Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அருமை அப்பா!

Posted on June 15, 2010 by admin

அருமை அப்பா!

I miss u daddy

எப்படி எப்படி  எல்லாமோ

தன் பாசம்  உணர்த்துவாள் அம்மா

ஒரேயொரு  கைஅழுத்தத்தில்

எல்லாமே  உணர்த்துவார்  அப்பா…

 

முன்னால்  சொன்னதில்லை

பிறர் சொல்லித்தான்  கேட்டிருக்கிறேன்

என்னைப்  பற்றி பெருமையாக

அப்பா  பேசிக்கொண்டிருந்ததை…

 

அம்மா  எத்தனையோ முறை

திட்டினாலும்  உறைத்ததில்லை

உடனே  உறைத்திருக்கிறது  என்றேனும்

அப்பா  முகம் வாடும் போது

 

உன் அப்பா  எவ்வளவு உற்சாகமாக

இருக்கிறார் தெரியுமா  என என்

நண்பர்கள்  என்னிடமே சொல்லும்

போதுதான் எனக்குத்  தெரிந்தது

எத்தனை பேருக்குக்  கிடைக்காத

தந்தை  எனக்கு மட்டும் என…

 

சிறுவயதில்  என் கைப்பிடித்து

நடைபயில  சொல்லிக்கொடுத்த  அப்பா

என் கரம் பிடித்து  நடந்த போது

என்ன நினைத்திருப்பார்..?

 

லேசாக என் கால்  தடுமாறினாலும்

பதறும் அப்பா  இன்று நான்

தடுமாறிய போது  பதறாமல் இருக்கிறார்

மீளா துயிலில்…

 

அம்மா செல்லமா

அப்பா செல்லமா

என கேட்டபோதெல்லாம்

பெருமையாகச் சொல்லி

இருக்கிறேன்

அம்மா செல்லமான

அப்பா செல்லம் என

இன்று

அப்பா சென்ற பின்னர்

நான் யார் செல்லம்..?

 

எத்தனையோ பேர்  நான் இருக்கிறேன்

எனச் சொன்னாலும் அப்பாவை போல்

யார் இருக்க முடியும்..?

 

சொல்லிக்  கொடுத்ததில்லை

திட்டியதும் இல்லை

இல்லை என்றும்  சொன்னதுமில்லை

வேண்டாம் எனக்  கூறியதும் இல்லை

இருந்தும் ஏதோ  ஒன்றினால்

கட்டுப்படுத்தியது  அப்பாவின் அன்பு

 

நானும் காட்டியதில்லை  அவரும்

காட்டியதில்லை  எங்கள் பாசத்தை…

இருந்தும் காட்டிக்  கொடுத்த கண்ணீரைத்

துடைக்க இன்று  அப்பாவும் இல்லை..

 

அம்மாவிடம்  பாசத்தையும்

அப்பாவிடம்  நேசத்தையும்

இன்றே உணர்த்துங்கள்

சில நாளைகள்

இல்லாமலும் போகலாம்…

 

Regards,

Kadhar Sulthan,

United Arabic emirates

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 45 = 48

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb