Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கண் என்னும் ஜன்னல்!

Posted on September 28, 2010 by admin

Woman Eyes PNG Pic

 

கண் என்னும் ஜன்னல்!

ஜன்னல் என்பது இருவழி போக்கு.

ஒளியும், ஒலிகளும் மட்டுமின்றி,

ஜன்னல்கள் வழியே ஓடி வரும்,

வளியும், வாசனைகளும் கூடி!

வெளியே இருப்பவர் காணலாம்,

உள்ளே இருக்கும் பொருட்களை;

நபர்களை, நடவடிக்கைகளை;

 

நல்லது, பொல்லாதவைகளை.

கண்கள் ஆன்மாவின் ஜன்னல்கள்.

வெளி விஷயங்கள் உள்ளே செல்லும்,

கண்கள் வழியே! உள்ளே இருப்பவையும்,

வெளியே தெரியும், காண்பவர்களுக்கு!

மதலையின் கண்களில் ஒரு மாசின்மை,

மங்கையின் கண்களில் ஒரு மயக்கம்;

மனிதனின் கண்களில் பொங்கும் காமம்,

புனிதரின் கண்களில் பெருகும் அருளொளி.

புலியின் கண்களில் வழியும் கொடூரம்,

மானின் கண்களில் தெரியும் மருட்சி;

அணிலின் கண்களில் தெறிக்கும் குறும்பு,

ஆட்டின் கண்களில் உள்ள அறியாமை.

நரியின் கண்களில் வழியும் தந்திரம்,

நாயின் கண்களில் விளங்கும் நேர்மை,

பூனையின் கண்களில் தெரியும் பெருமை,

யானையின் கண்களில் அமைந்த கம்பீரம்.

நம் கண்கள் வழியே வெளியே செல்லும்,

நம் உள்ளப் பாங்கும், நம் உணர்ச்சிகளும்;

இனிய எண்ணங்கள் தரும் அந்த அழகை,

இனித் தர முடியாது எந்த சாயப் பூச்சும்.

வாழ்க வளமுடன்,

விசாலாக்ஷி ரமணி.

source: http://visalramani.wordpress.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

57 + = 67

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb