Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ரமளான் ஒரு மாதத்தோடு விலகுவதற்கல்ல!

Posted on September 10, 2010 by admin

திருச்சி.A.M.அப்துல் காதிர் ஹஸனி M.A.,

அன்பு சகோதரனுக்கு ஒர் பெருநாள் செய்தி

மகிழ்ச்சி பொங்குக

பெருநாள் காலை

அன்பு சகோதரனே

உன்னை பார்க்க

ரொம்பவே வியப்பு எனக்கு

ரமளான் முழுவதும்

உனக்குள்

அத்தனை மாற்றம்

ஃபஜர் தொழுகைக்கு

கூட எழாமல்

போர்த்திக்கொண்டு உறங்கும் நீ

தஹஜ்ஜத் கூட

தவறவிட வில்லையே



சாப்பாடு

சற்று தாமதமானாலும்

கூப்பாடு போடும்

நீயா முப்பதுநாள்

நோன்பிருந்தாய்

நீ திருமறை ஒதி நான்

பார்த்ததில்லையே

பள்ளியிலேயே அமர்ந்து

ஒதிக்கொண்டிருந்தது நீதானா

வறியோர் தேடிவந்தால் ஆயிரம்

கேள்வி கேட்கும் நீயா

வாரி வழங்கினாய்

சிறிதாய்

சீண்டினாலும்

சீறிப்பாய்வாயே

நீயா சகிப்போடு

நடந்து கொண்டாய்….

திக்ரென்ன..

துஆவென்ன …

நம்பவே முடியவில்லை

என்னால்

இதுவெல்லாம்

நீதானா

எனக்கு தெரியும்..

யாரின் முகத்திற்காகவும்

இதை நீசெய்யவில்லை,

அல்லாஹ்வின்

அருளை நாடி மட்டுமே

செய்தாய்

அவனின் அன்பை தேடி

மட்டுமே செய்தாய்

மகத்தான

இரட்சகனின்மன்னிப்பை

தேடிமட்டுமே

செய்தாய்

நன்கு மாறியிருக்கிறாய்

நல்ல நிலைக்கு

தேறியிருக்கிறாய்

அன்பு சகோதரனே

ஈமான்?

தொழுகை?

நோன்பு?

கொடை?

நல்லமல்கள்

இதுவெல்லாம்

ஒருமாதத்திற்கு மட்டுமே உரியதல்ல

இறைவனுக்காக

எதையும் செய்ய

பழகுவற்குதான்

ரமளான்

ஒருமாதத்தோடு விலகுவதற்கல்ல

ரமளானில்

உன்னை பார்த்ததுபோன்று

எல்லோரும் பார்க்கவேண்டும்

பெருநாளோடு

முடியவில்லை

உனது கணக்கு

ரமளான்

நடத்திய பாடத்தை வாழ்வில்

இனி படிக்கத்தொடங்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

94 − 93 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb