Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

40 – ஹதீஸ் குத்ஸிகள் (4)

Posted on July 13, 2010July 2, 2021 by admin

31. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

மன்னிக்கப்படுவார்கள் (முன் சமுதாயத்தில்) ஒரு மனிதன் தன் மீது அநீதி இழைத்தவனாக பெரும் பாவங்கள் செய்து கொண்டிருந்தான். மரணம் அவனை நெருங்கிய போது, தனது மக்களை அழைத்து, நான் மரணமுற்றவுடன் என்னை எரித்து தூளாக்கி, பின்பு எனது சாம்பலை கடலிலே பரவலாக வீசி விடுங்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீது ஆணையாக எனது அதிபதியிடம் நான் சிக்கினால் அவன் வேறு யாரையும் தண்டிக்காத அளவிற்கு என்னை தண்டித்து விடுவான். என கூறினான். அவனது மக்களும் அவ்வாறே செய்தனர்.

பின்பு அல்லாஹ் பூமியிடம் நீ விழுங்கியதை வெளிக்கொணர்ந்து விடு எனக் கட்டளையிட்டான். அம்மனிதன் மீண்டும் உருவாகி நின்றான். அல்லாஹ் அம்மனிதரிடம் கேட்டான், நீ செய்த அச்செயலை செய்யும்படி உன்னை தூண்டியது எது? அதற்கு அம்மனிதன்; அதிபதியே! உன்மீது எனக்குப் பயம் இருந்ததினால் (அவ்வாறு நான் செய்தேன்) என்று பதிலளித்தான். இதன் காரணமாக அல்லாஹ் அம்மனிதனுக்கு மன்னிப்பளித்தான். (நூல் : புகாரி, முஸ்லிம்)

32. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் : (அல்லாஹ்வின்) அடியான் ஒருவன் பாவம் செய்துவிட்டு, அல்லாஹ்வே! என் பாவத்தை மன்னிப்பாயாக, என்று வேண்டினான்.

அல்லாஹ் : என் அடியான் பாவம் செய்து விட்டான். மேலும் அவன் பாவங்களை மன்னிக்ககூடிய அல்லது அவற்றுக்கு தண்டனை விதிக்ககூடிய ஒரு அதிபதியுள்ளான் என்பதை அறிந்துள்ளான். என்று சொன்னான்.

பிறகு அவன் மீண்டும் பாவம் செய்துவிட்டு என் அதிபதியே! என் பாவத்தை மன்னிப்பாயாக என வேண்டினான்.அல்லாஹ் என் அடியான் பாவம் செய்து விட்டான். மேலும் அவன் பாவங்களை மன்னிக்ககூடிய அல்லது அவற்றுக்கு தண்டனை விதிக்ககூடிய ஒரு அதிபதியுள்ளான் என்பதை அறிந்துள்ளான். என்று சொன்னான்.

பிறகு அவன் மீண்டும் பாவம் செய்துவிட்டு என் அதிபதியே! என் பாவத்தை மன்னிப்பாயாக என வேண்டினான்.அல்லாஹ் என் அடியான் பாவம் செய்து விட்டான். மேலும் அவன் பாவங்களை மன்னிக்ககூடிய அல்லது அவற்றுக்கு தண்டனை விதிக்ககூடிய ஒரு அதிபதியுள்ளான் என்பதை அறிந்துள்ளான். நீ விரும்பியதைச் செய் ஏனெனில் நான் உன்னை மன்னித்துவிட்டேன். எனக் கூறினான். (நூல் : புகாரி, முஸ்லிம்)

33. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் கூறினான் : ஆதமுடைய மகனே! என்னை அழைத்து என்மீது ஆதரவு வைத்து (பாவமன்னிப்பு) கேட்கும்போதெல்லாம் நீ செய்தவற்றை நான் பொருட்படுத்தாமல் உன்னை மன்னிப்பேன்.

ஆதமுடைய மகனே! உன்னுடைய பாவங்கள் வானிலுள்ள மேகங்களை அடையும்; அளவுக்கு அதிகமாக இருந்தாலும் என்னிடம் பாவமன்னிப்பை வேண்டினால்; நான் உன்னை மன்னிப்பேன்.

ஆதமுடைய மகனே! பூமியளவிற்கும் பெரும் பாவங்களைச் செய்து எனக்கு இணைவைக்காமல் இருக்கும் நிலையில் என்னை நீ சந்தித்தால் அதே அளவுக்கு நிச்சயமாக நான் உன்னை மன்னிப்பேன். (நூல் : முஸ்லிம்).

34. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நமது அதிபதி அல்லாஹ் ஒவ்வொரு (நாள்) இரவும், இரவில் இறுதியான மூன்றாவது பகுதி எஞ்சியிருக்கும் போது உலகத்தின் வானத்திற்கு இறங்கி சொல்கிறான்: என்னிடம் பிரார்த்தனை புரிபவர் யார்? நான் அவர் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்கிறேன். என்னிடம் கேட்பவர் யார்? நான் அவருக்கு கொடுக்கிறேன். என்னிடம் பிழைபொறுக்கத் தேடுபவர் யார்? நான் அவரை மன்னிக்கின்றேன். (நூல் : புகாரி, முஸ்லிம்)

35. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் சுவர்க்க வாசிகளை நோக்கி, சுவர்க்க வாசிகளே! என்றழைப்பான். அவர்கள், எங்கள் அதிபதியே! (இதோ) நாங்கள் வந்து விட்டோம். உனது திருப்திக்காகவே நாங்கள் உள்ளோம். நன்மைகள் யாவும் உந்தன் கரங்களிலேயே உள்ளன. என பதிலளிப்பார்கள். அல்லாஹ் நீங்கள் திருப்தியுடன் உள்ளீர்களா? என்று கேட்பான். அதற்கு சுவர்க்க வாசிகள்: உன்னுடைய படைப்புகளிலேயே யாருக்கும் கொடுக்காத ஒன்றை நீ எங்களுக்குத் தந்திருக்கும் போது, நாங்கள் எவ்வாறு திருப்தி கொள்ளாமல் இருக்க முடியும்.? என்று பதிலளிப்பார்கள்.

அல்லாஹ், இதனைவிட சிறந்த ஒன்றை நான் உங்களுக்கு கொடுக்கட்டுமா? என்று கேட்பான். அதற்கு சுவர்க்க வாசிகள்: அதிபதியே இதனைவிட சிறந்தது எது? என வினவுவார்கள். இதற்கு அல்லாஹ் நான் உங்கள் மீது என் திருப்பொருத்ததை இறக்குகிறேன். இதற்கு பிறகு என்றென்றும் உங்கள் மீது நான் கோபப்படவே மாட்டேன் என்று பதிலளித்தான். (நூல் : புகாரி, முஸ்லிம்)

36. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

சுவர்க்கமும், நரகமும் (ஒரு விஷயத்தில்) வாதித்துக் கொண்டன.

நரகம் : என்னிடமே அடக்கு முறையாளர்களும், ஆணவமுள்ளவர்களும் உள்ளனர்.

சுவர்க்கம் : என்னிடமே மக்களில் நலிந்தவர்களும், எளியவர்களும் உள்ளனர்.

அல்லாஹ் அவைகள் மத்தியில் (பின்வருமாறு) தீர்ப்பு வழங்கினான்.

மன்னிக்கப்படுவார்கள் (சுவர்க்கமே) நீ எனது கருனையின் வடிவான சுவர்க்கமாகும். உன் மூலமாக, நான் விரும்பியவர்களுக்கு இரக்கம் காட்டுகிறேன். (நரகமே) நீ எனது தன்டனiயின் வடிவமாகும். உன் மூலமாக நான் விரும்பியவர்களுக்கு தண்டனை விதிக்கிறேன். உங்கள் இருவரையும் நிரப்புவது எனது கடமையாகும். (நூல் : புகாரி, முஸ்லிம்)

37. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் சுவர்க்கத்தையும், நரகத்தையும் படைத்த போது, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சுவர்கத்திற்கு அனுப்பி சுவர்க்கவாசிகளுக்காக நான் என்ன தயாரித்து வைத்துள்ளேன் என்று பாரும் என்று கூறினான். எனவே ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்; சுவர்க்கத்தையும், அதில் வசிப்பவர்களுக்காக அல்லாஹ் தயாரித்துள்ளதையும் கண்டார்கள். சுவணத்தை கண்டபின் அல்லாஹ்விடம் திரும்பிச் சென்று உனது மேன்மையின் மீது ஆணையாக! இதைப்பற்றிக் கேள்விப்படும் யாரும் அதில் நுழையாமல் இருக்க மாட்டார்கள். என்று கூறினார்கள்.

உடனே அல்லாஹ் சுவனத்தை சுற்றி முட்டுகட்டைகளைப் போட்டான். ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மீண்டும் திரும்பிச் சென்று சுவர்க்க வாசிகளுக்கு நான் சித்தப்படுத்தி இருப்பதை பார்ப்பீராக என்றான். அவர் திரும்பிச் சென்றார். ஏராளமான முட்டுகட்டைகள் போடப்பட்டுள்ளதை கண்டு அவர் திரும்பினார். பின்பு அல்லாஹ்விடம். உனது கண்ணியத்தின் மீது ஆணையாக இதில் யாரும் நுழையமாட்டார்கள். என்று கூறினார். பின்பு அல்லாஹ் நரகத்தையும், அதில் நரகவாசிகளுக்காக தான் தயாரித்து வைத்துள்ளதையும் கண்டுவருமாறு கூறினான். ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நரகம் அடுக்கடுக்காக ஒன்றின் மேல் ஒன்றாக அமையப்பெற்றுள்ளதைக் கண்டார்கள். பிறகு அல்லாஹ்விடம் திரும்பி வந்து, உனது மேன்மையின் மீது ஆனையாக நரகைப் பற்றி கேள்விபடும் எவரும் அதில் நுழைய மாட்டார்கள். என்று கூறினார்கள். பின்பு அல்லாஹ் நரகை மன இ;ச்சைகளினால் சூழப்படுமாறு உத்தரவிட்டான். பிறகு அவன் ஜிப்ரயீலே அங்கு மீண்டும் செல்வீராக என்று சொன்னான். அவர் அங்கு திரும்பி சென்று வந்து, உனது மேன்மையின் மீது ஆணையாக அதில் நுழைவதிலிருந்து யாரும் தப்ப முடியாது என்று அஞ்சுகிறேன் என்று கூறினார்கள். (நூல் : திர்மிதி)

38. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்: எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக்; காதும் கேட்டிராத, எந்த மனித இருதயமும் எண்ணிப் பார்த்திராத (ஒன்றை) எனது நேரிய அடியார்களுக்கு நான் தயார்ப்படுத்தி வைத்துள்ளேன்.

நீங்கள் விரும்பினால் கீழ்கண்ட வசனத்தை ஓதுவீராக: ‘(சுவனவாசிகளுக்கு) கண்களைக் குளிரச்செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை எந்த ஆத்மாவும் அறியாது. (அல் குர்ஆன்-32:17)

மன்னிக்கப்படுவார்கள் (குறிப்பு-நீங்கள் விரும்பினால் என்ற வார்த்தை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உரியதாகும்.)

39. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இறுதித் தீர்ப்பு நாளில், இறை நம்பிக்கையாளர்கள் ஒன்று திரண்டு, நமக்காக நமது அதிபதியிடம் பரிந்துரைக்க (யாரிடமாவது) நாம் கேட்க வேண்டாமா? என்று கூறுவார்கள். எனவே ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து, நீங்கள் மனித இனத்தின் தந்தையாக உள்ளீர்கள். அல்லாஹ், உங்களை அவனது கரத்தினாலேயே படைத்து, அவனது வானவர்களை உங்களுக்கு தலைசாய்க்க வைத்;து, அனைத்து பொருட்களின் பெயர்களையும் உங்களுக்கு கற்றுக் கொடுத்தான். எனவே, நாங்கள் இருக்கும் இந்த இடத்தில் இருந்து எங்களை விடுவிப்பதற்காக, நீங்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்து பேசுங்கள் என சொல்வார்கள். அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான் உங்களுக்காக பரிந்துரைக்கும் நிலைமையில் இல்லை. என்று சொல்லிவிட்டு, தாம் செய்த தவறுகளைக் கூறி அதற்காக வெட்கப்பட்டு விட்டு நூஹ்விடம் செல்லுங்கள். ஏனெனில் உலக மக்களுக்கு அனுப்பப்பட்ட முதல் இறைத்தூதராக அவர் விளங்குகிறார். என்று அறிவுறுத்துவார்.

எனவே மக்கள் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து முறையிடுவார்கள். அவர் நான் உங்களுக்கு பரிந்துரைக்கும் நிலைமையில் இல்லை என்று சொல்லி விட்டு, தாம் தமது அதிபதியிடம் தமக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி வேண்டுகோள் வைத்ததை கூறி அதற்காக வெட்கப்பட்டு, கருணையாளனின் நண்பர் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் செல்லுங்கள். என்று கூறுவார்கள்.

எனவே இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மக்கள் வருவார்கள். அப்போது இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான் உங்களுக்கு பரிந்துரைக்கும் நிலையில் இல்லை. என்று சொல்லிவிட்டு, அல்லாஹ்விடம் உரையாடி, அல்லாஹ்வால் தவ்ராத் வேதம் கொடுக்கப்;பட்ட அடியார் மூஸாவிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள்.

எனவே மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மக்கள் வருவார்கள். அப்போது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான் உங்களுக்கு பரிந்துரைக்கும் நிலைமையில் இல்லை. என்று சொல்லி விட்டு, எந்த உயிரையும் கொலை செய்யாத, ஒரு உயிரை தாம் தவறாகக் கொன்றுவிட்டதை நினைவு கூர்ந்து அதற்காக அதிபதி முன் வெட்கப்படுவதாக சொல்லிவிட்டு,

அல்லாஹ்வின் தூதராகவும், அல்லாஹ்வின் அடியாராகவும், அவனது வார்த்தையாகவும், ரூஹாகவும் விளங்கும் ஈஸாவிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள். எனவே மக்கள் ஈஸாஅலைஹிஸ்ஸலாம் அவர்களிடம்; வருவார்கள்.

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், நான் உங்களுக்கு பரிந்துரைக்கும் நிலைமையில் இல்லை. என்று சொல்லி விட்டு, முன்பின் பாவங்கள் அனைத்தும் அல்லாஹ்வால் மண்ணிக்கப்பட்ட அடியாரான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் செல்லுங்கள் எனக் கூறுவார்கள்.

எனவே மக்கள் என்னிடம் வருவார்கள். நான் எனது அதிபதியைச் சந்திக்க அனுமதி கோருவேன். எனக்கு அனுமதியும் வழங்கப்படும். நான் என் அதிபதியைக் காணும்போது, அவன் முன் ஸஜ்தாவில் விழுந்துவிடுவேன். அவன் விரும்பும் நேரம் வரை என்னை அப்படியே விட்டுவிடுவான்.

பிறகு என்னிடம், உங்கள் தலையை உயர்த்துங்கள், உங்கள் வேண்டுகோளை முன் வையுங்கள். அது வழங்கப்படும். சொல்லுங்கள். அந்த பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும். என்று சொல்லப்படும். அப்பொழுது நான் தலையை உயர்த்துவேன். அவன் எனக்கு கற்றுக் கொடுத்த புகழும் முறைப்படி அல்லாஹ்வை புகழ்;வேன். பின் நான் மக்களுக்காக பரிந்து பேசுவேன். எத்தனை மக்கள் மன்னிக்கப்படுவார்கள்; என்பதற்கான வரம்பை அல்லாஹ் எனக்கு நிர்னயிப்பான். எனவே அவர்களை நான் சுவனத்தினுல் நுழைவிப்பேன்.

மீண்டும் நான் என் அதிபதியைக் கண்டு, முன்னர் செய்தது போல்; ஸஜ்தா செய்வேன். பின்பு நான் மக்களுக்காக பரிந்து பேசுவேன்.எத்தனை மக்கள் மன்னிக்கப்படுவார்கள்; என்பதற்கான வரம்பை அல்லாஹ் எனக்கு நிர்னயிப்பான். எனவே அவர்களை நான் சுவனத்தினுல் நுழைவிப்பேன்.

பின்பு நான் மூன்றாம் முறையாகவும், நான்காம் முறையாகவும் அல்லாஹ்விடம் திரும்பிச் செல்வேன். இப்போது நரக நெருப்பில், குர்ஆன் யாரை சுவர்க்கத்தை விட்டும் தடுத்து விட்டதோ, எவர் மீது நரகத்தில் தங்குவது நிரந்தரமாகி விட்டதோ, அவர்களைத் தவிர வேறு யாரும்; தங்கியிருக்க மாட்டார்கள். (நூல் : புகாரி, முஸ்லிம்)

40. மஸ்ரூக் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூதிடம் இந்த திருக்குர்ஆன் வசனத்தை பற்றிக் கேட்டோம்.

மன்னிக்கப்படுவார்கள் (விசுவாசிகளே!) அல்லாஹ்வின் பாதையில் (யுத்தம் செய்து) வெட்டப்பட்டோரை இறந்து விட்டவர்களென நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். அவர்கள் நிச்சயமாக உயிரோடு இருக்கிறார்கள். அல்லாஹ்வின் புரத்திலிருந்து அவர்களுக்கு உணவும் அளிக்கப்;பட்டு வருகிறது. (அல்குர்ஆன் 3:169)

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் பின் வருமாறு விளக்கம் சொன்னார்கள்.

நாங்கள் இந்த வசனத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டோம். அவர்கள் சொன்னார்கள் இறைவழியில் வீர மரணமடைந்தவர்களின் ஆன்மாக்கள், பச்சைப் பறவைகளினுள் இருக்கும். அப்பறவைகளின் கூடுகள் அர்ஷில் தொங்கவிடப்பட்டுள்ளன. சுவாக்கமெங்கும் அப்பறவைகள் சுதந்திரமாக பறந்து திரிகின்றன. பின்னர் தங்கள் கூடுகளில் தஞ்சமடைகின்றன.

இறை வழியில் வீர மரணமடைந்த அவர்களின் பக்கம் அல்லாஹ் தன் பார்வையை செலுத்தி, நீங்கள் எதையாவது விரும்புகிறீர்களா? என்று கேட்பான். இதற்கு ஷஹீதுகளாகிய அவர்களின் ஆன்மாக்கள், சுவர்கத்தில் எங்கள் விருப்பம்போல் எல்லா இடங்களுக்கும் சுதந்திரமாக பறந்து செல்லும் நாங்கள் (இதனைவிட) வேறு எதனை விரும்புவோம்.? என்று பதிலுரைப்பார்கள். அல்லாஹ் இவ்வாறு மூன்று முறை அவர்களிடம் கேட்பான். (மீண்டும் ஒருமுறை) இவ்வாறு கேட்கப்படுவதிலிருந்து தாங்கள் தப்பிக்க இயலாது என்று உணர்ந்த ஷஹீதுகள், ‘எங்கள் அதிபதியே! நாங்கள் மீண்டும் போராடி வீர மரணமடைவதற்காக எங்கள் ஆன்மாக்களை, பூத உடலுக்குள் செலுத்திவிடு. என்பார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஒன்றும் தேவைப்படவில்லை என்பதைக் கண்டு அவர்களை (பறவைகளாகவே) விட்டுவிடுவான்.’ (நூல் : முஸ்லிம்) 

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

86 − = 84

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb