Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இந்தியாவுக்கு சாதகமான இரு செய்திகள்

Posted on June 16, 2010 by admin

o  யூரோ மதிப்பு வீழ்ச்சியால் இந்தியாவில் முதலீடு அதிகரிக்கும்

o  ஐ டி துறையில் இந்த ஆண்டு 2 லட்சம் பேருக்கு வேலை

யூரோ மதிப்பு வீழ்ச்சியால் இந்தியாவில் முதலீடு அதிகரிக்கும்!-ரிசர்வ் வங்கி

மும்பை: யூரோ நாணய மதிப்பு வீழ்ச்சி மற்றும் யூரோ வலய நாடுகளின் பொருளாதாரக நெருக்கடி, இந்தியாவில் அதிக முதலீடுகளைக் கொண்டு வந்து சேர்க்கும் என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் உஷா தோரட் தெரிவித்தார்.

இதுபற்றி மேலும் கூறியதாவது: “எங்கே அதிக பலன் கிடைக்கிறதோ அந்த இடத்தைத் தேடிப் போவது பணத்தின் இயல்பு. உலகில் நிச்சயமற்ற தன்மை கொண்ட நாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் இந்தியாவைத்தேடி வரக் காரணம், இங்கு அவர்களின் முதலீட்டுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான். காரணம் எத்தனை பெரிய நெருக்கடியையும் இந்தியப் பொருளாதாரம் வெற்றிகரமாக சமாளித்துள்ளது.

இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல முதலீட்டாளர்கள் இந்தியாவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே 5 பில்லியன் டாலர் முதலீடு பங்கு வர்த்தகம் மூலம் இந்தியாவுக்குள் வந்துள்ளது. இந்தியா, சீனா நாடுகளின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது என்றார் அவர்.

ஐ டி துறையில் இந்த ஆண்டு 2 லட்சம் பேருக்கு வேலை

சென்னை: இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்த ஆண்டில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தலைவரும் இன்ஃபோஸிஸ் தலைமை செயல் அலுவலருமான எஸ். கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ”தமிழகத்தில் ஆட்டோமொபைல் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் வளர்ச்சி பெற்றுள்ளன.

தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகளவில் இருந்த பின்னடைவு நிலை மாறி, இப்போது மீட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தத் துறையில் 10 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் இப்போது ஐ.டி. துறை சார்ந்த நிறுவனங்களில் பலருக்கு வேலை கிடைத்து வருகிறது.

நாட்டில் இந்த நிதியாண்டில் ஐ.டி. துறையில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மட்டும் நடப்பு நிதி ஆண்டில் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

விவசாயத் துறையில் அதிக உற்பத்திக்கு… தரமான உரம் உள்ளிட்ட இடுபொருள்கள், சிறந்த நவீனத் தொழில்நுட்பம் மற்றும் காலத்துக்கு ஏற்ற பயிரைத் தேர்வு செய்வதன் மூலம் விவசாயத் துறையில் அதிக உற்பத்தியை எட்ட முடியும்.

தமிழகத்தில் ரயில், சாலை உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளுக்கான கட்டமைப்புகளை உருவாக்க சிஐஐ முக்கிய பங்காற்றுகிறது. சூரிய சக்தி மூலம் மின்னுற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை- பெங்களூர் இடையே தொழில் பிரகாரம் (இண்டஸ்ட்ரியல் காரிடார்) அமைக்கும் திட்டத்தையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் கோபாலகிருஷ்ணன்.

சிஐஐ தமிழ்நாடு பிரிவின் தலைவர் நந்தினி கூறியதாவது:

தமிழகத்தில் உயிரி தொழில்நுட்ப (பயோ டெக்னாலஜி) துறை வளர்ச்சி பெற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக சென்னையில், உயிரி தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவம் உள்ளிட்ட இதர துறைகள் வளர்ச்சி பெறவும் சாதகமான வாய்ப்புகள் உள்ளன.

சென்னை தரமணியில் தமிழக அரசு சார்பில் உயிரி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் டைசல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. உயிரி தொழில்நுட்பம் சார்ந்த தொழில் வளர்ச்சி குறித்து சிஐஐ ஆய்வு செய்து விரிவான அறிக்கையை அரசுக்கு விரைவில் சமர்ப்பிக்கும். தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேலும் சிறப்பாக செயல்படும் வகையில் அந்தக் குழுக்களுக்கு சிஐஐ பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது என்றார் நந்தினி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

85 − 81 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb