Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சிறுபான்மை மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை

Posted on June 21, 2010 by admin

என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை

சென்னை: என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிக்கும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்க உள்ளது.

இதுகுறித்து சிறுபான்மையினர் நல ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கல்வி உதவித்தொகை

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை கடந்த 2007-ஆம் ஆண்டில் இருந்து சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் முதலிய மதத்தை சேர்ந்த பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருக்கவேண்டும்.

குறைந்த பட்சம் பிளஸ்-2 தேர்வில் 50 சதவீத மார்க் எடுத்திருக்க வேண்டும்.

ரூ.20 ஆயிரம்

படிப்பு கட்டணம் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் மற்றும் விடுதி கட்டணம் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விடுதியில் இல்லாத மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.500 கொடுக்கப்படும்.

கடந்த ஆண்டு விண்ணப்பித்த மாணவர்கள் ஜுலை 26-ந்தேதிக்குள்ளும், புதிய மாணவர்கள் ஆகஸ்டு 10-ந்தேதிக்குள்ளும் அவர்கள் சேர்ந்துள்ள கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கவேண்டும்.

கல்வி நிலையங்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து விவரத்துடன் சிறுபான்மையினர் நல ஆணையர், 807, 5-வது தளம், அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு ஜுலை 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். அதே முகவரிக்கு புதிய விண்ணப்பங்களை கல்விநிலையங்கள் 13-8-2010 தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.

இதுகுறித்த விவரங்களை www.minorityaffairs.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

posted by: Muduvai Hidayath

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb