Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஆளில்லா வீடு!

Posted on September 17, 2010 by admin

ஆளில்லா வீடு!

பாதையிலிருந்து சற்று தள்ளி இருந்த ஆளில்லா வீட்டை கடந்து செல்கையில் ஏதோ ஓர் இனம்புரியா உணர்வினால் நிறுத்தப்பட்டேன். அந்த வீட்டை பார்க்கும் போது மனதில் ஏதேதோ எண்ணங்கள் அலைபாய ஆரம்பித்தன.

மனிதர்கள் காலி செய்துவிட்டுச் சென்ற வீடுகள் எனக்கு எப்பொழுதும் ஒரு சரித்திர குறிப்பாகவே தெரிகிறது. அந்த வீட்டை காலி செய்ததற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். சந்தோசமாக வேறு புது வீட்டிற்கு குடி புகுந்திருக்கலாம், பிரிய மனம் இல்லாமல் ஏதோ ஓர் நிர்பந்தத்தின் காரணமாகவும் சென்றிருக்கக் கூடும்.

அங்கு வாழ்ந்த மனிதர்கள் குடிபெயர்ந்து செல்லும் போது அந்த வீடு என்ன நினைத்திருக்கும். இத்தனை காலம் தன்னோடு வாழ்ந்த மனிதர்கள் தன்னை தனியாக விட்டுச் செல்வதை நினைத்து அழுதிருக்குமோ?

அந்த வீட்டு குழந்தை தன்னுள்ளே தவழும்போது எவ்வளவு மகிழ்ந்திருக்கும். அந்த குழந்தை மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதை பார்த்திருக்கும். எந்நேரமும் தன்னோடு விளையாடிய குழந்தை பள்ளியில் சேர்க்கப்பட்டு அது அழுதழுது கிளம்புகையில் வீடும் பிரிய மனமில்லாமல் பிரிந்து மாலை வேலைக்காக ஏங்கியிருக்குமோ?

ஒரே குடும்பத்தில் இருந்தாலும் அம்மனிதர்களின் வெவ்வேறு பழக்கவழக்கங்கள் அதற்கு அத்துபடியாக இருந்திருக்குமல்லவா? தனது சுவர்களில் எத்தனையோ ரகசியங்களை பாதுகாத்து வைத்திருக்கிறது, நாளடைவில் அவையும் மெல்லே மெல்லே அழிந்துவிடக்கூடும் சுவர்களோடு சேர்த்து. வீடுகளைப் பார்க்கும்போது அது தாய் போலவும் வசிப்பவர்கள் அதன் குழந்தைகள் போலவும்தான் தோன்றுகிறது.

கோழி தனது குஞ்சுகளை தன் சிறகிர்க்குள் வைத்துக்கொள்வது போல வீடு மனிதர்களை தன்னுள் அணைத்துக்கொள்கிறது. கொட்டும் மலையையும் காயும் வெயிலையும் தான் வாங்கிக்கொண்டு நம்மை காக்கிறது.

ஒரு குடும்பம் என்றாலே மனக்கண்முன் நம்மையும் அறியாமல் வருவது வீட்டின் தோற்றம், அப்படி குடும்பத்தின் அங்கமாய் இருக்கும் வீட்டை யார் இப்படி அனாதையாய் விட்டுச்சென்றது? தன்னை கவனிப்பார் யாரும் இல்லாததால் அங்கம் பழுதுபட்டு பரிதாபமாக காட்சியளித்தாலும் இன்னும் எந்த நம்பிக்கையில் யாரை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

ஒரு காலத்தில் எந்த ஒரு விசேஷ தினத்தன்றும் அவ்வீட்டு மனிதர்களோடு அந்த வீடும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். எத்தனையோ உறவினர்களின் வருகையை பார்த்து தானும் குதூகலித்திருந்த வீடு இன்று யாரும் இல்லாமல் தன்னந் தனியாய்.

வீடுகள் வெறும் கல் சுவர்கள் என்று யார் சொன்னது? அது எப்பொழுதும் நம்மோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறது, நாம்தான் அதை கவனிப்பதில்லை.

ஆட்கள் இல்லாமல் சிதைந்த வீடு தனக்குள்ளேயே பேசிக்கொள்கிறது கண்ணீர் சிந்தியபடி.

நன்றி பாலமுருகன், ஏகாந்த பூமி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

86 − 81 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb