Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

‘ரஹ்மத்தும்’ – ‘ஜஹ்மத்தும்!’

Posted on October 30, 2010 by admin

‘ரஹ்மத்தும்’ – ‘ஜஹ்மத்தும்!’

      ரஸூல் சாகிப், திருச்சி      

உலகில் அடிக்கடி எங்கேனும், ஏதேனும் விபத்துகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. விமான விபத்து, கப்பல் விபத்து, ரயில் விபத்து, நடைபாதை விபத்து, தீ விபத்து என்று ஏதேனும் ஒரு விபத்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இவை தவிர, இயற்கையின் சீற்றம் காரணமாக, பேய்க்காற்று, பேய்மழை என்பதோடு சுனாமி போன்ற பலவித விபத்துகள் மூலம் மனிதர்கள் இறக்கின்றனர். உயிர் நஷ்டம், பொருள் நஷ்டம் என பலவித நஷ்டங்கள் ஏற்படுகின்றன.

காற்று இல்லையென்றால், மனிதனால் ஒரு சில நிமிடங்கள்கூட வாழ முடியாது. மழையில்லை என்றால், தொடர்ந்து மனிதனால் வாழ முடியாது. இவையிரண்டையும் அல்லாஹ்வின் ‘ரஹ்மத்’ (பேரருள்) என்கிறோம். அதே காற்றும், மழையும் அளவிற்கு மீறி விட்டால், அந்த ‘ரஹ்மத்’, ‘ஜஹ்மத்’ (பெருந்தொல்லை) ஆக ஆகிவிடுகிறது. 

அரபி அட்சரங்களில், ‘ரே’ என்று ஒரு அட்சரமிருக்கிறது. அதற்கு அடுத்து வரக்கூடிய அட்சரத்திற்கு, ‘ஜே’ என்று கூறுகிறோம். இந்த ‘ரே’ அட்சரத்திற்கும், ‘ஜே’ அட்சரத்திற்கும் ஒரேயொரு புள்ளி தான் வித்தியாசம்.

இந்த புள்ளி இல்லாத அட்சரத்தைக் கொண்டு, ‘ரஹ்மத்’ என்று படிக்கின்றோம். ‘ரே’ மேல் ஒரு புள்ளி வைத்து விட்டால் அந்த சொல் ‘ஜஹ்மத்’ ஆகி விடுகிறது. ஒரேயொரு புள்ளியைக் கொண்டு எதிரும் புதிருமான பொருள் வருகிறது.

இந்த ‘ரே’ அட்சரத்தின் மீது புள்ளி விழச் செய்வது மனிதனுடைய செயல்கள்தான்! அவன்தான் தனது பாவச் செயல்களின் காரணமாக ‘ரே’ மீது புள்ளி வைத்து அதனை ‘ஜே’ ஆக்கி விடுகிறான்.

‘நிலத்திலும், நீரிலும் ஏற்படும் ஆபத்துகளெல்லாம் மனிதன் தனது கரங்களாலேயே தேடிக் கொள்கிறான்’ என்பது திருக்குர்ஆனிலுள்ள ஒரு வசனத்தின் கருத்தாகும். இப்பொழுது இந்த திருவசனத்தை வைத்துப் பார்க்கும்போது, ‘ரஹ்மத்’, ‘ஜஹ்மத்’ ஆகி விடுவதற்கு மனிதனே காரணம் என்று துல்லியமாக அறிய முடிகிறது.

அல்லாஹ், மகா கிருபையாளன், மன்னிப்பதில் நிகரற்றவன். அத்தகைய கிருபையாளன், தனது படைப்புகளில் மிக உயர்ந்த படைப்பாகிய மனிதனைப் பல வகையில் சிக்க வைக்கிறான் என்றால், அது அல்லாஹ் மீது கூறப்படும் குற்றமா? மனிதனின்மீது குற்றமா? என்பதை மனிதர்களாகிய நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

‘அடியான், என்னுடைய ஏவல், விலக்கல்களை ஏற்று, அச்சமுள்ள வாழ்வு வாழ்ந்து வருவானேயானால், இரவில் மழை பெய்யச் செய்து, பகலில் வெயில் அடிக்கச் செய்வேன். மழையினாலோ, இடியினாலோ அவனுடைய தூக்கம் பாதிக்காது.’ இப்படியொரு அருள்வாக்கு அல்லாஹ்வுடையதாக இருப்பதாக அறிய முடிகிறது. அவனுடைய அருளுக்குப் பஞ்சமில்லை.
பேரழிவுகள் ஏற்படும்போது அதில் அல்லாஹ்வின் நல்லடியார்களும் அழிந்துவிடுகிறார்கள். ஆனால், அத்தகையவர்களுக்கு அல்லாஹ், ‘ஷஹீத்’ என்னும் உயர்ந்த அந்தஸ்துகளைத் தந்து கவுரவிக்கின்றான்.

மனிதன் யாராக இருந்தாலும் அவன் தூய்மையான வாழ்வே வாழ வேண்டும். அப்பொழுதுதான் அந்த ‘ரே’ மீது புள்ளி விழாது. அல்லாஹ் நம் அனைவரையும் காத்தருள் புரிவானாக, ஆமீன்.

நன்றி: ‘ஜமா அத்துல் உலமா’ மாத இதழ், ஜனவரி 1997

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

23 + = 33

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb