Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இறையோனின் பேரருளே!

Posted on November 22, 2010 by admin

இறையோனின் பேரருளே!

  திருவை அப்துர் ரஹ்மான் 

ஒட்டியே வைத்ததுபோல் ஒரு கோடி முல்லை மலர்

கொட்டிக் கிடப்பதுபோல் கோலமிடும் வானத்தில்

வட்டில் நிறை சுடராம் வைரமணிக் கோளங்கள்

எட்டிப் பார்ப்பதெல்லாம் இறையோனின் பேரருளே!

 

மின்னும் பனிமுத்தில் மோகமெனும் வலைவீசி

பொன்னாய் ஒளிசிந்திப் போர்வீரன் போல வரும்;

கண்ணைக் கவர்ந்திழுக்கும் கதிரவனின் செங்கரங்கள்

மண்ணைப் படைத்தோனின் மாபெரிய பேரருளே!

 

மூன்றில் ஒருபகுதி முத்துவிளை கடல்சூழும்

தோன்றும் மீன்களினம் துள்ளிவிளை யாடிவரும்

நீந்தும் அலைக்கரங்கள் நிலம்பார்த்து நீண்டுவரும்

ஆன்றநற் சிறப்புடைய ஆண்டவனின் பேரருளே!

 

ஏரைப் பூட்டியவன் உழுதூன்றும் ஒருவித்து

பாரை மகிழ்விக்கப் பலநூறு கதிர்விளைக்கும்

சோறை யூட்டிடவே சுடுபசியை ஓட்டிடவே

நீரைப் படைத்தயிறை நிதங் காட்டும் பேரருளே!

 

பூவில் மணம் வைத்தான் போயமரும் வண்டுண்ண

நாவில் நீரூறும் நல்லசுவைத் தேன்வைத்தான்

ஆவில் பாலமைத்தான் அதில்நூறு பயன்வைத்தான்

காவில் கனிதந்தான் கருணையிறைப் பேரருளே!

 

கண்ணில் ஒளியமைத்தான் காட்சிபல கோடிவைத்தான்

பெண்ணின் கருவாழ்வில் பேசுமொழி உருசமைத்தான்

மண்ணில் மனிதகுலம் மாண்புடனே பயனடைய

எண்ணில் அற்புதங்கள் இறைதந்த பேரருளே!

 

பஞ்ச பூதங்களும் படைத்தவனின் பேரருளே

அஞ்சின் உறுப்புகளும் அவன் கருணைப் பேரருளே

செஞ்சொல் நாவன்மை தருமிறையின் பேரருளே

நெஞ்சின் நினைவுகளும் நேசனிறைப் பேரருளே!

 

நன்றி: முஸ்லிம் முரசு, மார்ச் 1987.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 11 = 15

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb