மருத்துவத்தின் அரசியல் (2)
மருத்துவர்,அ.உமர் ஃபாரூக்
DPT தடுப்பூசியோடு ஒரு எச்சரிக்கை அறிக்கையும் தரப்படுகிறது. (இந்த தடுப்பூசி மருந்தையே நம் டாக்டர் கண்ணில் காட்டமாட்டார். சிரிஞ்சில் ஏற்றப்பட்ட பிறகே நாம் அதைப் பார்க்க முடியும்.இந்த நிலையில் அறிக்கையாவது மண்ணாவது). DPT தடுப்பூசி போட்டுக் கொள்வதால் சில பின்விளைவுகள் ஏற்படலாம் என்று குறிப்பிடும் இந்த எச்சரிக்கை அறிக்கையை கொஞ்சம் வாசியுங்களேன்.
1. அதிகப்படியான காய்ச்சல் ( 105 டிகிரி அல்லது அதற்கு மேல்)
2. மந்தமாக இருத்தல்
3. நீடித்த அசதி
4. விட்டு விட்டு ஏற்படும் அலறல்
5. மூளை வளர்ச்சிக் குறைபாடு
6. அதிகப்படியான துறுதுறுப்பு
7. எப்பொழுதாவது வலிப்பு
8. மூளை பாதிப்பு
9. மயக்கம்
10. கண் நரம்புக் கோளாறுகள்
11. நரம்பு சம்பந்தமான நிரந்தரக் கோளாறுகள் அல்லது மனநலக் குறைபாடு! . . . இப்படி ஒவ்வொரு தடுப்பூசி மருந்துடனும் வெவ்வேறு வகையான எச்சரிக்கைக் குறிப்புகளை இணைத்துத்தான் உலகம் எங்கும் விற்கப்படுகின்றன. தடுப்பூசியால் ஏற்படும் உச்சபட்ச விளைவாக குறிப்பிடப்படுவது எது தெரியுமா? SIDS தான். SIDS என்றால் Sudden Infant Death Syndrome அதாவது குழந்தை திடீரென இறந்துபோகும் என்பதைத்தான் இவ்வளவு அழகாகச் சொல்கிறார்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க் என்று வெளிநாடுகளில் தானே இப்படி யான மரணங்கள் பதிவாகியுள்ளன. நாம் பயன்படுத்துவது வேறு மருந்தாக இருக்கும் என்று நினைத்துவிட வேண் டாம். இந்தியாவிலும் இத்தகைய பாதிப்பு கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின் றன. நம்முடைய பதிவேடுகளும், குறிப்பு களும் முறைப்படி எழுதப்படாமல் இருந் தாலும்கூட அரசும், மருத்துவத்துறையும் உணர்ந்துதான் இருக்கின்றன.
சில இந்தியக் குறிப்புகள்:
o சில வருடங்களுக்கு முன்னர் அஸ்ஸா மில் போலியோ சொட்டு மருந்து கொடுத்த பின் 10 குழந்தைகள் இறந்த தும், 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டதும் நிகழ்ந்தது.
o2002 ஆம் ஆண்டில் உத்திரப்பிர தேசத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுத்த உடன் 26 குழந்தைகளுக்கு போலியோ ஏற்பட்டது. உலக சுகாதார நிறுவனத்திற்கு (WHO) இந்திய அரசு கடிதம் எழுதி அதன் தரம் பற்றிய பரி சோதனை கோரியது. இறுதியில் போலியோ சொட்டு மருந்தில் 17 வகை கலப்படங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. பின்பு வழக்கம்போல் மறக்கப்பட்டது.
oதெஹல்கா , ஜூலை 28, 2007 இல் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. உத்திரப்பிரதேசத்தில் கொடுக்கப்பட்ட போலியோ மருந்து ஆய்விற்காக, பரிசோதனை முயற்சியாக கொடுக்கப்பட்டது. வழக்கமாக பயன்படுத்தும் சொட்டு மருந்தைவிட ஐந்துமடங்கு அதிக வீரியம் கொண்ட அந்த மருந்தை மக்களுடைய சம்மதம் பெறாமலே அவர்கள் மேல் பரிசோதிக்கப்பட்டது என்பதை அக்கட்டுரை தெளிவாக எடுத்துரைத்தது.
oஇந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவர் டாக்டர்.ஜேக்கப் புலியேல் உத்திரப்பிரதேச சம்பவம் பற்றி திறந்த மனதோடு கட்டுரை எழுதினார். தி இந்து நாளிதழில் வெளியான அவரு டைய மற்றொரு கட்டுரையில் போலியோ சொட்டு மருந்தின் பிரச்சினை கள் குறித்து விரிவாக எழுதியிருந்தார். 2006 இல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் உள்ளது என்றும் அக்கட்டுரை கூறுகிறது.
oஉலக சுகாதார நிறுவனத்தின் நிலையே போலியோ விஷயத்தில் சந்தேகத்திற்கு உரியதுதான் என்கிறார் டாக்டர்.ஜேக்கப் புலியேல். இந்தியச் சூழலுக்கு போலியோ சொட்டு மருந்து சரிப்பட்டு வராது என்று கூறிய அதே WHO தீவிர போலியோ முகாமுக்கு பரிந்துரை செய்தது எதானால்? யாரால்? (The Hindu, Politics Of Polio 11/2008).
oஇந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை தடை செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர். சத்யமாலா தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. (நன்றி:டாக்டர். புகழேந்தி )
தோண்டத் தோண்ட வெளிவரும் தடுப் பூசி பற்றிய உண்மைகள் இத்தோடு முடிந்துவிடவில்லை. இந்த தடுப்பூசி களின் இரகசிய வரலாற்றில் நம் குழந்தைகள் இடம்பெறாது போக வேண்டுமானால் விழிப்புணர்வு ஏற்பட்டே ஆகவேண்டும்.
டாக்டர்.வில்லியம் ட்ரெப்பிங் தன் நூலில் சில கேள்வி பதில்களைத் தந்துள்ளார். அவற்றை இங்கே வாசிப் பது பொருத்தமானதாக இருக்கும்.
உங்கள் மருத்துவருக்கு கற்றுத் தருவது எப்படி?
உங்களையும் என்னையும் போன்ற சராசரி மக்களுக்கு அடிப்படை விழிப்புணர்வு கிடைக்கப்பெற வேண்டும். உங்களுடைய குழந்தை நல சிறப்பு மருத்துவர் அவர் பயன்படுத்தும் தடுப்பூசி பற்றிய சந்தேகங் களுக்கு திருப்திகரமான பதில்களை உங்களுக்கு அளித்தே ஆக வேண்டும். இல்லையெனில் சரியாக பதிலளிக்கும் இன்னொரு மருத்து வரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய நேரம் வரும்.
உலகத்திலுள்ள எல்லா மருத்துவர்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான கேள்விகளையே கேட்பார்கள்.
நீங்கள் மருத்துவருடன் உரையாட பின்வரும் கேள்வி பதில்கள் உதவும்.
மருத்துவர் : தடுப்பூசி மருந்து முற்றிலும் பாதுகாப்பானது.
உங்கள் பதில்: நீங்கள் சொல்லும் தடுப்பூசிகளில் பாதரசம், அலுமினியம், பார்மால்டிஹைட் போன்றவைகள் உள்ளன. இவைகள் விஞ்ஞானரீதியில் நிரூபிக்கப்பட்ட நரம்பை பாதிக்கும் விஷங்கள். நீங்கள் எவ்வாறு இவ்வளவு உறுதியாக இந்த ரசாயன விஷங்களை பாதுகாப்பானது என்று கூறுகிறீர்கள்?
மருத்துவர்: தடுப்பூசியை எதிர்க்கும் மக்கள் போலியான ஆராய்ச்சிகளை நம்புகிறார்கள்
உங்கள் பதில்: தடுப்பூசி பற்றிய எச்சரிக்கைகளை மக்களுக்கு வழங்கிய ஆய்வுகள் அனைத்தும் தரமான, தகுதியான மருத்துவர்களாலும், பல பல்கலைக்கழகங்களிலிருந்து வந்த அனைத்துத்துறை சார்ந்த நிபுணர்களாலும் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாய்வுகள் அமெரிக்காவில் மட்டுமல்ல பல்வேறு உலகநாடுகளிலும் செய்யப்பட்டன. ஆராய்ச்சி யாளர்களில் பெரும்பாலோர் மருத்துவத்திலும், நுண்ணுயிரியலிலும் பட்டம் பெற்றவர்கள். தடுப்பூசிக்குச் சாதகமான ஆய்வுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பாக மருந்துக் கம்பெனிகளால் செய்யப் பட்டவைகளாகும்.
மருத்துவர் : குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருப்பது ஆபத்தான, பொறுப்பற்ற பெற்றோரின் அணுகுமுறை.
உங்கள் பதில்: தடுப்பூசி போடாமல் இருக்கும் முடிவை எடுப்பதற்குத்தான் கூடுதலான பொறுப்புணர்வு தேவை. ஆழமான ஆய்வு நோக்கம் இருந்தால் தவிர இம்முடிவை யாராலும் எடுக்க முடியாது. இன்றைய சூழலில் நிறையக் குழந்தைகள் மூளைக்கோளாறால் பாதிக்கப் பட்டிருக்கும் போது வெறும் மருத்துவ ஆலோசனையை மட்டும் நம்புவது போன்ற முட்டாள் தனம் வேறெதுவும் இல்லை.
மருத்துவர்: நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் (அமெரிக்க) சட்டத்தை மீறுகிறீர்கள் என்று அர்த்தம். இதன் காரணமாக நீங்கள் கைது செய்யப்படலாம் அல்லது உங்கள் குழந்தையை உங்களிடமிருந்து பிரிக்கலாம்.
உங்கள் பதில்: நீங்கள் வழக்கறிஞர் அல்ல; தயவு செய்து சட்டத்தைப் பற்றி பிரசங்கம் செய்ய வேண்டாம். ஏனென்றால், எந்த ஒரு சட்டமும் தனிமனித உரிமைக்கு எதிராய் அமைய முடியாது.
மருத்துவர் : நீங்கள் தடுப்பூசி போடவில்லையென்றால் உங்கள் குழந்தைக்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது. மிகத் தீவிரமான நோய் உங்கள் குழந்தையின் உயிரையே குடிக்கலாம்.
உங்கள் பதில்: தடுப்பூசிகள் உண்மையிலேயே நீங்கள் நம்புவதுபோல் வேலை செய்தால் தடுப்பூசி போட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு நோய்கள் வந்திருக்கக்கூடாது. அதேபோல, தடுப்பூசி போடாதவர்கள் நீங்கள் கூறும் ஆபத்து எதுவுமின்றி ஆரோக்கியமாகவே வாழ்கிறார்கள்.
மருத்துவர்: தடுப்பூசி போலியோவை 1950களிலேயே தடுத்து விட்டது.அழித்துவிட்டது.
உங்கள் பதில் : நீங்கள் கூறுவது மிகவும் அதிகப்படியான கற்பனை. உண்மை என்னவென்றால் 1953 க்குப்பிறகு போலியோவின் தாக்கம் இயற்கையாகவே குறைந்துவிட்டது. 1957 க்குப்பிறகுதான் போலியோ தடுப்பூசி பிரச்சாரம் செய்யப்பட்டது.தடுப்பூசி போடப்பட்ட பின் போலி யோவைப் போன்ற மூளை, தண்டுவட நோய்கள் பயங்கரமான அளவில் பெருகியுள்ளது. போலியோவைக் கண்டிபிடித்த ஜோன்ஸ் சால்க் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தால் 1966 – 76 வரை ஏற்பட்ட போலியோவில் 3ல் 2 பங்கு அதிகரித்தது என்று கூறியுள்ளார்.
மருத்துவர் : தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்கள் குறைந்துள்ளன. தடுப்பூசிகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கையில் குறைவுதான். (அறிவியல் வளர்ச்சியில் இப்படியான பாதிப்புகளும் இருக்கத்தானே செய்யும்)
உங்கள் பதில் : உலகின் எந்த நாடானாலும் சரி; அரசாங்கம் அழிந்து விட்டதாகக் கூறும் அதே நோய்கள் இன்றும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் 95% குழந்தைகள் தடுப்பூசி போட்டவர்கள என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
மருத்துவர் : இக்கால மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசிகளும், நுண்ணியிர்க்கொல்லி மருந்துகளும் தான்.
உங்கள் பதில் : இயற்கையாகவே நீண்டநாட்கள் வாழ்பவர்களுடைய பலனை ஆங்கில மருத்துவம் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்கிறது. ஆனால் உண்மை வேறுவிதமாக உள்ளது. நுண்ணியிர்க்கொல்லி மருந்துகள் சில தற்காலிகத் தொந்தரவுகளை மறைய வைக்கலாம். ஆனால் இந்த மருந்துகளைப்பற்றிய ஆராய்ச்சிகள் அனைத்தும் அதிகப்படியான நோய்கள் உருவாக இவற்றையே காரணமாகக் கூறுகின்றன. நுண்ணியிர்க்கொல்லி மற்றும் தடுப்பூசிகள் இரண்டுமே விற்பனைக்காக மருந்துக் கம்பெனிகளால் பிரச்சாரம் செய்யப்படுபவை தான். இந்தக் கம்பெனிகள் தங்கள் லாபத்திற்காக ஆராய்ச்சிகளை நடத்தி அறிக்கைகளைத் தயார் செய்கின்றன. இந்த பித்தலாட்டம் இல்லாமல் அரசாங்க உதவியுடன் மருந்து விற்க முடியாது.
மருத்துவர்: புதிய பெரியம்மை தடுப்பூசி ஆங்கில மருத்துவத்தின் இன்னொரு மைல் கல்.
உங்கள் பதில்: இந்த புதிய ஊசியைப் பயன்படுத்தி செய்யப்படும் ஆராய்ச்சி துவக்கநிலையில் தான் உள்ளது. அந்த ஆராய்ச்சியையும் ஒரு தடுப்பூசி தயாரிக்கும் மருந்து கம்பெனிதான் செய்கிறது. பெரியம்மையால் தாக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 95% பேர் பெரியம்மை தடுப்பூசி போட்டவர்கள்தான். தடுப்பூசி தவிர மாற்று மருத்துவ முறைகளில் சிகிச்சை பற்றி உங்கள் ஆராய்ச்சிகள் ஏன் பேச மறுக்கின்றன?
பெரியம்மைக்கு ஹோமியோபதி முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் 36 மணி நேரத்தில் அதிலிருந்து விடுபடுகிறார்கள். தடுப்பூசியால் உடல்நலம் ஏற்படும் என்று பிரச்சாரம் செய்வதைக் காட்டிலும் கொடூரம் வேறொன்றுமில்லை – டாக்டர். ஹென்றி லிண்ட்லார் தடுப்பூசிகளின் காரணத்தால் உலகின் ஒரு நாள் இரத்த ஆறு ஓடும். நாளைய டாக்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி எப்படி ஒரு நல்ல ஆராய்ச்சியும் இல்லாமல் எந்த ஒரு நன்மையும் இல்லாத விஷத்தை நம்முடைய பிஞ்சுக்குழந்தைகளின் உடலில் ஏற்றி 21 ஆம் நூற்றாண்டு வரை கொண்டு சென்றோம் என்று புலம்புவார்கள். – டாக்டர். டெட் கோரன், தடுப்பூசி ஆராய்ச்சியாளர்.
குறிப்புகள் மொழியாக்க உதவி : மருத்துவர்.இரா.ஞானமூர்த்தி
Source: http://www.pudhuvisai.com/2010/07/blog-post_9934.html