Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வக்ஃபுச் சொத்துக்களை மீட்க ஆலிம்களே அணி திரளுங்கள்!

Posted on December 22, 2010 by admin

[ பழைய சட்டத்தின் ஓட்டையை அடைக்கிறோம் என்ற பெயரில் 1994 -ல் உருவாக்கப்பட்ட புதிய சட்டத்தில் ஓட்டை பெரிதானது தான் மிச்சம். அந்த ஓட்டைகளை பயன்படுத்தி வக்ஃபுச் சொத்துக்களை வல்லூறுகள் கூறு போட்டுக் கொண்டனர். விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் சொத்துக்களை வசதி படைத்த பெருச்சாலிகள் துவம்சம் செய்தன.

அரசு நியமித்த நீதியரசர்கள் வக்ஃபு வாரியங்களை ஆய்வு செய்துவிட்டு இந்திய வக்ஃபு வாரியங்களில் நடப்பது போன்ற ஊழல் இந்த உலகில் வேறு எங்கும் நடப்பதில்லை என்று அறிக்கை கொடுத்தனர். மறுபடியும் சட்டத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

சொத்துக்கள் பறிபோன பிறகும் இனியும் முஸ்லிம் சமூகம் விழிப்புணர்வு பெறவில்லை என்றால் எதிகால தலைமுறையின் கடுமையான ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டிய சூழல் ஏற்படும். முதலில் ஆலிம்கள் இதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். உலமா நல வாரியம் கேட்டுப் பெறும் அளவிற்கு அவர்களிடம் அறியாமையும் இயலாமையும் மிகுந்துள்ளதை காலம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

வக்ஃபுச் சொத்துகளில் முறைகேடு செய்வோர் யாரும் அமைப்பிலோ இயக்கத்திலோ கட்சியிலோ பொறுப்பு வகிக்கத் தகுதியற்றவர்கள் என்று ‘பைலாவில்’ விதி எழுத, அதை பகிரங்கமாக அறிவிக்க எத்தனை அமைப்புகளின் தலைவர்களுக்கு துணிவும் இறையச்சமும் இருக்கிறது?]

நமது நாடு பலஇன மக்களின் கூட்டுக் கலவையாக அமைந்திருக்கிறது. அடிப்படைக் கொள்கையிலேயே ஆயிரம் வேறுபாடுகளைக் கொண்ட மக்களாக வாழ்ந்து வருகிறோம்.

ஒவ்வொரு சமுதாய மக்களும் தங்களுக்கான சமுக, பொருளாதாரப் பாதுகாப்பிற்கான திட்டங்களை தாங்களே உருவாக்கி அதன்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் இன்றைய நடைமுறை நிதர்சனமாக இருக்கிறது.

இத்தகைய திட்டங்களை வகுப்பதிலும் அவற்றை முறையாக நடைமுறைப் படுத்துவதிலும் அந்தந்த சமுதாயத்தில் உள்ள சமூக ஆர்வலர்களுக்கும், படித்தவர்களுக்கும் பெரும் பொறுப்பும் கடமையும் இருக்கிறது. மதச்சார்பற்ற அரசு ஒட்டு மொத்த சமுதாய மேம்பாட்டிற்கும் ஓரளவு தான் உதவி செய்யும். அரசே எல்லா மக்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிட முடியாது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் குடிமக்களில் ஒருசாராரின் தேவைகளைப் பூர்த்தி செய்திட அற்புதமான ஏற்பாடாக வக்ஃபு எனும் அறப்பணிகளுக்கான அமைப்பை இஸ்லாம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம் முன்னோர்களின் அளப்பரிய தியாகத்தால், இறையச்சத்தால் உருவான இந்தப் பொருளாதாரச் சுரங்கத்தை – விளிம்பு நிலை மக்களின் சமுக, பொருளாதார, பாதுகாப்பு போன்றவற்றிற்கான நிலையான ஏற்பாட்டை – சீரழித்த பெருமை முஸ்லிம்களையே சாரும்.

இந்திய அரசு விடுதலைக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டில் வக்ஃபுச் சொத்துக்களைப் பாராமரித்திட இந்தியா முழுவதும் வாரியங்களை அமைத்து அவைகளை முறைப்படுத்திட அதற்கொரு சட்டத்தையும் உருவாக்கித் தந்தது. சட்டத்தில் பல ஓட்டைகள் இருந்தன. அது அரசின் குற்றமல்ல, அந்த சட்டத்தை உருவாக்கிய ஒரு சில முஸ்லிம்களுக்கு சட்டத்திலும் ஷரீ அத்திலும் நிபுணத்துவமும் நுண்ணறிவும் இல்லாமல் போனது தான் குற்றம்.

பழைய சட்டத்தின் ஓட்டையை அடைக்கிறோம் என்ற பெயரில் 1994 -ல் உருவாக்கப்பட்ட புதிய சட்டத்தில் ஓட்டை பெரிதானது தான் மிச்சம்.

அந்த ஓட்டைகளை பயன்படுத்தி வக்ஃபுச் சொத்துக்களை வல்லூறுகள் கூறு போட்டுக் கொண்டனர். விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் சொத்துக்களை வசதி படைத்த பெருச்சாலிகள் துவம்சம் செய்தன.

அரசு நியமித்த நீதியரசர்கள் வக்ஃபு வாரியங்களை ஆய்வு செய்துவிட்டு இந்திய வக்ஃபு வாரியங்களில் நடப்பது போன்ற ஊழல் இந்த உலகில் வேறு எங்கும் நடப்பதில்லை என்று அறிக்கை கொடுத்தனர். மறுபடியும் சட்டத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

2009-ல் மூன்றாவது முறையாக புதிய சட்டம் உருவாக்கப்பட்டு தற்போது மேல்சபையில் கிடப்பில் கிடக்கிறது. வக்ஃபு வாரியங்களில் பொறுப்பாளர்களாக உள்ளவர்களின் ‘தார்மீக’ ஆதரவோடு சொத்துக்களை ஆக்கிரமிப்புச் செய்துள்ளவர்களுக்கு அமோக விளைச்சல் கிடைக்கிறது. அதில் எல்லோருக்கும் பங்கு. சொத்துக்களுக்குச் சொந்தக்கார விளிம்பு நிலை முஸ்லிம்கள் அடிப்படைத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய இயலாமல் தெருவில் நிற்கின்றனர். சமுதாய அமைப்புகளும் இளைஞர்களும் வேடிக்கை பார்க்கின்றனர்.

சென்னை அருண்டேல் தெரு பள்ளிவாசலுக்குச் சொந்தமான 95 கிரவுண்ட் சொத்துக்களின் இன்றைய மதிப்பு 250 கோடி ரூபாய். இதை ஆக்கிரமிப்புச் செய்துள்ள முஸ்லிம்(?) குடும்பத்திடமிருந்து அதைப் பாதுகாத்திட கடந்த 63 ஆண்டுகளாக வக்ஃபு வாரியத்திற்கும் நீதிமன்றத்திற்கும் நடையாய் நடக்கும் ஜமாஅத் நிர்வாகிகள், சமீபத்தில் முக்கியஸ்தர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து பிரச்சனையை விளக்கி வக்ஃபுச் சொத்துக்கள் ஆக்கிரமிப்பிற்கும் வாரியத்தின் ஊழலுக்கும் முடிவுகட்டுமாறு வந்திருந்த சமுதாய தலைவர்களுக்கும், முக்கியஸ்தர்களுக்கும் வேண்டுகோள்விடுத்தனர்.

இவ்வளவு சொத்துக்கள் பறிபோன பிறகும் இனியும் முஸ்லிம் சமூகம் விழிப்புணர்வு பெறவில்லை என்றால் எதிகால தலைமுறையின் கடுமையான ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டிய சூழல் ஏற்படும். முதலில் ஆலிம்கள் இதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். உலமா நல வாரியம் கேட்டுப் பெறும் அளவிற்கு அவர்களிடம் அறியாமையும் இயலாமையும் மிகுந்துள்ளதை காலம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இறைவனின் வாழ்வியல் அமைப்பு என்று இஸ்லாம் சொல்லும் மரணத்திற்கும், விபத்திற்கும் பணம் பெறுவதற்கு நல வாரியத்தை நாடும் உலமாக்கள் தங்களைப் போன்ற சமுதாய மறுமலர்ச்சியில் ஈடுபடும் அத்தனை மக்களின் அனைத்துத் தேவையையும் பூர்த்தி செய்திட அமைந்துள்ள வக்ஃபுச் சொத்துக்கள் தங்கள் கண்முன் சுரண்டப்படுவதைப் பார்த்து கை கட்டி வாய் பொத்தி நிற்கின்றனர். காவல் அரணாக நிற்க வேண்டிய அவர்களே இப்படி என்றால் பொதுமக்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

வக்ஃபுச் சொத்துகளில் முறைகேடு செய்வோர் யாரும் அமைப்பிலோ இயக்கத்திலோ கட்சியிலோ பொறுப்பு வகிக்கத் தகுதியற்றவர்கள் என்று ‘பைலாவில்’ விதி எழுத, அதை பகிரங்கமாக அறிவிக்க எத்தனை அமைப்புகளின் தலைவர்களுக்கு துணிவும் இறையச்சமும் இருக்கிறது?

முஸ்லிம்களிடம் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால் அது எப்படி நிர்வகிக்கப்படும் என்பதை அரசிற்கும் வெளி உலகுக்கும் படம்பிடித்துக் காட்டுகின்றன இன்றைய வக்ஃபு வாரியங்களின் நிர்வாகங்கள், இறைவனின் பிடி இறுகுவதற்குள் வாரியத்தின் அனைத்துப் பொறுப்பாளர்களும் தங்களைத் திருத்திக் கொள்வது நல்லது.

source: http://www.samooganeethi.org/?p=687

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

60 − 55 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb