Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பெண்கள் அழகு நிலையத்திற்குச் செல்லலாமா ?

Posted on September 23, 2010 by admin

நவீன காலத்துப் பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று தங்களை அழகுபடுத்திக் கொள்கிறார்களே! இது கூடுமா?

பதில்: ஒரு பெண் மார்க்கத்திற்கு முரண் இல்லாத வகையில் இறைவன் ஏற்படுத்திய அமைப்பில் எதையும் அகற்றாமலும் சிதைக்காமலும் அழகு படுத்திக் கொள்வதில் குற்றமில்லை. ஆனால் இன்றைய அழகு நிலையங்களில் பெண்களுடைய புருவங்களையும் பற்களையும் அழகிற்காக செதுக்குகிறார்கள்.

சில பேர் புருவத்தை மழித்து எடுத்து விட்டு ஸ்டிக்கர் புருவத்தை விதவிதமாக ஒட்டிக் கொள்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத அளவில் முகத்தில் வளரும் முடிகளைக் கூட விட்டு வைக்காமல் அவற்றை மழித்து எடுத்து விடுகிறார்கள். இது போன்று உருவத்தை சிதைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

“பச்சைக் குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல் வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி (5931)

ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டவர்கள் தான் இறைவனுடைய அமைப்பை மாற்றுவார்கள் என்று திருமறைக் குர்ஆன் கூறுகிறது.

“அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால் நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளை யிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். (அல்குர்ஆன் 4:119)

இந்த வசனம், இறைவனுடைய அமைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது. இன்னும் இறைவன் நம்மை அழகான படைப்பாக படைத்ததாகச் சொல்லிக் காட்டுகிறான்.

அப்படியிருக்க நாம் நம் அமைப்பை மாற்றும் போது இறைவனுடைய படைப்பை அசிங்கமானதாக நாம் கருதி விடுகிறோம். நம் கண்ணிற்கு அசிங்கமாகத் தெரிந்தாலும் அல்லாஹ் அதில் ஏதோ ஒரு அழகை மறைத்திருப்பான்.

”மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.” (அல்குர்ஆன் 95:4)

அதே நேரத்தில் மனிதத் தோற்றத்திற்கு மாற்றமாக உடல் அமைப்பு அமைந்திருந்தால் அவற்றைச் சரி செய்வது கூடும். உதாரணத்திற்கு, பெண்களுக்கு மீசை முளைத்திருந்தால், பற்கள் முன்பாக நீண்டிருந்தால் இவை போன்றதை அகற்றுவதில், சரி செய்வதில் குற்றம் இல்லை.

இன்னும் இந்த நவீன காலத்துப் பெண்கள் நாகரீகம் என்று எண்ணிக் கொண்டு ஆண்கள் உடுத்துகின்ற ஜீன்ஸ் T ஷர்ட் போன்ற ஆடைகளை அழகிற்காக உடுத்துகிறார்கள். இதற்கு மார்க்கத்தில் தடை உள்ளது. ஆண் உடுத்துபவற்றை பெண் அணியக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

பெண் அணிவதை அணியக் கூடிய ஆணையும் ஆண் அணிவதை அணியக் கூடிய பெண்ணையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் (3575)

நன்றி: சத்தியப்பாதை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

89 − = 85

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb