Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

போதைப்பொருட்கள் உணர்ச்சியைத் தூண்டுமா?

Posted on September 23, 2010 by admin

போதைப்பொருட்கள் உணர்ச்சியைத் தூண்டுமா?

செக்ஸ் மனமொத்த மகிழ்ச்சியான அனுபவம் நம் மனதையும் சூழ்நிலையையும் பொறுத்தது. உடலளவில் பார்த்தால் ‘டெஸ்ட்ரோஸன்’ என்னும் ஹார்மோன் அளவைப்பொறுத்தே அமைகின்றது. இது ஆண், பெண் ஒரு பாலாருக்கும் ஏறக்குறைய ஒரே வயதில்தான் சுரக்கிறது.

போதைப் பொருள்கள் உடலின் ஹார்மோன்களை வேகமாக சுரக்கச் செய்யும் தன்மை வாய்ந்தவை. இயற்கைக்கு மாறாக நரம்புகளைச் சுண்டிவிடும். அதனால்தான் போதை மருந்து உட்கொண்டு விளையாட்டில் வெற்றி பெறுபவரை வெளியேற்றி விடுகின்றனர்.

அதேபோல் செக்ஸிலும், போதைப் பொருட்கள் சில நேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது, நம் உடல் தன் நிலையை மறந்துவிடத் தொடங்குகிறது.

போதைப் பொருட்கள் உணர்ச்சியைத் தூண்டுவது போன்று தெரிந்தாலும் மன நிறைவை ஏற்படுத்தாதது. அதேபோல் உச்சகட்டத்தைப் பெறவும் உதவாது. சமயங்களில், அந்த நிலையையே தடுத்துவிடும் ஆற்றல் படைத்தது.

சிகரெட் பிடித்தாலும் பெண்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய பெண்களுக்கு, அவரகளது உறுப்பில் வழவழப்புத் தன்மையை ஏற்படுத்தும் திரவத்தின் அளவைக் குறைத்து வறட்சித் தன்மையை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம், சிகரெட்டில் உள்ள ‘நிகோடின்’ ஆகும்.

மன உளைச்சலைக் குறைக்கும் சில மருந்துகளுக்குக் கூட இத்தன்மை உள்ளது. இதுபோன்ற மருந்து வகைகள், ‘சிரோட்டி னின்’ அளவைக் கூட்டுகின்றன. அதேசமயம்,‘டெஸ்ட்ரோன்கள்’ வேலையைக் குறைக்கிறது. ‘டெஸ்ட்ரோனே‘ செக்ஸைத் தூண்டும் முக்கிய ஹார்மோன் என்பது நாம் அறிந்ததே.

அண்மைக் காலங்களில், கருத்தரிப்பைத் தடுக்க பல்வேறு கருத்தடை மருந்துகள் உட்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக ‘புரோஜஸ்டின்’ எனப்படும் மருந்து வகையை உட்கொள்ளும் பொழுது, செக்ஸ் உணர்வு, குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.

ஆண்களுக்கு 18 அல்லது 20 வயதில் உள்ள அதே அளவுதான் பெண்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கும். ஆனால் ஆணுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பெண்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. பெண் என்பவள், உடலியல் ரீதியாக, இரண்டாம் பட்சமாகவே கருதப்படுகிறாள். அதன் விளைவாக, கட்டுப்பெட்டித்தனம் ஏற்படுகிறது. பெண்கள், தங்களுடைய செக்ஸ் உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளவும் முடியாது.

போதைப் பொருட்கள் போலவே, மதுவும் உடலின் நரம்புடன் நேரடியாக தொடர்பு கொள்வதால், முதலில் மகிழ்ச்சியாக இருப்பது போல தெரிந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல, நரம்பு மண்டலத்தை உளையச் செய்துவிடும்.

செக்ஸில் உச்சக்கட்டத்தை, விருப்பமற்ற நரம்புமண்டலத்தை தூண்டி ஏற்படுத்தி விடுகிறது. மது நேரடியாகவே அந்த குறிப்பிட்ட மண்டலத்தை தாக்குகின்றது. செக்ஸில் இருவரும் தங்கள் விருப்பங்களைத் தெளிவான முறையில் தெரிவித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், சிக்கல்தான்! சிக்கல் தோன்றிவிட்டால் பிறகு எப்படி முழுமையான இன்பத்தைப் பெறமுடியும்? மன உளைச்சல் ஏற்படும். மன உளைச்சல் ஏற்பட்டால் மற்ற வேலைகளையும் பாதிக்கும்.

செக்சில் நிறைவைப் பெற விடாமல் தடுக்கக்கூடிய காரணிகளில் ஒன்றான போதைப்பொருள்களை தவிர்ப்பது செக்ஸிற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பயனளிக்கக் கூடியதாகும்.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

23 + = 30

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb