Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சுகாதாரமற்ற தண்ணீரே பெரும்பாலான உயிரிழப்புகளுக்குக் காரணம்: ஐ.நா.

Posted on October 1, 2010July 2, 2021 by admin

நியூயார்க்: உலகில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகள் சுகாதாரமற்ற தண்ணீரை பயன்படுத்துவதால் மட்டுமே ஏற்படுகின்றன என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகில் ஆங்காங்கே ஏற்படும் கலவரங்கள், போர்கள் ஆகியவற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளை விட தண்ணீர் மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை ஐ.நா. அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஐந்து வயதிற்குட்பட்ட ஒரு குழந்தை, தண்ணீர் சம்பந்தமான நோயினால் இறந்து போகின்றது. கெட்டுபோன மற்றும் மாசடைந்த தண்ணீரை பயன்படுத்துவதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்ற அனைத்து வகையான காரணங்களாலும் ஏற்படும் உயிரிழப்புகளை விட அதிகம்.

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் வேளாண் கழிவுகளால் நீர் ஆதாரங்களை நாம் அன்றாடம் மாசுபடுத்தி வருகிறோம். தினமும் கிட்டத்தட்ட 20 லட்சம் டன் கழிவுகள் ஆறுகள் மற்றும் கடல்களில் கலக்கப்படுகின்றன.

இந்த கழிவுகளே சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கும், பல்வேறு நோய்கள் பரவுவதற்கும் ஆதாரமாக விளங்குகின்றன. இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மக்களே ஆவர். குடிநீர் தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் கேடு மற்றும் சுகாதாரமற்ற கழிப்பிட வசதிகள் போன்ற பிரச்னைகள் ஏழைகளையே பெருமளவில் பாதிக்கின்றன.

ஆண்டொன்றுக்கு 18 லட்சம் குழந்தைகள் பாதுகாப்பற்ற குடிநீரைப் பயன்படுத்துவதால் உண்டாகும் நோய்களால் மட்டும் இறக்க நேரிடுகிறது.

தற்போது 600 கோடியாக உள்ள உலக மக்கள் தொகை இதே வேகத்தில் வளர்ச்சி அடைந்தால் வரும் 2050-க்குள் 900 கோடியை எட்டிவிடும்.

அப்போது ஏற்படும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, அறிவுப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தண்ணீரை மாசுபடாமல் தடுப்பதும் இந்த நடவடிக்கைகளுள் முக்கியமான ஒன்று என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb