவிட்டால் போதும், மற்ற அனைத்தும் இலேசாகிவிடும். சுவர்க்கத்தைத் தனியாகக் கேட்கவேண்டிய கட்டாயமில்லை. எனினும் கேட்கலாம். எனவேதான் ஹஜ்ஜின்போது கேட்க வேண்டிய மிக மிக முக்கிய துஆவாகிய ‘ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா…’ எனும் எல்லோரும் அறிந்துள்ள – எப்போதும் கேட்கப்படும் துஆவில் ‘இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நல்வாழ்வைத் தா! மறுமையிலும் நல்வாழ்வைக் கொடு! நரகின் வேதனையை விட்டும் எங்களைக் காப்பாற்று’ என்று நாம் கேட்கின்றோம். நரகின் பாதுகாப்பு கிடைத்துவிட்டால் பிறகென்ன கஷ்டம்! நிலையான சுவர்க்கம் தானே அதன்பின்!

எனவே நமது துஆக்களில் மிகவும் அதிகம் இடம் பிடிக்க வேண்டிய கோரிக்கை, தலைப்பு வசனத்தில் இடம் பெற்றுள்ள நரகத்திலிருந்து பாதுகாப்புத்தான். எனவே தான் ஒவ்வொரு ஸுப்ஹுக்குப் பிறகும், மஃரிபுக்குப் பின்னரும் ‘அல்லாஹும்ம அஜிர்னீ மினன்னார்’ (‘யா அல்லாஹ்! நரக நெருப்பிலிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக’) என ஏழு தடவை கூறி நரகை விட்டுப் பாதுகாக்கக் கோருமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணித்துள்ளார்கள். செய்வோமா நாம்?

(நன்றி: ‘ஜமாஅத்துல் உலமா’ மாத இதழ் அக்டோபர் 2009)

நிச்சயம் செய்ய வேண்டும்! ஏனெனில் நரக நெருப்பு மிகவும் கடுமையானது. நரக நெருப்பைப்பற்றி குறிப்பிடும்போது, ‘நரக நெருப்பில் வீழ்ந்து கிடப்பவனை இவ்வுலக நெருப்பில் போட்டால் அவன் அதில் நிம்மதியாகத் தூங்குவான்’ என்று ஒரு நபிமொழி கூறுகிறது.

இவ்வுலக நெருப்பின் சிறிதளவைக்கூட எந்த மனிதனாலும் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும்போது அந்த நெருப்பிலேயே ஒருவன் படுத்து நிம்மதியாகத் தூங்குகின்றான் எனில் இதற்குமுன் அவன் வீழ்ந்து கிடந்த நரக நெருப்பு எவ்வளவு கடுமையானதாக இருந்திருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா?!. ஆகவே ஒவ்வொரு நாளும் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்புப்பெற ஐவேளை ஒழுங்காக தொழுவதுடன் இஸ்லாமிய கடமைகள் அனைத்தையும் முறையாக நிறைவேற்றி அல்லாஹ்விடம் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பைப் பெறுவோமாக.

www.nidur.info

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 4

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb