Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அதிசய பழங்கள்!

Posted on September 22, 2010 by admin

அதிசய பழங்கள்!

[ ‘அந்த நாளில் ஒரே ஒரு மாதுளையை ஒரு கூட்டத்தினர் உண்பார்கள். அதன் தோலில் நிழல் பெறுவார்கள்’ (அந்த அளவு அது பெரிதாக இருக்கும்).]

இயற்கையுடன் மனிதன் விளையாடுவது என்பது இடைவிடாமல் மும்முரமாக நடந்துவரும் ஒரு விளையாட்டு. அவ்வப்போது ஒட்டு மரத்தின் மூலம் பெரிய அளவில் காய்கறி, பழ வகைகளை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் முயன்று வருகிறார்கள். அதில் வெற்றியும் அடைந்து வருகிறார்கள்.

ஜெர்மனியில் ஓர் இடத்தில் உலகிலேயே மிகப்பெரிய பூசணிக்காய் ஒன்று விளைந்தது. அதன் எடை மட்டும் சுமார் 500 பவுண்டு ஆகும். மக்கள் இந்த அதிசயத்தை கண்டு களித்தனர். விஞ்ஞானிகள் இதனை ஆராய்ந்து வருகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன் நமது கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜி.டி. நாயுடு கூட தனது தோட்டத்தில் இயற்கையான அளவைவிட பெரிய அளவில் காய் கனிகளை பயிர்வித்து காண்பித்ததை தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது. இன்றும்கூட பல இடங்களில் இதுபோன்ற ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதைப்பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்று பார்ப்போமா! இதைப்பற்றியெல்லாம் கூடவா இஸ்லாம் கூறுகிறது என்கிறீர்களா? இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது! பரிபூரணமான மார்க்கமாயிற்றே இஸ்லாம். அது சொல்லாமல் விட்ட விஷயங்கள் எதுவுமில்லை என்பது சிந்திப்பவர்களுக்கு நிச்சயமாக வெள்ளிடைமலையாகத் தெரியும்.

அகிலத்தின் அருட்கொடை அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் ஒரு முறை கூறினார்கள்:

‘மிக விரைவில் இறைவனின் அருள்வளம் உங்களை வந்து அடையும்.’

(யஃஜுஜ், மஃஜுஜ் மடிந்தபின்) ‘அவர்களின் அம்புகளையும், விறகுகளையும், அம்பராத்தூளிகளையும் ஏழு ஆண்டுகளுக்கு முஸ்லீம்கள் விரகுகளாகப் பயன்படுத்துவார்கள்.

பின்னர் அல்லாஹ் மழையை அனுப்புவான். அனைத்து இல்லங்களையும் அம்மழை அடையும். பூமியை கண்ணாடிபோல கழுவிவிடும்.

பின்னர் பூமியை நோக்கி, ‘உன் கனிகளை முளைக்கச்செய்! உன்னிடம் இருந்த பரக்கத்தை (அபிவிருத்தியை) திரும்ப வழங்கு!’ என்று கூறப்படும்.

‘அந்த நாளில் ஒரே ஒரு மாதுளையை ஒரு கூட்டத்தினர் உண்பார்கள். அதன் தோலில் நிழல் பெறுவார்கள் (அந்த அளவு அது பெரிதாக இருக்கும்).

பாலிலும் அபிவிருத்தி (பரக்கத்) செய்யப்படும். ஒரு ஒட்டகத்தில் ஒரு முறை கறக்கும் பால் ஒரு பெரும் கூட்டத்தினருக்கு போதுமானதாக இருக்கும்.

ஒரு மாட்டில் ஒரு முறை கறக்கும் பால் ஒரு குலத்திற்குப் போதுமானதாக இருக்கும்…’ (அறிவிப்பாளர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)

‘என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ, அவன் மீது ஆணையாக! மரியமுடைய மகன் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்க இருக்கிறார். அவர் சிலுவையை முறிப்பார், பன்றியைக் கொல்வார். ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார். (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவுக்கு செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!’ (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி

– அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை)

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 8 = 2

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb