Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அதிகம் தண்ணீர் குடித்தால் மரணம் நேரலாம்!

Posted on August 25, 2010 by admin

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் அது தண்ணீர் குடிக்கும் விஷயத்தில் கூட உண்மையாகியிருக்கிறது. அதிர்ச்சியை அள்ளித்தரும் இந்த உண்மைச் சம்பவம் யூ.கே யில் நடந்திருக்கிறது.

நல்ல ஆரோக்கியமான, திடகாத்திரமான, மருந்து மாத்திரைகளை நாடாத நாற்பத்து நான்கு வயதான ஆண்ட்ரூ தன்னுடைய ஈறுகளில் இருந்த வலியை மட்டுப்படுத்த குளிர்ந்த நீரை குடித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக எட்டு மணி நேரத்தில் அவர் குடித்த தண்ணீரின் அளவு சுமார் பத்து லிட்டர். தொடர்ந்து மூன்றாவது நாளாக எட்டு மணி நேரத்திற்கு சுமார் பத்து லிட்டர் எனுமளவில் தண்ணீர் குடித்ததால் அவருடைய உடலிலிருந்த உப்புச் சத்துக்கள் கரைந்து, அடர்த்தியிழந்து மரணமடைந்திருக்கிறார்.

அதிகப்படியான தண்ணீர் உடலின் அனைத்து செல்களையும், உறுப்புகளையும் வீக்கமடையச் செய்திருக்கின்றன. அது மூளைக்கு அதிகப்படியான அழுத்தத்தையும், வீக்கத்தையும் கொடுத்திருக்கிறது. அதுவே அவரது உயிரையும் பறித்திருக்கிறது.

மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது உடல் வலுவிழந்து அதிக போதையில் இருந்தவரைப் போல தள்ளாடியிருக்கிறார். முதலில் போதையில் இருக்கிறார் என மருத்துவர்கள் நினைத்திருக்கின்றனர், பின்னர் உண்மை உணர்ந்து சிகிச்சை அளிக்கத் துவங்கியிருக்கின்றனர். ஆனால் கூடவே மாரடைப்பும் வந்து அவரை மரணத்துக்குள் அமிழ்த்தியிருக்கிறது.

மனித உடலில் ஐம்பத்து ஐந்து முதல் எண்பது விழுக்காடு தண்ணீரால் ஆனது. மூளையின் எண்பத்து ஐந்து விழுக்காடும், குருதியின் எண்பது விழுக்காடும், தசைகளின் எழுபது விழுக்காடும் தண்ணீரால் ஆனதே. நாம் உண்ணும் உணவிலிருந்து உடல் சுமார் இருபது விழுக்காடு தண்ணீரைப் பெற்றுக் கொள்கிறது.

உடலுக்கு எவ்வளவு தேவையோ அதைத் தவிர அதிகமாய் தண்ணீர் உட்கொண்டால் தண்ணீர் கூட உயிருக்கு உலை வைக்கும் எனும் தகவல் மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது,

சரி, எவ்வளவு தண்ணீர் குடிப்பது நல்லது? எனும் கேள்விக்கு ஆரோக்கியமான மனிதன் ஒருநாள் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்.

அதிக வியர்வை சிந்தும் வேலை செய்பவர்கள் அதற்கேற்ப அதிக தண்ணீரைக் குடிக்கவேண்டும் என்பதும், விளையாட்டு வீரர்கள் வெறும் தண்ணீருக்குப் பதிலாக உப்பு, கார்போஹைட்ரேட் இவை கலந்த ஐசோடானிக் பானத்தை அருந்தலாம் என்பதும் மருத்துவர்களின் பரிந்துரையாகும்.

source: http://sirippu.wordpress.com/tag/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

51 + = 52

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb